Skip to main content
"உனக்கு எவ்வளவோ பரவால்ல கார்த்தி. சென்னைக்குப் போய் அஞ்சாறு வருஷத்துக்கு மேல ஆச்சு ஆனாலும் உன் தலைல இன்னும் "முடி" நெறைய கெடக்கு. என் பையனுக்கெல்லாம் சென்னைக்குப் போன ஒரு வருஷத்துலேயே தலைலயிருந்த மொத்தமும் கொட்டிப் போயிடுச்சு. என் பையனுக்கு மட்டும் இல்ல அவன்கூட இருந்த எல்லாத்துக்குமே கொட்டிப் போச்சு. கல்யாணத்தப்ப வெறும் தலையோட தான் நின்னானுங்க. நீயாவது கவனமா முடி'ய பாத்துக்க இல்லன்னா ரொம்ப கஷ்டம். 'முடி'யிருந்தா தான் சீக்கிரம் கல்யாணம் முடியும்'..." கையில் டீயைக் கொடுத்துவிட்டு கடகடவென்று பேசி முடித்தார் அந்தப் பெரியம்மா. 

டீக் குடிக்கத் தொடங்கினேன். டீ உள்ளிறங்க இறங்க சிந்தனைகள் மெள்ள மெள்ள வெளிவந்தன. 

 பையனின் பழக்க வழக்கம், குணம், வேலை, சம்பளம், சொத்து மதிப்பு ஆகியவற்றுடன் "தலையில் முடியிருக்க வேண்டும்" என்பதும் கல்யாணத்திற்கான மிக முக்கியமானதாகக் கருதப்படும் அடிப்படை எதிர்பார்ப்புகளில் ஒன்றாகிவிட்டது போலிருக்கிறது. 

அதே போல, "சென்னைக்குப் போனால் ஏதாவது ஒரு வேலைச் செய்து வயிற்றைக் கழுவிக் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம்" என்று நம் ஊர் பகுதிகளில் நிலவும் ஒரு நம்பிக்கையைப் போலவே, சென்னைக்கு வேலைக்குப் போனால் என்ன முயற்சி செய்தாலும் தலையிலுள்ள முடியை காப்பாற்ற முடியாது கண்டிப்பாகக் கொட்டிவிடும்"  என்ற வலுவான நம்பிக்கையும் ஆழமாக வேரூன்றி இருக்கும் போலிருக்கிறது.

டீயைக் குடித்துவிட்டு புறப்பட முற்படும் போது எதிரில் மாட்டியிருந்த கண்ணாடியில் முகத்தைச் சற்று உற்றுப் பார்த்தேன். தலையில் நரை முடிகள் படர ஆரம்பித்திருந்தன.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...