Skip to main content

இறந்தவன் பேசுகிறேன்

அன்றுதான் முதல்முறை இறந்தேன்...!
மீசை முளைப்பதற்கான அறிகுறிகள்
தென்பட தொடங்கிய ஓர் துர்நாளில்
பேச்சு வாக்கில்
"போய்த் தொல" என்று அம்மாவைச்
சொல்லிவிட்டேன்..!
எப்போதும் "வாங்க போங்க" வென்று பேசும் மகன்
திடுமென மரியாதையின்றி பேசிவிட்டானென்று
மனசுடைந்து போன அம்மா
'பொல பொல'வென அழ ஆரம்பித்துவிட்டது.!
பெத்தவள் கண்முன்னே
கண்ணீர் சிந்துவதைக் கண்டதும்
குற்றவுணர்ச்சி நெஞ்சைக் கொன்றுக்
குதறிவிட்டது...!
அன்றுதான் முதல்முறை இறந்தேன்...!

எப்போதும்
சிடுமூஞ்சு கோபத்துடன்
திட்டித் திட்டியே
பார்த்துப் பழக்கப்பட்டிருந்த அப்பா
நான் மாவட்ட அளவில் பரிசுப் பெற்றதைப்
பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்லி
பெருமையில் கண் கலங்கிவிட்டாரென்று
அடுத்தநாள் அம்மா சொல்கையில்
இரண்டாம்முறை இறந்தேன்...!

ஆறாம் வகுப்புவரை அரைக்கால் டவுசர் மாட்டிக்கொண்டு நிழல்போல
அருகிலேயே இருந்த நண்பன்
பெண் விவகாரத்தில் சிக்கி
தற்கொலை செய்துக் கொண்டானென்று
கேள்விப்பட்ட போது
மூன்றாம்முறை இறந்தேன்...!

ஒன்றாய் உயிராய் உறவாய் உணர்வாய் இருந்த
தோழியவளின் திருமணத்தால்
வாழ்வில் உண்டான வெற்றிடம்
என்னை அனாதையாக்கிய போது
நான்காம்முறை இறந்தேன்...!

காதலைக் காட்டியவள்
காத்திருக்கக் கூடிய நிலையில்லாமல்
விலகிச் சென்ற போது
ஐந்தாவது முறையாக இறந்தேன்...!

இதுபோல்
பலமுறை
எதிர்பாராமல் இறந்திருக்கிறேன்...!
சொல்லப் போனால்
இறந்து இறந்தே தான்
வாழ்ந்திருக்கேன்...!
தற்காலிக இறப்புகளிலிருந்து
மீட்டெடுத்து வாழ்வை
உயிர்ப்பித்து
நிரந்தர இறப்பைக் கண்ணில் காட்டாமல்
தன் சட்டைப் பையில்
ஒளித்து வைத்து கண்ணாமூச்சியாடுகிறது
காலம்...!

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...