Skip to main content

டைரி...

எனக்குள்ள பழக்கங்களில் எனக்கு மிகவும் பிடித்த பழக்கம். டைரி எழுத வேண்டும் என்ற ஆசை எட்டாம் வகுப்பில் இருக்கும் போது, என் அப்பாவின் டைரியைத் திருட்டுத் தனமாகப் படித்தப் போது முதன் முறையாக ஏற்பட்டது.. இந்த ஆசையை வீட்டில் வெளிப்படுத்திய போது "இந்த வயதில் எதற்கு டைரி என்று அப்பா எளிதில் நிராகரித்துவிட்டார் ". ஆனால் அந்த ஆசை அவ்வளவு எளிதாய் மனதில் நீர்த்து போய்விடவில்லை. ஆதலால் பால் பேப்பர் கணக்கு நோட்டை என் முதல் டைரியாகப் பாவித்து எழுத ஆரம்பித்தது.. இன்று பல டைரிகள் யாருக்கும் தெரிந்திடாத என் வாழ்க்கைப் பதிவுகளை குறிப்புகளாகவும் நினைவுகளாகவும் சுமந்து கொண்டிருக்கின்றன..

எந்தவித எதிர்ப்பும், எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வில் இடம்பெற்ற இன்ப துன்பங்களை நான் நினைத்தபடி, நான் அனுபவித்தபடியே பகிர்ந்து புரிந்து கொள்வதனால் டைரிக்கும் எனக்குமான தோழமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. முன்னால் நிற்கும் கண்ணாடிக் கூட முகத்தைத் தான் பிரதிபலிக்கிறது. ஆனால் டைரி என் மனதை எனக்கே பிரதிபலிப்பதனால் தான் எழுதப் பிடித்திருக்கிறதோ என்னவோ..!

நாம் யாரோடு எங்கே எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோமென்று ஒருமுறை நின்று சிலத் துளிகள் யோசிக்க கூட நேரமில்லாமல் சுழன்றுக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், நம் சுமைகளையும் சுகங்களையும் இன்னொருவரிடம் பகிர்ந்துக் கொள்ள நினைப்பது நியாமில்லை என்றுதான் தோன்றுகிறது. அப்படியே பகிர்ந்து கொண்டாலும் சில நேரங்களில் அந்த நபரின் உண்மைத்தனத்தின் மீதான சந்தேகம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.

அப்பா, அம்மா, தோழன், தோழி, காதலி என பல உறவுகளையும், அவர்களுடைய நினைவுகளையும் எழுதும் போது தன்னிச்சையான மனநிறைவொன்று பரவி விடுகிறது. அழுத நாட்களை அல்லது தருணங்களை எழுதி முடித்த வேளையில் அனிச்சையான ஆறுதல் அலையில் மனம் கரை சேர்ந்து விடுகிறது.

டைரியில் பழைய நினைவுகளில் மூழ்கும் போது, அப்பொழுது அழுத நிகழ்வுகளை படித்தால் இப்பொழுது சிரிக்க தோன்றுகிறது. அப்பொழுது சிரித்த ஒருசில நினைவுகளைத் திரும்ப படித்தால், கண்கள் கொஞ்சம் கண்ணீரை கசக்கிவிடுகின்றன...

காலத்தின் கட்டாயமும், வாழ்க்கையின் விளையாட்டும் புரிகின்றது...

பிழைப்புக்காகவும், சூழ்நிலைக்காகவும் பல முகமூடிகளை அவ்வப்போது அணிந்து கொண்டிருக்கையில், டைரி எழுதும் தருணம் முகமூடிகளை கழட்டி தூக்கி எரிய கிடைத்த வாய்ப்பாகவே நினைக்கிறேன்.

நினைவுகளையும், குறிப்புகளையும் மட்டுமல்ல அவர்தம் உண்மை முகங்களையும் தனக்குள் டைரி பொதிந்து வைத்துள்ளது...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...