Skip to main content

கறுப்புச் சட்டை காதல்

நேரடியாகவும் மறைமுகமாகவும் எத்தனையோ முறை அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளான் ராஜா. ஆனால் ஒருபோதும் பிரியா அதற்கு பதில் அளித்ததே இல்லை. புரிந்தாலும் புரியாதது போல் அப்போதைக்கு சமாளித்து விட்டு வேறு பேச்சுக்கு சென்று விடுவாள்.

எப்படியோ அவள் தன்னை மறுக்கவும் இல்லை வெறுக்கவும் இல்லை என்று மனதை தேற்றிக் கொள்வான் ராஜா. என்றோ ஒரு நாள் தன்னை ஏற்றுக் கொள்வாள் தன் காதலைப் புரிந்து கொள்வாள் என்று ராஜாவும் காத்திருந்தான்.

ராஜா கறுப்புச் சட்டை விரும்பி அணிபவன். பார்க்கும் போதெல்லாம் கறுப்புச் சட்டையையே அணிவதற்காகப் பிரியா அவனைத் திட்டிக் கொண்டே இருப்பாள். ஆனால் அவன் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் இருந்து விடுவான்.

அன்று ராஜாவின் பிறந்தநாள். இருவரும் சந்திப்பதற்காக ஏற்கனவே பேசி இருந்தனர்.

பிறந்தநாள் அன்றாவது கறுப்புச் சட்டை அணிய வேண்டாம் என்று பிரியா சொல்லி இருந்தாள். ஆனால் ராஜா அதைப் பொருட்படுத்தவில்லை.

வழக்கம்போல கறுப்புச் சட்டையை மாட்டிக் கொண்டு இன்று எப்படியாவது அவளது முடிவைக் கேட்டு விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கிளம்பினான்

சிரித்த முகமாக நின்றுக் கொண்டிருந்தப் பிரியா, இவன் கறுப்புச் சட்டை அணிந்து வருவதைப் பார்த்து முகம் சுளித்தாள். இத்தனை முறை சொல்லியும் அவன் கறுப்பு அணிந்து வருவதைப் பார்த்து கோபம் கொண்டாள்.

இந்தக் கோபத்தை சிறிதும் எதிர்பாராத ராஜா, அமைதியாக அவளைப் பார்த்தவாறே நின்றுக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்கு இருவரின் கண்கள் மட்டுமே சந்தித்துக் கொண்டன. ஆனால் பேசிக் கொள்ளவில்லை. அந்த அமைதியை மூட்டைக் கட்ட நினைத்த ராஜா, "இன்னும் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லவில்லையே" என்றான்..

கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்த பிரியா, நீ கறுப்பு மட்டும்தான் அணிவாய் என்றால், துணித் துவைக்க தனியாக ஆள் வைத்துக் கொள்ளலாம். கல்யாணத்திற்குப் பிறகு உன் கறுப்புச் சட்டைகளை என்னால் துவைத்துக் கொண்டிருக்க முடியாது என்றுச் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்து விட்டாள்.

அதிர்ச்சியில் உறைந்துப் போயிருந்த ராஜா, இயல்பு நிலைக்கு வர சில கனங்கள் ஆயின.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...