Skip to main content

லஜ்ஜா அவமானம்

இந்தியாவில் 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயம் பங்களாதேஷத்தில் இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் தொகுப்பு தான் லஜ்ஜா.

தஸ்லிமா நஸ்ரினால் எழுதப்பட்டு, கே.ஜி.ஜவர்லால் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

உண்மை அல்லது உண்மைக்கு அருகாமையான விடயங்களை கதையின் பாத்திரங்களும் மூலம் பதிமூன்று நாட்களில் முடியும் நாவலாக அமைத்திருக்கிறார் தஸ்லீமா நஸ்ரின்.

இந்துக்கள் என்ற போர்வையில் ஒரு சிலரால் அல்லது சில அமைப்பால் செய்யப்பட்ட ஒரு செயல், இந்துக்கள் சிறுபான்மையாக உள்ள ஒரு தேசத்தில் எந்த அளவுக்கு கொடுமைகளை, மதம் என்ற பெயரில் வக்கிரங்களை அவர்களுக்கு இழைத்துள்ளது என்பதை ஆழமாக விவரிக்கின்றது.

மதச்சார்பற்ற நாடு என்று வெளியில் மார்த்தட்டிக் கொண்ட தேசம் (பங்களாதேஷ்), அரசியல் கட்சிகளால் எப்படி இஸ்லாமிய தேசமாக உருமாற்றப்பட்டது அதனால் மற்ற மதத்தினர்(குறிப்பாக இந்துக்கள்) மேற்கொண்ட இடப்பெயர்வு ஆகியவற்றை புள்ளி விவரங்களுடன் பதிவு செய்கின்றது.

ஒருங்கிணைந்த வங்காளிகளாக பங்களாதேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடிய மக்களை, சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லீம் இந்து என்று மதமென்ற மண்ணுக்குள் புதைத்து விட்ட சுயலாப அரசியலை தோலுரித்து காட்டுகின்றது.

ஒரு நாட்டில் உள்ள இந்துக்கள் மசூதியை இடித்துவிட்டதால், தங்கள் நாட்டிலுள்ள இந்துக்களின் வீட்டை சூறையாடுவதும், சொத்தை அபகரிப்பதும், பெண்களை கற்பழிப்பதும் என நிகழும் வன்முறையாட்டங்களால் மதச்சார்பில்லாத ஒருவன் மதவெறியனாகத் துணிவதை சுரஞ்சன் பாத்திரம் ஆழமாக பதிவுச் செய்துள்ளது.

இளம் வயதில் வங்காளியாக பங்களாதேசத்தின் சுதந்திரத்திற்குப் போராடிய, மதவேறுபாடில்லாமல் எச்சூழ்நிலையிலும் தாய்நாட்டை வெளியேற நினைக்காத, தாய்நாட்டை உண்மையாக நேசிக்கும் ஒரு இந்து, தன் மகளை இழந்தப் பின் நாட்டை விட்டு வெளியேறும் முடிவுடன் நாவல் முடிகிறது.

நாவலை முடிக்கும் தருணம் மதச்சார்பின்மை, மதத்தின் பெயரால் நடக்கும் அரசியல், ஓட்டிற்காக செயற்கையாக உருவாக்கப்படும் மதக் கலவரங்கள் பற்றிய புரிதலுடன் கூடிய தெளிவு பிறக்கும்.

கார்த்திக் பிரகாசம்...


Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...