இன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் பயன்படுத்த முடியாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் "ஊழலுக்காக எதிராக நாம் எடுக்கும் முதல் முதல் போராட்டம் இது" என்று கூறியுள்ளார்.
நள்ளிரவு முதல் நேரடியாகப் பயன்படுத்த முடியாதே தவிர மருத்துவமனைகள், இடுகாடுகள் மற்றும் எரிபொருள் நிலையங்களில் 500, 1000 தாள்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும் டிசம்பர் 31 வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென்று இவ்வாறு அமல்படுத்தியதில் பாதகங்கள் பல இருந்தாலும் சில முக்கிய சாதகமான விடயங்களையும் நாம் கவனம் கொள்ள வேண்டியுள்ளது.
பணத்தை பதுக்கி வைத்திருக்கும் பண முதலைகள் பலர், இப்பொழுது கண்டிப்பாகத் தங்கள் பணத்தை வெளியே எடுத்தே வேண்டும். அவ்வளவு பெரிய தொகையை மாற்ற வேண்டும் என்றால் கண்டிப்பாக வங்கிகளின் மூலம் தான் மாற்ற முடியும். எனவே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கருப்பு பணங்கள் வங்கிக்கு மாற்றப்படும் போது முறையான வெள்ளை பணமாக மாறும்.
வரி காட்டாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அத்தகையத் தொகைகளுக்கு அவர்களாகவே முன்வந்து வரிக்கட்டும் சூழல் உண்டாக்கும்.
அதே போல புழக்கத்தில் இருக்கும் கள்ளநோட்டுகளை ஒழிக்க மற்றும் கட்டுப்படுத்த இது மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும்.
தாள்களை மாற்றிக் கொள்ள டிசம்பர் 31வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதால் நல்ல முறையில் சம்பாதித்த, முறையான கணக்குகளுடன் இருக்கும் பணத்தை எவ்வித சிக்கலுமின்றி நாம் மாற்றி கொள்ள முடியும். அதில் எந்தவிதமான பிரச்னையுமில்லை.
நாளையும் நாளை மறுநாளும் ஏ.டி.ம் இயங்காது என்பதால் சில அவசர பிரச்சனைகளில் சிக்க நேரிடலாம். ஆனால் ஒருவேளை ஏ.டி.ம் இயங்கும் என்று அறிவித்திருந்தால் என்னவாகும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இப்பொழுதுள்ள பெரும்பாலான ஏ.டி.ம் இயங்கிகளில் பணத்தைப் பெறுவது மட்டுமல்ல உள்ளீடும் செய்யலாம். இதைப் பயன்படுத்தி சிலர் தப்பிக்க வாய்ப்புள்ளது.
எனவே, சில நாட்களுக்கு பெரும் சிரமமென நினைக்காமல் குறையெனக் கூறி கோபப்படாமல், இந்த வாய்ப்பை நாம் நம் நாட்டைச் சிறிதேனும் சுத்தம் செய்ய கிடைத்த வாய்ப்பாகக் கருத வேண்டும். உண்மையில் இது தான் "தூய்மையான இந்தியா" திட்டம்.
கார்த்திக் பிரகாசம்...
நள்ளிரவு முதல் நேரடியாகப் பயன்படுத்த முடியாதே தவிர மருத்துவமனைகள், இடுகாடுகள் மற்றும் எரிபொருள் நிலையங்களில் 500, 1000 தாள்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும் டிசம்பர் 31 வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென்று இவ்வாறு அமல்படுத்தியதில் பாதகங்கள் பல இருந்தாலும் சில முக்கிய சாதகமான விடயங்களையும் நாம் கவனம் கொள்ள வேண்டியுள்ளது.
பணத்தை பதுக்கி வைத்திருக்கும் பண முதலைகள் பலர், இப்பொழுது கண்டிப்பாகத் தங்கள் பணத்தை வெளியே எடுத்தே வேண்டும். அவ்வளவு பெரிய தொகையை மாற்ற வேண்டும் என்றால் கண்டிப்பாக வங்கிகளின் மூலம் தான் மாற்ற முடியும். எனவே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கருப்பு பணங்கள் வங்கிக்கு மாற்றப்படும் போது முறையான வெள்ளை பணமாக மாறும்.
வரி காட்டாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அத்தகையத் தொகைகளுக்கு அவர்களாகவே முன்வந்து வரிக்கட்டும் சூழல் உண்டாக்கும்.
அதே போல புழக்கத்தில் இருக்கும் கள்ளநோட்டுகளை ஒழிக்க மற்றும் கட்டுப்படுத்த இது மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும்.
தாள்களை மாற்றிக் கொள்ள டிசம்பர் 31வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதால் நல்ல முறையில் சம்பாதித்த, முறையான கணக்குகளுடன் இருக்கும் பணத்தை எவ்வித சிக்கலுமின்றி நாம் மாற்றி கொள்ள முடியும். அதில் எந்தவிதமான பிரச்னையுமில்லை.
நாளையும் நாளை மறுநாளும் ஏ.டி.ம் இயங்காது என்பதால் சில அவசர பிரச்சனைகளில் சிக்க நேரிடலாம். ஆனால் ஒருவேளை ஏ.டி.ம் இயங்கும் என்று அறிவித்திருந்தால் என்னவாகும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இப்பொழுதுள்ள பெரும்பாலான ஏ.டி.ம் இயங்கிகளில் பணத்தைப் பெறுவது மட்டுமல்ல உள்ளீடும் செய்யலாம். இதைப் பயன்படுத்தி சிலர் தப்பிக்க வாய்ப்புள்ளது.
மோடியை ஆதரித்தாலும் சரி எதிர்த்தாலும் சரி, கண்டிப்பாக இது அவரின் துணிச்சலான முடிவு என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.
எனவே, சில நாட்களுக்கு பெரும் சிரமமென நினைக்காமல் குறையெனக் கூறி கோபப்படாமல், இந்த வாய்ப்பை நாம் நம் நாட்டைச் சிறிதேனும் சுத்தம் செய்ய கிடைத்த வாய்ப்பாகக் கருத வேண்டும். உண்மையில் இது தான் "தூய்மையான இந்தியா" திட்டம்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment