உலகம் கண்டுகொள்ளாததையெல்லாம் ஒரு கவிஞன் உன்னிப்பாய் கவனிக்கிறான் உலகம் வெறுப்பதையெல்லாம் ஒரு கவிஞன் ஆழமாய் நேசிக்கிறான் உலகம் விரும்புவதையெல்லாம் ஒரு கவிஞன் வெகுவாய் வெறுக்கிறான் உலகம் சிறப்பற்றதென ஒதுக்குவதையெல்லாம் ஒரு கவிஞன் நினைவடுக்கில் சீராய் அடுக்கி வைக்கிறான் உலகம் எத்தனையோ கவிஞர்களைப் புறந்தள்ளினாலும் புதிதாய் ஒரு கவிஞன் பிறக்கிறான் கார்த்திக் பிரகாசம்...