இரயில் மொரப்பூரில் நின்றது.
"வேர்க்கடல.. வேர்க்கடல"
'ஏய்.. நீ இந்தப்பக்கம் ஏறீட்டியா...' ஏறிய பெண்களில் ஒருத்திக் கேட்டாள்.
"ஆமா. உனக்கென்ன.?" இவள் கேள்விக் கேட்டப் பெண்ணைப் பார்த்து சொன்னாள்.
"உனக்கென்னவா..! பக்கத்து பொட்டியில உன் புருஷன் ஏறிட்டான்னு இந்தப் பொட்டிக்கு அவசர அவசரமா ஓடிவந்தா இதுல நீ ஏறிக்கிட்ட.. ஏன் நீயும் உன் புருஷனும் மட்டும்தான் பொழைக்கனுமா நாங்கயெல்லாம் பொழைக்கவே கூடாதா." இவள் முந்தானையை இழுத்து இடுப்பில் செருகி கோபத்தில் வரிந்து கட்டினாள்.
'அடியே.. ரொம்ப பேசுனினா ஓடுற வண்டில இருந்து தள்ளி விட்ருவன் பாத்துக்க''. அவளும் பதிலுக்கு எகிறினாள். சண்டைப் போட்டு கொண்டிருக்கும் அதே நேரம் வியாபாரத்திலும் இருவரும் மும்மரமாக இருந்தனர்.
'தள்ளுவ தள்ளுவ. நீ உதைக்கிற வரைக்கும் நான் இடுப்ப காட்டிட்டு சும்மா நிப்பன்னு நினைச்சியா. உன்னையும் இழுத்துவிடமாட்டேன்....'
சுவாரசியமாய் இருந்த சண்டை விபரிதமாய் மாறுவது போல தோன்றியதால் பயணிகள் குறுக்கிட்டு சண்டையை நிறுத்த முயன்றனர்.
"அடியே இங்க பாருடி நாம ரெண்டு பேரும் சண்ட போட்டுக்குறோமாமா" என்று ஒரு கையை இடுப்பிலும் மற்றொரு கையைக் கன்னத்திலும் அழுத்தியவாறு சண்டையைத் தொடங்கியவள் சிரித்தாள்.
'அதான்ன. நாம எப்பச் சண்ட போட்டோம்' என்று இன்னொருத்தியும் இளக்காரமாகச் சிரித்தாள்.
கேள்விக் கேட்டவர் ஒன்றும் புரியாமல் முழித்தார்.
"ஏக்கா.. இன்னைக்கு ஜோலார்ப் பேட்டை வண்டி அரமணி நேரம் லேட்டாம்மே" என்றாள் ஒருத்தி.
"ஆமாக்கா. அப்ப நாம பொம்மிடில எறங்கிருவோமா" என்றாள் இன்னொருத்தி.
பொம்மிடி வந்ததும் "வேர்க்கடல... வேர்க்கடல..." என்றுக் கூவிக் கொண்டே அவர்கள் அடுத்த வண்டியை நோக்கிச் சென்றுவிட்டனர்.
பெட்டியில் இருந்தவர்கள் வேர்க்கடலையைப் பார்த்துக் குழம்பிக் கொண்டிருந்தனர்.
"வேர்க்கடல.. வேர்க்கடல"
வண்டி நின்றதும் இரு பெண்கள் அவித்த வேர்க்கடலைகளைப் பைகளில் அடைத்துக் கொண்டு, "வேர்க்கடல வேர்க்கடல..!" என்று கூவியபடியே இரயில் பெட்டியின் இருபுறமும் ஏறினர்.
'ஏய்.. நீ இந்தப்பக்கம் ஏறீட்டியா...' ஏறிய பெண்களில் ஒருத்திக் கேட்டாள்.
"ஆமா. உனக்கென்ன.?" இவள் கேள்விக் கேட்டப் பெண்ணைப் பார்த்து சொன்னாள்.
"உனக்கென்னவா..! பக்கத்து பொட்டியில உன் புருஷன் ஏறிட்டான்னு இந்தப் பொட்டிக்கு அவசர அவசரமா ஓடிவந்தா இதுல நீ ஏறிக்கிட்ட.. ஏன் நீயும் உன் புருஷனும் மட்டும்தான் பொழைக்கனுமா நாங்கயெல்லாம் பொழைக்கவே கூடாதா." இவள் முந்தானையை இழுத்து இடுப்பில் செருகி கோபத்தில் வரிந்து கட்டினாள்.
'அடியே.. ரொம்ப பேசுனினா ஓடுற வண்டில இருந்து தள்ளி விட்ருவன் பாத்துக்க''. அவளும் பதிலுக்கு எகிறினாள். சண்டைப் போட்டு கொண்டிருக்கும் அதே நேரம் வியாபாரத்திலும் இருவரும் மும்மரமாக இருந்தனர்.
'தள்ளுவ தள்ளுவ. நீ உதைக்கிற வரைக்கும் நான் இடுப்ப காட்டிட்டு சும்மா நிப்பன்னு நினைச்சியா. உன்னையும் இழுத்துவிடமாட்டேன்....'
சுவாரசியமாய் இருந்த சண்டை விபரிதமாய் மாறுவது போல தோன்றியதால் பயணிகள் குறுக்கிட்டு சண்டையை நிறுத்த முயன்றனர்.
அருகிலிருந்த ஒரு பயணி சற்றுக் குரலுயர்த்தி, "ஏன்ம்மா. எதுக்கு இப்படி
ரெண்டு பேரும் சண்ட போட்டுக்கிட்டு இருக்கீங்க. அதான் ரெண்டு பேரும் முக்கால்வாசி வேர்க்கடலையை வித்துப்பிட்டிங்களே. அப்புறம் என்ன.?" என்றார்.
ரெண்டு பேரும் சண்ட போட்டுக்கிட்டு இருக்கீங்க. அதான் ரெண்டு பேரும் முக்கால்வாசி வேர்க்கடலையை வித்துப்பிட்டிங்களே. அப்புறம் என்ன.?" என்றார்.
"அடியே இங்க பாருடி நாம ரெண்டு பேரும் சண்ட போட்டுக்குறோமாமா" என்று ஒரு கையை இடுப்பிலும் மற்றொரு கையைக் கன்னத்திலும் அழுத்தியவாறு சண்டையைத் தொடங்கியவள் சிரித்தாள்.
'அதான்ன. நாம எப்பச் சண்ட போட்டோம்' என்று இன்னொருத்தியும் இளக்காரமாகச் சிரித்தாள்.
கேள்விக் கேட்டவர் ஒன்றும் புரியாமல் முழித்தார்.
"ஏக்கா.. இன்னைக்கு ஜோலார்ப் பேட்டை வண்டி அரமணி நேரம் லேட்டாம்மே" என்றாள் ஒருத்தி.
"ஆமாக்கா. அப்ப நாம பொம்மிடில எறங்கிருவோமா" என்றாள் இன்னொருத்தி.
பொம்மிடி வந்ததும் "வேர்க்கடல... வேர்க்கடல..." என்றுக் கூவிக் கொண்டே அவர்கள் அடுத்த வண்டியை நோக்கிச் சென்றுவிட்டனர்.
பெட்டியில் இருந்தவர்கள் வேர்க்கடலையைப் பார்த்துக் குழம்பிக் கொண்டிருந்தனர்.
இரயில் கிளம்பியது.
கார்த்திக் பிரகாசம்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment