Skip to main content

வேர்க்கடல

இரயில் மொரப்பூரில் நின்றது.

"வேர்க்கடல.. வேர்க்கடல"

வண்டி நின்றதும் இரு பெண்கள் அவித்த வேர்க்கடலைகளைப் பைகளில் அடைத்துக் கொண்டு, "வேர்க்கடல வேர்க்கடல..!" என்று கூவியபடியே இரயில் பெட்டியின் இருபுறமும் ஏறினர்.

'ஏய்.. நீ இந்தப்பக்கம் ஏறீட்டியா...' ஏறிய பெண்களில் ஒருத்திக் கேட்டாள்.

"ஆமா. உனக்கென்ன.?" இவள் கேள்விக் கேட்டப் பெண்ணைப் பார்த்து சொன்னாள்.

"உனக்கென்னவா..! பக்கத்து பொட்டியில உன் புருஷன் ஏறிட்டான்னு இந்தப் பொட்டிக்கு அவசர அவசரமா ஓடிவந்தா இதுல நீ ஏறிக்கிட்ட.. ஏன் நீயும் உன் புருஷனும் மட்டும்தான் பொழைக்கனுமா நாங்கயெல்லாம் பொழைக்கவே கூடாதா." இவள் முந்தானையை இழுத்து இடுப்பில் செருகி கோபத்தில் வரிந்து கட்டினாள்.

'அடியே.. ரொம்ப பேசுனினா ஓடுற வண்டில இருந்து தள்ளி விட்ருவன் பாத்துக்க''. அவளும் பதிலுக்கு எகிறினாள். சண்டைப் போட்டு கொண்டிருக்கும் அதே நேரம் வியாபாரத்திலும் இருவரும் மும்மரமாக இருந்தனர்.

'தள்ளுவ தள்ளுவ. நீ உதைக்கிற வரைக்கும் நான் இடுப்ப காட்டிட்டு சும்மா நிப்பன்னு நினைச்சியா. உன்னையும் இழுத்துவிடமாட்டேன்....'

சுவாரசியமாய் இருந்த சண்டை விபரிதமாய் மாறுவது போல தோன்றியதால் பயணிகள் குறுக்கிட்டு சண்டையை நிறுத்த முயன்றனர்.
அருகிலிருந்த ஒரு பயணி சற்றுக் குரலுயர்த்தி, "ஏன்ம்மா. எதுக்கு இப்படி

ரெண்டு பேரும் சண்ட போட்டுக்கிட்டு இருக்கீங்க. அதான் ரெண்டு பேரும் முக்கால்வாசி வேர்க்கடலையை வித்துப்பிட்டிங்களே. அப்புறம் என்ன.?" என்றார்.

"அடியே இங்க பாருடி நாம ரெண்டு பேரும் சண்ட போட்டுக்குறோமாமா" என்று ஒரு கையை இடுப்பிலும் மற்றொரு கையைக் கன்னத்திலும் அழுத்தியவாறு சண்டையைத் தொடங்கியவள் சிரித்தாள்.

'அதான்ன. நாம எப்பச் சண்ட போட்டோம்' என்று இன்னொருத்தியும் இளக்காரமாகச் சிரித்தாள்.

கேள்விக் கேட்டவர் ஒன்றும் புரியாமல் முழித்தார்.

"ஏக்கா.. இன்னைக்கு ஜோலார்ப் பேட்டை வண்டி அரமணி நேரம் லேட்டாம்மே" என்றாள் ஒருத்தி.

"ஆமாக்கா. அப்ப நாம பொம்மிடில எறங்கிருவோமா" என்றாள் இன்னொருத்தி.

பொம்மிடி வந்ததும் "வேர்க்கடல... வேர்க்கடல..." என்றுக் கூவிக் கொண்டே அவர்கள் அடுத்த வண்டியை நோக்கிச் சென்றுவிட்டனர்.

பெட்டியில் இருந்தவர்கள் வேர்க்கடலையைப் பார்த்துக் குழம்பிக் கொண்டிருந்தனர். 

இரயில் கிளம்பியது.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...