கடல் மண்ணில் கால் தடம் பதித்து இந்திய இளைஞர்களின் மனதில் தன்னம்பிக்கை விதை விதைத்த உறங்கும் போது வருவது கனவல்ல ஒருவனை உறங்க விடாமல் தவிக்க விடுவதுதான் கனவு என்பதை உணர வைத்த சிறகில்லாமல் பரிதவித்துக் கொண்டிருந்த இந்தியர்களுக்கு "அக்னி சிறகுகளை" அளித்த உலக நாடுகளுக்கு மத்தியில் நம் நாட்டிற்கு தனி அங்கீகாரத்தையும் மதிப்பையும் ஏற்படுத்தி கொடுத்த அப்துல் கலாம் என்ற ஆத்மா தன் ஆயுளை முடித்து கொண்டுள்ளது...!!! அந்த ஆத்மா ஓய்வைத் தேடி கொண்டாலும் அவரின் நினைவலைகள் என்றென்றும் நம் ஆழ்மனதில் ஓயாமல் ஓடோடிக் கொண்டே இருக்கும்... கார்த்திக் பிரகாசம்...