தமிழ் நாட்டில் கடந்த சில வாரங்களாக எந்த பக்கம் திரும்பினாலும் "ஹெல்மெட் பிரச்சனை" தான் பிரதான பேச்சாகவும் வாதமாகவும் எதிரொலித்து கொண்டிருக்கிறது... கட்டாய தலைக் கவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்ததை ஆதரித்தும், எதிர்த்தும் பல குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.
உண்மையில் பார்த்தால், இதில் ஆதரிக்கும் குரல்களை விட எதிர்க்கும் குரல்களே அதிகம்.. அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களும் அதிகம். தலைக்கவசம் அணிந்தால் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்க முடியவில்லை என்றும், ஹார்ன் அடித்தால் சரியாக கேட்பதில்லை என்றும் பரவலான குற்றச்சாட்டுக்கள் தலைக் கவசத்தை எதிர்ப்பவர்களால் முன் வைக்கப்படுகின்றன.. அதிலும் அதிகமானவர்களால் முன் மொழியப்படும் குற்றச்சாட்டு என்பது தலைக் கவசம் அணிந்தால் முடி உதிர்ந்து விடுகின்றன என்பது தான்...
அதே போல், தலைக்கவசம் அணிவதை ஆதரிப்பவர்கள் கூட கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றன.. இலவச கிரைண்டர், இலவச மிக்ஸி, இலவச மடிக் கணினி என்று இலவசங்களை அள்ளித் தரும் அரசாங்கம் உயிரை காக்கும் தலைக் கவசத்தை ஏன் இலவசமாக அளிக்கக் கூடாது என்பதே அந்த கோரிக்கை ஆகும்..
தலைக்கவசத்தை எதிர்ப்பவர்கள் சிந்திக்க வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. தலைக்கவசம் அணிந்தால் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்க முடியவில்லை என்ற கருத்து கேட்க நியாமானதாக இருக்கலாம் ஆனால் உண்மையில் அப்படி இல்லை. பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்க இரு சக்கர வாகனத்தின் இரு பக்கங்களிலும் இடது மற்றும் வலதுப்புற கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இன்னொரு முக்கியமான விடயம் முடி கொட்டுவது. தலைக்கவசம் அணிவதால் மட்டுமே முடி உதிரும் பிரச்சனை என்பது உண்மையில் சிலருக்கு ஏற்படலாம். ஆனால் அவர்கள் யோசிக்க வேண்டிய விடயம் உயிரை விடவா தலைமுடி முக்கியம்...???
ஆதரிப்பவர்களில் ஒருசாரர் கேட்பது போல, அனைத்தையும் அரசாங்கமே இலவசமாக தந்துவிட்டால் பிறகு நமக்கு என்னதான் வேலை...!!! இலவசம் எந்தவொரு தேவைக்கும் நிரந்தர தீர்வாகாது. மாறாக இனி இருசக்கர வாகனங்கள் விற்கும் நிறுவனங்களே கட்டாயமாக தலைக் கவசத்தையும் கொடுக்க வேண்டும் என்று கேட்கலாம்...!
தலைக்கவசம் அணிவதும், அணிய சொல்வதும் தண்டனை அல்ல...
அது ஒரு தற்காப்பு.. காலுக்கு காலனி அணிவது எவ்வளவு அவசியமோ அதை விட ஆயிரம் மடங்கு அவசியமானது, இரு சக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்குக் கவசம் அணிய வேண்டியது....
கார்த்திக் பிரகாசம்...
உண்மையில் பார்த்தால், இதில் ஆதரிக்கும் குரல்களை விட எதிர்க்கும் குரல்களே அதிகம்.. அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களும் அதிகம். தலைக்கவசம் அணிந்தால் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்க முடியவில்லை என்றும், ஹார்ன் அடித்தால் சரியாக கேட்பதில்லை என்றும் பரவலான குற்றச்சாட்டுக்கள் தலைக் கவசத்தை எதிர்ப்பவர்களால் முன் வைக்கப்படுகின்றன.. அதிலும் அதிகமானவர்களால் முன் மொழியப்படும் குற்றச்சாட்டு என்பது தலைக் கவசம் அணிந்தால் முடி உதிர்ந்து விடுகின்றன என்பது தான்...
அதே போல், தலைக்கவசம் அணிவதை ஆதரிப்பவர்கள் கூட கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றன.. இலவச கிரைண்டர், இலவச மிக்ஸி, இலவச மடிக் கணினி என்று இலவசங்களை அள்ளித் தரும் அரசாங்கம் உயிரை காக்கும் தலைக் கவசத்தை ஏன் இலவசமாக அளிக்கக் கூடாது என்பதே அந்த கோரிக்கை ஆகும்..
தலைக்கவசத்தை எதிர்ப்பவர்கள் சிந்திக்க வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. தலைக்கவசம் அணிந்தால் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்க முடியவில்லை என்ற கருத்து கேட்க நியாமானதாக இருக்கலாம் ஆனால் உண்மையில் அப்படி இல்லை. பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்க இரு சக்கர வாகனத்தின் இரு பக்கங்களிலும் இடது மற்றும் வலதுப்புற கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இன்னொரு முக்கியமான விடயம் முடி கொட்டுவது. தலைக்கவசம் அணிவதால் மட்டுமே முடி உதிரும் பிரச்சனை என்பது உண்மையில் சிலருக்கு ஏற்படலாம். ஆனால் அவர்கள் யோசிக்க வேண்டிய விடயம் உயிரை விடவா தலைமுடி முக்கியம்...???
ஆதரிப்பவர்களில் ஒருசாரர் கேட்பது போல, அனைத்தையும் அரசாங்கமே இலவசமாக தந்துவிட்டால் பிறகு நமக்கு என்னதான் வேலை...!!! இலவசம் எந்தவொரு தேவைக்கும் நிரந்தர தீர்வாகாது. மாறாக இனி இருசக்கர வாகனங்கள் விற்கும் நிறுவனங்களே கட்டாயமாக தலைக் கவசத்தையும் கொடுக்க வேண்டும் என்று கேட்கலாம்...!
தலைக்கவசம் அணிவதும், அணிய சொல்வதும் தண்டனை அல்ல...
அது ஒரு தற்காப்பு.. காலுக்கு காலனி அணிவது எவ்வளவு அவசியமோ அதை விட ஆயிரம் மடங்கு அவசியமானது, இரு சக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்குக் கவசம் அணிய வேண்டியது....
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment