Skip to main content

தெருவில் ஒரு கவிதை

இன்று படுக்கையிலிருந்து எழவே மணி பத்தாகிவிட்டது. ஒற்றை தலைவலி வேறு. ஒரு டீக்குடித்தால் தேவலாம் போலிருந்தது.

ஆனால் மணியாகிவிட்டது, அலுவலகத்திற்குக் கிளம்பலாமா இல்லை டீக்கடைக்குப் போலாமா.! என்ற சில நொடி யோசனையின் முடிவில் 'டீக் குடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதே சாலச் சிறந்தது' என்று எப்போதுமே எடுக்கும் நிரந்தர முடிவை முன்னெடுத்து சட்டையை மாட்டிக் கொண்டு கீழே இறங்கித் தெருவில் நடந்தேன்.

அடுக்குமாடி கட்டத்திலிருந்து இருவர் வெளியே வந்தனர். அது ஆண்கள் தங்கும் மேன்சன். ஆதலால் அவர்கள் தந்தையும் மகனும் என்பதை எளிதாய் யூகித்தறிய முடிந்தது. அகண்ட தெருவின் இடது ஓரத்தில் அவர்களிருவரும் பேசிக் கொண்டே நடக்க, அவர்களைக் கவனித்தவாறே வலப்பக்கத்தின் ஓரத்தில் நான் நடந்தேன்.
பதினைந்து அடிகள் நடந்திருப்போம். திடுமென மகனை நிற்கச் சொல்லிவிட்டு பின்னால் திரும்பி மேன்சனை நோக்கிச் சென்றார் தந்தை. மகன் நின்றார். நானும் தான். மேன்சனின் வாசலில் அமர்ந்திருந்த வயதான செக்யூரீட்டியின் கைகளில், மேல் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து தள்ளினார். அந்தச் செக்யூரீட்டி வேண்டாமென்று எவ்வளவோ மறுக்க, அவர் பாட்டுக்குத் தாளைக் கைகளில் செருகி, அவரது இரு கைகளையும் சேர்த்தாற்போல ஒருமுறை அழுத்திப் பிடித்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் கீழிறிங்கி வந்தார்.
\
அவருடைய கண்கள் கசிந்திருந்ததா என்று தெரியவில்லை. எந்த மனநிலையில் அவர் இருந்தார் என்றெல்லாம் யோசிக்கவில்லை. ஆனால் கவிதையைப் போலிருந்த அக்காட்சியைக் கண்ட சிலிர்ப்பில் என்னையறியாமல் எனது உதடுகள் மெல்லிய புன்னகையை உதிர்த்தன. உதிரும் புன்னகையோடு இடது ஓரத்தில் நின்றிருந்த அம்மகனைப் பார்த்தேன். ஆச்சரியமாக அவரும் என்னைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

இருவரும் சில நொடிகள் புன்னகைத்துக் கொண்டோம்.
டீக்கடைக்கு நடந்தேன். இளம் வெயில் சாலை முழுவதையும் நனைக்க முனைந்தது. இருப்பினும் மகனின் கண்களில் மின்னிய பாசமும், பெருமிதமும் இந்நாளுக்கான நிழலை ஏற்கனவே என்னுள் பரப்பியிருந்தது.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...