Skip to main content
    கடந்த ஞாயிறு, வாழ்வில் மறக்க முடியாத நாளாக நின்று விட்டது. ஆட்டோகிராப் படத்தில் "ஒவ்வொரு பூக்களுமே" என்ற பாடலுக்கு புல்லாங்குழல் வாசித்த திரு.பெருமாள் அவர்களை நண்பர் (கார்த்திக் பாஸ்கர்) மூலமாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    மிகவும் பணிவான அனைவரிடமும் கனிவாக பேசும் மிக அற்புதமான மனிதர். தன்னம்பிக்கையின் மொத்த உருவம்.. செய்யும் தொழிலை அந்த கடவுளை விட ஒரு படி மேல் வைத்துப் பார்க்கிறார். அவருக்கு அசாத்தியமான விஷயமான விஷயங்களையும் எளிதாக சாத்தியமாக்கிக் கொள்கிறார். அவர் மீது அனுதாபம் வரவில்லை ஏனென்றால் அவரால் பார்க்க இயலாது என்பது அவர் சொன்னால் மட்டுமே தெரியும். ஆனால் மாறாக அவர் மீது வியப்பு ஏற்பட்டது. பார்வை இல்லை என்ற குறையையேக் குறைப்பட வைத்துக் கொண்டிருக்கிறார்.

   கண் முன்னே இருப்பவர்களையெல்லாம் காரணமே இல்லாமல் வெறுத்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், தான் இதுவரை கண்டிராத இனியும் காண முடியாத தன் தாய் மீதும் தன்னையே நம்பி வந்த மனைவி மற்றும் மகன் மீதும் அளவில்லா அன்பையும் பாசத்தையும் கொண்டிருக்கிறார்..

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...