பல கோவில்களுக்குச் சென்றிருக்கிறோம்
உன் அளவுக்குப் பக்தியில்லை
வணங்குவதில் நாட்டமுமில்லை
உன்னுடன்
பேசச்
சிரிக்க
கைகோர்த்து நடக்க
சம்மணகால் உரச மௌனமாய் அமர்ந்திருக்கச்
சிகப்பு வெள்ளையில்
நடுவிரலால்
என் நெற்றியைத் தொடும்
சிறு தீண்டலின்
ஆத்ம சுகத்திற்காக
வருவேன்
காலம் நயவஞ்சகமானது
சாதுரியமான சூதாடியும்கூட
நாம் ஒன்றாகச் செல்லாத
ஒரு கோவிலில்
உன் கடவுளைக் கண்டிருக்கிறாய்
உனக்குத் தெரியுமா?
என் தெய்வத்தை
நான் தொலைத்த இடமும்
அதுவே
Comments
Post a Comment