Skip to main content

முதல் அனுபவம்

உடல் முழுவதும் நடுக்கம் பரவியிருந்தது. "என் இதயத் துடிப்பு எனக்கே கேட்கிறது" என்பார்களே அதை இன்றுதான் முதல்முறையாக உணர்ந்தேன். அப்படிபட்ட நடுக்க மனநிலையில் தான் கூட்டம் முடியும் வரையிலும் அமர்ந்திருந்தேன். படித்து வியந்திருந்த எழுத்தாளர்கள் பலரை முதல்முறை நேரில் பார்க்கிறேன். ஏதோவொரு தவிப்போ, தயக்கமோ அல்லது இரண்டுமோ மனதில் ஆழமாக ஊன்றி நின்று நிழலாடின. கடைசிவரை நெருங்கவேயில்லை தூரத்திலிருந்தே அவர்களை ரசித்திருந்தேன்.

இப்படியோர் அனுபவம் இதற்குமுன் ஏற்பட்டதில்லை.

"கவிஞர் ஆத்மாநாம் விருது விழா 2018" பற்றி ஒரு மாதத்திற்கு முன்பே வேல் கண்ணண் அண்ணன் முகபுத்தகத்தில் பதிவிட்டிருந்தார். அப்பொழுதே முடிவு செய்துவிட்டேன் அழையா விருந்தாளியாக கண்டிப்பாகச் செல்வதென்று. ஆனால் ஆச்சரியமாக நேற்று, "எங்க இருக்கீங்க கார்த்தி. சேலமா சென்னையா.? அப்போ சரி. விழாவிற்கு வாங்க. உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்" என்று போனில் அழைத்து அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டார் வேல் கண்ணண் அண்ணன். போனை அணைத்துவிட்டு நானைடந்த மகிழ்ச்சியென்பது அளப்பரியது. ஏனெனில் என்றோ ஓர் நாள் போகிற போக்கில் ஏற்பட்ட பத்து நிமிட அறிமுகத்தை மறக்காமல் நினைவில் வைத்து அழைத்தது, எனக்கு அவரளித்த மிகப்பெரிய அங்கீகாரம். அக்கணம் உண்டான தவிப்பும் நடுக்கமும் விருது வழங்கும் கூட்டம் முடியும் வரையிலும் நீடித்தன.

எனக்கு "மாதொருபாகன்" மூலம் அறிமுகமான ஐயா பெருமாள் முருகன், "வல்லிசை" மூலம் சாதி சமமின்மையின் வீரியத்தை உணர்த்திய அண்ணன் அழகிய பெரியவன், "மீட்பு" மூலம் தெரிந்திட்ட போகன் சங்கர்,  கவிதா முரளிதரன், "ஆர்தர் ரைம்போ" என்னும் மனிதர்களை வெறுக்கும் ஓர் இளங்கவியின் நரக உலகத்தை அடையாளம் காட்டிய கார்த்திகைப் பாண்டியன், அனுராதா ஆனந்த் மற்றும் பல எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் சந்தித்திட வைத்த இம்மாலைப் பொழுது எனது நினைவு தாழ்வாரத்திலிருந்து என்றுமே நீங்காது.

மேலும் ஆத்மாநாம் என்னும் பெருங்கவிஞரை அறிய வைத்து எனது வாசிப்பு எல்லையை விரிவுபடுத்தி  இவ்விழாவில் பங்கெடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அண்ணன் வேல் கண்ணண் அவர்களுக்கு நன்றிகள் பல.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...