Skip to main content

தூய்மையான இந்தியா

இன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் பயன்படுத்த முடியாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் "ஊழலுக்காக எதிராக நாம் எடுக்கும் முதல் முதல் போராட்டம் இது" என்று கூறியுள்ளார்.

நள்ளிரவு முதல் நேரடியாகப் பயன்படுத்த முடியாதே தவிர மருத்துவமனைகள், இடுகாடுகள் மற்றும் எரிபொருள் நிலையங்களில் 500, 1000 தாள்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும் டிசம்பர் 31 வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென்று இவ்வாறு அமல்படுத்தியதில் பாதகங்கள் பல இருந்தாலும் சில முக்கிய சாதகமான விடயங்களையும் நாம் கவனம் கொள்ள வேண்டியுள்ளது.

பணத்தை பதுக்கி வைத்திருக்கும் பண முதலைகள் பலர், இப்பொழுது கண்டிப்பாகத் தங்கள் பணத்தை வெளியே எடுத்தே வேண்டும். அவ்வளவு பெரிய தொகையை மாற்ற வேண்டும் என்றால் கண்டிப்பாக வங்கிகளின் மூலம் தான் மாற்ற முடியும். எனவே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கருப்பு பணங்கள் வங்கிக்கு மாற்றப்படும் போது முறையான வெள்ளை பணமாக மாறும்.

வரி காட்டாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அத்தகையத் தொகைகளுக்கு அவர்களாகவே முன்வந்து வரிக்கட்டும் சூழல் உண்டாக்கும்.

அதே போல புழக்கத்தில் இருக்கும் கள்ளநோட்டுகளை ஒழிக்க மற்றும் கட்டுப்படுத்த இது மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும்.

தாள்களை மாற்றிக் கொள்ள டிசம்பர் 31வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதால் நல்ல முறையில் சம்பாதித்த, முறையான கணக்குகளுடன் இருக்கும் பணத்தை எவ்வித சிக்கலுமின்றி நாம் மாற்றி கொள்ள முடியும். அதில் எந்தவிதமான பிரச்னையுமில்லை.

நாளையும் நாளை மறுநாளும் ஏ.டி.ம் இயங்காது என்பதால் சில அவசர பிரச்சனைகளில் சிக்க நேரிடலாம். ஆனால் ஒருவேளை ஏ.டி.ம் இயங்கும் என்று அறிவித்திருந்தால் என்னவாகும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இப்பொழுதுள்ள பெரும்பாலான ஏ.டி.ம் இயங்கிகளில் பணத்தைப் பெறுவது மட்டுமல்ல உள்ளீடும் செய்யலாம். இதைப் பயன்படுத்தி சிலர் தப்பிக்க வாய்ப்புள்ளது. 

மோடியை ஆதரித்தாலும் சரி எதிர்த்தாலும் சரி, கண்டிப்பாக இது அவரின் துணிச்சலான முடிவு என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். 

எனவே, சில நாட்களுக்கு பெரும் சிரமமென நினைக்காமல் குறையெனக் கூறி கோபப்படாமல், இந்த வாய்ப்பை நாம் நம் நாட்டைச் சிறிதேனும் சுத்தம் செய்ய கிடைத்த வாய்ப்பாகக் கருத வேண்டும். உண்மையில் இது தான் "தூய்மையான இந்தியா" திட்டம்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...