Skip to main content

Posts

Showing posts from May, 2016
அந்தப் பிச்சைக்காரனின் முகம் மிகவும் வாடிப்போய் இருந்தது. யாரிடமும் பிச்சைக் கேட்காமல் அமைதியாகவே இருந்தான். எவராவது பிச்சை இட்டாலும் கூட முகத்திலும் உடலசைவிலும் எந்த சலனமும் இல்லாமல் சுவற்றில் வரைந்த சித்திரம் போல் இருந்தான். அருகில் இருந்த சக பிச்சைக்கார நண்பர்களுக்கு அன்று அவனை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அவன் பிச்சை எடுக்க வந்த நாளில் இருந்து ஒருநாள் கூட இப்படி சோர்ந்து போய் அமர்ந்ததில்லை.. எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், வருபவர்கள் போகிறவர்களிடமெல்லாம் பிச்சைக் கேட்டு கொண்டும் பிசியாகவே இருப்பான்.  நாளின் முடிவில் அங்கிருப்பவர்களிலேயே அதிகப் பணம் அவன் தட்டில் தான் இருக்கும்.. சக பிச்சைக்காரன் நண்பன் அவனிடம் பேச முயன்றான். ஆனால் அவன் வாயை திறக்கவே இல்லை. அதனால் அவனை யாருமே தொந்தரவு செய்யவில்லை. அமைதியாவே இருந்ததால் அன்று அவன் தட்டில் காசு விழவே இல்லை. தனக்கு கிடைத்ததில் பாதியை அவனோடு பகிர்ந்துக் கொண்டான் சக பிச்சைக்கார நண்பன். ஒரு வாய் சாப்பிட்ட உடனே அவன் கண்களில் இருந்து சில துளிகள் எட்டிப் பார்த்தன. இந்த முறை அவன் நண்பன் கேட்கும் முன் அவனே பேச ஆரம்பித்தான். "அந...
உன்னையே நினைத்து கொண்டிருப்பதாலோ என்னவோ இப்பொழுதெல்லாம் இதயம் இயல்பை மீறி துடிக்கின்றது...!!! கார்த்திக் பிரகாசம்...

ஒரு தாயின் வேதனை...!!!

உன்னை வேலைக்காக வெளியூர் அனுப்பும் போது நான் உணரவில்லை இனி உன்னையும் என் பேரப் பிள்ளைகளையும் போனில் மட்டுமே கொஞ்ச முடியுமென்று...!!! பூட்டி வைக்க முடியா பாசத்துடனும் கண்ணில் காட்டிக் கொடுக்கும் கவலைகளுடனும் எந்நேரமும் உன் அழைப்பிற்காக போனை உடலின் ஓர் உறுப்பாக்கி காத்திருக்கிறேன்...!!! உன் வருகைக்காக வாசல் மீது ஒரு விழியையும் உன் அழைப்பிற்காக போனின் மீது ஒரு விழியையும் விசாலமாக வீசியெறிந்து விழித்திருக்கிறேன்...!!! கார்த்திக் பிரகாசம்...

அவஸ்தை...

நம் அப்பா நினைப்பது போல் நம்மால் இருக்க முடியாததும் நாம் நினைப்பதையெல்லாம் நம் அம்மாவிற்கு செய்ய முடியாததும்...!!! கார்த்திக் பிரகாசம் ...
சூறாவளி காற்றினால் சூறையாடப்பட்டு கற்பினை இழந்த பூக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தவது போல் இருந்தது அடுத்து பெய்த அமைதியான மழை...!!! கார்த்திக் பிரகாசம் ...

"க்ளேட்ஸ் கிரகாம் ஸ்டைன்ஸ்"

கிரகாம் ஸ்டைன்ஸ் 1945ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். கிறித்துவ மதத்தை சேர்ந்தவர். இவர் 1965ஆம் ஆண்டு "ஒடிசா"வில் இருக்கும் "ஆஸ்திரேலியா கிறித்துவ தொண்டு சபை"யை பார்வையிட இந்தியா வந்தார். அங்கிருந்த தொழுநோயாளிகளைப் பார்த்து வேதனை அடைந்த அவர், ஓடிசாவிலையே தங்கி அவர்களுக்கு சேவை செய்ய தொடங்கினார். இவரைப் போலவே அங்கு சேவை செய்து கொண்டிருந்த "க்ளேட்ஸ்" என்ற ஆஸ்திரேலியப் பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். 1965 ஆம் ஆண்டு ஒரு முறை, தனது மகன்களுடன் விடுமுறையைக் கழித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த கிரகாம் ஸ்டைன்ஸ், ஓய்விற்காக ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தியிருந்த போது, ஒரு மர்மக் கும்பல் அவரையும், அவருடைய மகன்களையும் பலமாகத் தாக்கி அவர்களை வண்டியோடு தீவைத்து கொளுத்திவிட்டனர். கிரகாம் ஸ்டைனும் இரண்டு மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பொழுது அவருடைய மகன்களில் ஒருவனுக்கு வயது பத்து மற்றும் இன்னொருவனுக்கு வயது ஆறு. கிரகாம் ஸ்டைன் ஏழை எளிய இந்து மக்களுக்கு உதவி செய்வது போல் அவர்களை கட்டாயப...
அதீதமான தாடியினால் கன்னத்தில் முடியாமல் இதழ்களில் மட்டும் முத்தமிட்டு முத்தமிட்டு மூச்சுத் திணறல் ஏற்படுவதாய் அவளது சண்டையுடன் முடிந்தது அன்றைய சந்திப்பு...!!! கார்த்திக் பிரகாசம்...
"வெற்றி பெற்றது" அறிவிக்கப்பட்டதும் திரு.ஸ்டாலின் அதிமுக' விற்கும், முதல்வர் ஜெயலலிதாவிற்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார். முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு திமுக'விற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.. திமுக பங்கேற்குமா இல்லையா என்ற சந்தேகம் நிலவிக் கொண்டிருந்த வேளையில் திரு.ஸ்டாலின் விழாவில் பங்கேற்றார். பின் வரிசையில் இருக்கை அளிக்கப்பட்டது என்று திரு.கருணாநிதி தனது குற்றச்சாட்டை பதிவு செய்திருந்த வேளையில் ஸ்டாலின் அதைப் பற்றி அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. ஆனால் " தமிழக முதல்வர் பதவி ஏற்பில் பங்கு பெற்றேன். ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒரு முறை என் வாழ்த்துக்கள். அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்றும் தமிழக மக்களுக்காக கடினமாக உழைப்பார் என்றும் நம்புகிறேன். வாழ்த்துக்கள்'' என்று முகநூலில் பதிவிட்டிருந்தார். திரு.கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் " ஸ்டாலின் பங்கேற்றார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். மரபு ரீதியாக இருக்கைகள் அமைக்கப்பட்டதால் தான் இருக்கை பின் வரிசையில் அமைந்துவிட்டதாகவும்,...

பயணம்...!!!

மற்றவர்களின் பாதிப்பு முற்றிலும் இல்லாமல் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மனதும் சில ஆசைகளை அடைக்காத்து வைத்திருக்கும்.. அவ்வாறு பெரும்பாலோனோரின் மனது அதிகம் காதலிக்கும் ஆசைகளில் ஒன்று பயணம்... ரயிலோ அல்லது பேருந்தோ, பயணம் என்றால் படு குஷியாகும் உள்ளம் கொண்டவர்களில் நானும் ஒருவன்.. இதுவரை பார்த்திட பலவிதமான மனிதர்களை, வேடிக்கையான விசயங்களை, கண் திறக்கும் நிகழ்வுகளை, மனதிற்கு மருந்து போடும் பாடல்களை, புத்தகத்தின் முக்கியத்துவத்தை பயணத்தினால் மட்டுமே முழுமையாக அறிய முடியும்.. அதிலும் ரயிலில் "ஜன்னல்" இருக்கையாகவும், பேருந்தில் ஓட்டுனருக்கு பக்கவாட்டில் முழுமையாக சாலையை பார்க்க முடிகின்ற இருக்கையாகவும் கிடைத்துவிட்டால் அதை விட மகிழ்ச்சியான ஒரு தருணம் அன்றைய நாளில் அமைந்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. இதுவரையில் கேள்வியேப்பட்டிராத ஊர்ப் பெயர்கள், பெயர்களை மட்டுமே கொண்டிருக்கும் ஆறுகள், தண்ணீரை பார்த்து அரை நூற்றாண்டுக்கும் அதிகமான அணைகள், தனித்து விடப்பட்ட விதவைப் பெண்ணைப் போல அங்கொன்று இங்கொன்றுமாய் மாடி வீடுகள், கூட்டுக் குடும்பமாய் ஒன்றையொன்று தாங்கி நிற்கும் குடிசைகள், க...
எத்தனையோ முறை பார்த்து வியந்திருந்தாலும் தலையை நிமிர்த்தாமல் இருக்க முடியவில்லை விண்ணில் விமானம் பறக்கும் போது...!!! கார்த்திக் பிரகாசம்...

வாக்களிக்கும் முன் சில நிமிடங்கள்...!!!

*நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், நம் ஓட்டை ஏன் காசு கொடுத்து வாங்க வேண்டும்..? ஒரு நாள் முழுவதுமாக கூலி வேலை செய்தாலும் கிடைக்காதப் பணம் ஒருவர் ஒரு சில நிமிடங்களில் இலவசமாக கொடுக்கும் போது, அதை வாங்கிக் கொண்டு அந்த நபருக்கு ஏன் வாக்களிக்க கூடாது என்று ஒரு சிலர் நினைக்கலாம்..? இப்படி நினைப்பது ஒரு விதத்தில் நியாமாகக் கூட தோன்றலாம்.. ஆனால் அன்று ஒரு நாள் அவர்கள் கொடுக்கும் பணத்தை கை நீட்டி வாங்கி நம் ஓட்டை விற்றுவிட்டால் அடுத்து ஐந்து வருடத்திற்கு அவர்களை கேள்வி கேட்கும் உரிமையை இழந்து விடுவோம். அந்த ஒரு நாள் சொற்ப பணத்திற்காக, அடுத்து ஐந்து வருடத்திற்கு நம் வெட்கம் மானம் சுயமரியாதை ஆகியவற்றை அடகு வைக்க வேண்டுமா.? என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். ஆதலால் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க, பணமாகவோ பொருளாகவோ யாராவது கொடுத்தால் முற்றிலுமாகப் புறக்கணிப்போம்... *நம் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் அந்தத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் நிலவி வரும் அவசிய தேவைகளையும் மற்றும் உடனடி தீர்வுகளையும் புரிந்தவர் யாரென்று என்று கலந்து ஆலோசித்...
அப்பாவிடம் ஆயிரம் விடயங்களைப் பகிர்ந்து கொண்டாலும்- முன்னுக்கு பின் முரணாக வாதம் செய்தாலும்-அரசியல் பற்றிப் பேசும்போது மட்டும் அத்தனையும் தாண்டி தனிச் சுவாரசியம் தோன்றிவிடுகிறது.. அதுவும் எதிர்முகமாக நின்று சூடாக வாதிடும் போது அப்பா தோழனாகி விடுகிறார்.. அப்பா மகன் உறவு சுலபமாகி விடுகிறது.. இதுநாள் வரையில், ஓட்டுப் போட காலையில் சீக்கிரமே செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியது உண்டே தவிர, இவருக்குத் தான் ஓட்டுப் போட வேண்டும் என்று ஒருபோதும் கட்டாயப்படுத்தியது இல்லை. போன தேர்தலில் வாக்களித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய போது, யாருக்கு ஓட்டுப் போட்டாய்..? என்று கேட்டார். நான் நோட்டவிற்கு என்றேன். அதற்கு அவர் ஒற்றை வரியில்,  "இதற்கு ஏன் சென்னையில் இருந்து பணம் செலவழித்து வந்தாய்..! என்று கேட்டு நகர்ந்துவிட்டார். "சுளீர்" என்று இருந்தாலும் முடிவு வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். நல்ல வேளை அந்தத் தேர்தலில், என் அப்பா ஓட்டளித்த வேட்பாளரும் ஜெயிக்கவில்லை. அவர் சார்ந்திருந்த கட்சியும் ஜெயிக்கவில்லை. இன்று, எப்பொழுது வீட்டுக்கு வருகிறாய் என்றார்.. நான் தேர்த...
இது "என் மகன் வாங்கிக் கொடுத்த சேலை" என்று மற்றவர்களிடம் நீ பெருமைப்பட்டு மகிழ்வதை பார்ப்பதற்காகவே ஏழு ஜென்மங்களும் உனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்...!!! கார்த்திக் பிரகாசம்...

டைரி...

எனக்குள்ள பழக்கங்களில் எனக்கு மிகவும் பிடித்த பழக்கம். டைரி எழுத வேண்டும் என்ற ஆசை எட்டாம் வகுப்பில் இருக்கும் போது, என் அப்பாவின் டைரியைத் திருட்டுத் தனமாகப் படித்தப் போது முதன் முறையாக ஏற்பட்டது.. இந்த ஆசையை வீட்டில் வெளிப்படுத்திய போது "இந்த வயதில் எதற்கு டைரி என்று அப்பா எளிதில் நிராகரித்துவிட்டார் ". ஆனால் அந்த ஆசை அவ்வளவு எளிதாய் மனதில் நீர்த்து போய்விடவில்லை. ஆதலால் பால் பேப்பர் கணக்கு நோட்டை என் முதல் டைரியாகப் பாவித்து எழுத ஆரம்பித்தது.. இன்று பல டைரிகள் யாருக்கும் தெரிந்திடாத என் வாழ்க்கைப் பதிவுகளை குறிப்புகளாகவும் நினைவுகளாகவும் சுமந்து கொண்டிருக்கின்றன.. எந்தவித எதிர்ப்பும், எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வில் இடம்பெற்ற இன்ப துன்பங்களை நான் நினைத்தபடி, நான் அனுபவித்தபடியே பகிர்ந்து புரிந்து கொள்வதனால் டைரிக்கும் எனக்குமான தோழமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. முன்னால் நிற்கும் கண்ணாடிக் கூட முகத்தைத் தான் பிரதிபலிக்கிறது. ஆனால் டைரி என் மனதை எனக்கே பிரதிபலிப்பதனால் தான் எழுதப் பிடித்திருக்கிறதோ என்னவோ..! நாம் யாரோடு எங்கே எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம...
நண்பர்கள் எந்தப் பிராண்ட் சட்டை வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அவன் மட்டும் சட்டை வாங்க வேண்டுமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தான்...!!! கார்த்திக் பிரகாசம்...
அந்த அழகிய பூங்காவில் வண்ண விளக்குகள் பொருத்திய செயற்கை குளத்தில் பொம்மை கொக்குகளை கொத்தி கொத்தி பழி வாங்கும் கோபத்தைத் தணித்தன உயிருள்ள மீன்கள்...!!! கார்த்திக் பிரகாசம்...