Skip to main content

Posts

Showing posts from October, 2018

மரணத்தின் மடியில்

அன்று குடிக்கவில்லை. வழக்கமாக புகைக்கும் அளவிற்குக்கூட புகைக்கவில்லை இருந்தாலும் உடல் அசௌகரியமாக இருந்தது. நானே மருத்துவமனைக்குச் சென்றேன் வெள்ளைத் தாளில் ஏ...

புத்தனாகிய நான்

நதி வழி இலையாய் சில வேளைகளில் சலன சஞ்சாரமற்ற மோனத்துடன் சில வேளைகளில் பேரியாதாளி அவயத்துடன் நகர்ந்திடும் நாட்கள் சமுத்திரத்தில் சேர்க்குமா சாக்கடையில் தள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.. கார்த்திக் பிரகாசம்...

தெருவில் ஒரு கவிதை

இன்று படுக்கையிலிருந்து எழவே மணி பத்தாகிவிட்டது. ஒற்றை தலைவலி வேறு. ஒரு டீக்குடித்தால் தேவலாம் போலிருந்தது. ஆனால் மணியாகிவிட்டது, அலுவலகத்திற்குக் கிளம்பலாமா இல்லை டீக்கடைக்குப் போலாமா.! என்ற சில நொடி யோசனையின் முடிவில் 'டீக் குடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதே சாலச் சிறந்தது' என்று எப்போதுமே எடுக்கும் நிரந்தர முடிவை முன்னெடுத்து சட்டையை மாட்டிக் கொண்டு கீழே இறங்கித் தெருவில் நடந்தேன். அடுக்குமாடி கட்டத்திலிருந்து இருவர் வெளியே வந்தனர். அது ஆண்கள் தங்கும் மேன்சன். ஆதலால் அவர்கள் தந்தையும் மகனும் என்பதை எளிதாய் யூகித்தறிய முடிந்தது. அகண்ட தெருவின் இடது ஓரத்தில் அவர்களிருவரும் பேசிக் கொண்டே நடக்க, அவர்களைக் கவனித்தவாறே வலப்பக்கத்தின் ஓரத்தில் நான் நடந்தேன். பதினைந்து அடிகள் நடந்திருப்போம். திடுமென மகனை நிற்கச் சொல்லிவிட்டு பின்னால் திரும்பி மேன்சனை நோக்கிச் சென்றார் தந்தை. மகன் நின்றார். நானும் தான். மேன்சனின் வாசலில் அமர்ந்திருந்த வயதான செக்யூரீட்டியின் கைகளில், மேல் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து தள்ளினார். அந்தச் செக்யூரீட்டி வேண்டாமென்று...

அணைத்து வையுங்கள்

அடுத்தமுறை நீங்கள் ஓரு கூட்டத்தில் பங்கேற்கும் போது தயைக் கூர்ந்து தங்களது அலைபேசியை அணைத்து வையுங்கள் ஏனெனில் அங்கு ஓர் எழுத்தாளன் - கவிஞன் - பேச்சாளன் உங்களது ...

கவிஞர் ஆத்மாநாம் விருது 2018

கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையால் வழங்கப்படும் 'கவிஞர் ஆத்மாநாம் விருது' இவ்வருடம், கவிஞர் போகன் சங்கர், ஆர்தர் ரைம்போ எழுதிய "நரகத்தில் ஒரு பருவக்காலம்" புத்தகத்தி...

முதல் அனுபவம்

உடல் முழுவதும் நடுக்கம் பரவியிருந்தது. "என் இதயத் துடிப்பு எனக்கே கேட்கிறது" என்பார்களே அதை இன்றுதான் முதல்முறையாக உணர்ந்தேன். அப்படிபட்ட நடுக்க மனநிலையில் தான் ...

சாதியே - நீ செத்துப் போ

மதம்மாறி மணம் கொண்டவர்களை கண்டதுண்டு..! மணமான பின் மதத்தை மாற்றிக் கொண்டவர்களையும் கண்டதுண்டு..! சாதிமாறி மணம் கொண்டவர்களை கண்டதுண்டா..? மணமான பின் சாதியை மாற்றிக் க...

மற்போர்

இதழ்களிட்ட சமரில் நேர்ந்ததெல்லாம் சுகமாய் வலித்திடும் நற்காயங்கள்...!! அக்காயங்களாற இதழ்களின் மற்போரே உடனடி மருந்து...!! கார்த்திக் பிரகாசம்...

இறந்தவன் பேசுகிறேன்

அன்றுதான் முதல்முறை இறந்தேன்...! மீசை முளைப்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிய ஓர் துர்நாளில் பேச்சு வாக்கில் "போய்த் தொல" என்று அம்மாவைச் சொல்லிவிட்டேன்..! எப்போது...

தற்காலிக மரணம்

நத்தையாய் விழிகள் நகர்கின்றன சுவாசிக்க முடிகின்றது கால்கள் அசைகின்றன...! ஆக சாகவில்லை தற்காலிக மரணம்தான்...! ஆந்தையாய் மனது அலையும் புரிந்தும் புரியாதது போல உயிரைப் போட்டு உருட்டும்...! காட்டருவி கொட்டும் சப்தத்திலும் கண்களை மூடினால் சாரலின் சுகத்தில் ஆன்மாவிற்குள் ஓர் அமைதி பரவுமே...! அதுபோலவே அவளது முகம் மனமெங்கும் பரவும் தடுத்திட முடியாது...! வேரின் இடம் நீருக்குத் தெரிந்திருப்பது போல நீரின் தடம் வேர் அறிந்தே இருப்பது போல அவள் நினைவும் என் நெஞ்சமும் ஒன்றாகும்...! எதற்குள் எது அடங்கியிருக்கிறது என்றறிவது இமைப்பதைப் போல அவ்வளவு எளிதானது அல்ல மண்ணில் மழைத் தொட்ட முதல் இடத்தைக் கண்டறிவது போல கடினமானது...! எப்புலனுக்கும் புலனாகாது...! அந்த நேற்றைய நினைவுகள் உடலை இலகுவாக்கி மனதின் எடையைக் கூட்டும்...! குருதியோட்டம் குலைவுறும்...! விழிகளில் காட்சிகள் பதியாமல் வெறுமனே விழும்...! கரங்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒன்றும் இருக்காது...! கால்கள் முன்னாலும் காலம் பின்னாலும் உடலை முறுக்கி உயிரைக் கட்டி இழுக்கும்...! மெல்லிய வருடும் காற்றில் உயிரின் ஈரம் ...