நேற்று முதல்
புதிதாய் சிரிக்கிறாய் என்கிறார்கள்
மகள் மீட்டுத் தந்த
எந்தன் பழைய சிரிப்பது
உண்டான ஒற்றை மலருக்காக
ஒட்டு மொத்த மரமும்
உயிர்தாங்கி நிற்பது போல்
தேவதை இரட்சிப்பின் பொருட்டு
துவண்ட பருவமும்
தொலைத்த காலமும்
வேர்விட்டு துளிர்க்கிறது
அவர்களுக்குத் தெரியாத இன்னொரு ரகசியம்
தாயின் கருவறையிலிருந்து
மகளின் கரங்களில்
மறுமுறை பிரசவித்திருக்கிறேன்
Comments
Post a Comment