Skip to main content

வாக்களிக்கும் முன் சில நிமிடங்கள்...!!!

*நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், நம் ஓட்டை ஏன் காசு கொடுத்து வாங்க வேண்டும்..? ஒரு நாள் முழுவதுமாக கூலி வேலை செய்தாலும் கிடைக்காதப் பணம் ஒருவர் ஒரு சில நிமிடங்களில் இலவசமாக கொடுக்கும் போது, அதை வாங்கிக் கொண்டு அந்த நபருக்கு ஏன் வாக்களிக்க கூடாது என்று ஒரு சிலர் நினைக்கலாம்..? இப்படி நினைப்பது ஒரு விதத்தில் நியாமாகக் கூட தோன்றலாம்.. ஆனால் அன்று ஒரு நாள் அவர்கள் கொடுக்கும் பணத்தை கை நீட்டி வாங்கி நம் ஓட்டை விற்றுவிட்டால் அடுத்து ஐந்து வருடத்திற்கு அவர்களை கேள்வி கேட்கும் உரிமையை இழந்து விடுவோம். அந்த ஒரு நாள் சொற்ப பணத்திற்காக, அடுத்து ஐந்து வருடத்திற்கு நம் வெட்கம் மானம் சுயமரியாதை ஆகியவற்றை அடகு வைக்க வேண்டுமா.? என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். ஆதலால் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க, பணமாகவோ பொருளாகவோ யாராவது கொடுத்தால் முற்றிலுமாகப் புறக்கணிப்போம்...

*நம் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் அந்தத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் நிலவி வரும் அவசிய தேவைகளையும் மற்றும் உடனடி தீர்வுகளையும் புரிந்தவர் யாரென்று என்று கலந்து ஆலோசித்து விட்டு தகுதியான வேட்பாளருக்கு வாக்களிப்போம். தொகுதியை பற்றிய சுயவிவரங்களே தெரியாதவரிடம் நாம் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை எதிர்பார்ப்பது எந்தவிதத்திலும் ஏற்புடையதாக இருக்காது. ஆக,நாங்கள் பரம்பரை பரம்பரையாக எந்த வேட்பாளர் நின்றாலும் அந்தக் குறிப்பிட்ட கட்சிக்குத் தான் வாக்களிப்போம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்வோம்.

*இலவசங்கள் மற்றும் சலுகை என்ற மாய வாக்குறுதிகளை மட்டும் மனதில் வைத்து நம் வாக்கினை குறிப்பிட்ட கட்சிக்கு ஒதுக்கீடு செய்யோம். இலவசங்கள் ஒருபோதும் நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விடாது.

*அனைவரும் கண்டிப்பாக வாக்களிப்போம் என்று உறுதிக் கொள்வோம். விடுமுறை இல்லை-வெயிலில் யார் நிற்பது- வாக்களித்தால் மட்டும் என்ன புதிதாக நடந்துவிட போகிறது என வெற்று காரணங்களை கூறாமல் அனைவரும் கண்டிப்பாக வாக்கினை செலுத்துவோம்.

*வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் உரிமை. உரிமை மட்டுமல்ல-நல்ல சமூகத்தினை உருவாக்குவதற்கு நமக்கு கிடைத்த வாய்ப்பு. நல்ல சமூகத்தை நாம் அமைத்துக் கொள்வதும்,அடுத்த தலைமுறைக்கு அமைத்துக் கொடுப்பதும் நம் கடமை.

* தேர்தல் நாள், இன்னொரு விடுமுறைக்கான தினம் அல்ல. இனி வரப் போகும் நம் தலைமுறைக்கான தினம்.

*உரிமையை உதறி தள்ளோம். கடமையை காற்றில் விடோம்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...