எனக்குள்ள பழக்கங்களில் எனக்கு மிகவும் பிடித்த பழக்கம். டைரி எழுத வேண்டும் என்ற ஆசை எட்டாம் வகுப்பில் இருக்கும் போது, என் அப்பாவின் டைரியைத் திருட்டுத் தனமாகப் படித்தப் போது முதன் முறையாக ஏற்பட்டது.. இந்த ஆசையை வீட்டில் வெளிப்படுத்திய போது "இந்த வயதில் எதற்கு டைரி என்று அப்பா எளிதில் நிராகரித்துவிட்டார் ". ஆனால் அந்த ஆசை அவ்வளவு எளிதாய் மனதில் நீர்த்து போய்விடவில்லை. ஆதலால் பால் பேப்பர் கணக்கு நோட்டை என் முதல் டைரியாகப் பாவித்து எழுத ஆரம்பித்தது.. இன்று பல டைரிகள் யாருக்கும் தெரிந்திடாத என் வாழ்க்கைப் பதிவுகளை குறிப்புகளாகவும் நினைவுகளாகவும் சுமந்து கொண்டிருக்கின்றன..
எந்தவித எதிர்ப்பும், எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வில் இடம்பெற்ற இன்ப துன்பங்களை நான் நினைத்தபடி, நான் அனுபவித்தபடியே பகிர்ந்து புரிந்து கொள்வதனால் டைரிக்கும் எனக்குமான தோழமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. முன்னால் நிற்கும் கண்ணாடிக் கூட முகத்தைத் தான் பிரதிபலிக்கிறது. ஆனால் டைரி என் மனதை எனக்கே பிரதிபலிப்பதனால் தான் எழுதப் பிடித்திருக்கிறதோ என்னவோ..!
நாம் யாரோடு எங்கே எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோமென்று ஒருமுறை நின்று சிலத் துளிகள் யோசிக்க கூட நேரமில்லாமல் சுழன்றுக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், நம் சுமைகளையும் சுகங்களையும் இன்னொருவரிடம் பகிர்ந்துக் கொள்ள நினைப்பது நியாமில்லை என்றுதான் தோன்றுகிறது. அப்படியே பகிர்ந்து கொண்டாலும் சில நேரங்களில் அந்த நபரின் உண்மைத்தனத்தின் மீதான சந்தேகம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.
அப்பா, அம்மா, தோழன், தோழி, காதலி என பல உறவுகளையும், அவர்களுடைய நினைவுகளையும் எழுதும் போது தன்னிச்சையான மனநிறைவொன்று பரவி விடுகிறது. அழுத நாட்களை அல்லது தருணங்களை எழுதி முடித்த வேளையில் அனிச்சையான ஆறுதல் அலையில் மனம் கரை சேர்ந்து விடுகிறது.
டைரியில் பழைய நினைவுகளில் மூழ்கும் போது, அப்பொழுது அழுத நிகழ்வுகளை படித்தால் இப்பொழுது சிரிக்க தோன்றுகிறது. அப்பொழுது சிரித்த ஒருசில நினைவுகளைத் திரும்ப படித்தால், கண்கள் கொஞ்சம் கண்ணீரை கசக்கிவிடுகின்றன...
காலத்தின் கட்டாயமும், வாழ்க்கையின் விளையாட்டும் புரிகின்றது...
பிழைப்புக்காகவும், சூழ்நிலைக்காகவும் பல முகமூடிகளை அவ்வப்போது அணிந்து கொண்டிருக்கையில், டைரி எழுதும் தருணம் முகமூடிகளை கழட்டி தூக்கி எரிய கிடைத்த வாய்ப்பாகவே நினைக்கிறேன்.
நினைவுகளையும், குறிப்புகளையும் மட்டுமல்ல அவர்தம் உண்மை முகங்களையும் தனக்குள் டைரி பொதிந்து வைத்துள்ளது...
கார்த்திக் பிரகாசம்...
எந்தவித எதிர்ப்பும், எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வில் இடம்பெற்ற இன்ப துன்பங்களை நான் நினைத்தபடி, நான் அனுபவித்தபடியே பகிர்ந்து புரிந்து கொள்வதனால் டைரிக்கும் எனக்குமான தோழமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. முன்னால் நிற்கும் கண்ணாடிக் கூட முகத்தைத் தான் பிரதிபலிக்கிறது. ஆனால் டைரி என் மனதை எனக்கே பிரதிபலிப்பதனால் தான் எழுதப் பிடித்திருக்கிறதோ என்னவோ..!
நாம் யாரோடு எங்கே எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோமென்று ஒருமுறை நின்று சிலத் துளிகள் யோசிக்க கூட நேரமில்லாமல் சுழன்றுக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், நம் சுமைகளையும் சுகங்களையும் இன்னொருவரிடம் பகிர்ந்துக் கொள்ள நினைப்பது நியாமில்லை என்றுதான் தோன்றுகிறது. அப்படியே பகிர்ந்து கொண்டாலும் சில நேரங்களில் அந்த நபரின் உண்மைத்தனத்தின் மீதான சந்தேகம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.
அப்பா, அம்மா, தோழன், தோழி, காதலி என பல உறவுகளையும், அவர்களுடைய நினைவுகளையும் எழுதும் போது தன்னிச்சையான மனநிறைவொன்று பரவி விடுகிறது. அழுத நாட்களை அல்லது தருணங்களை எழுதி முடித்த வேளையில் அனிச்சையான ஆறுதல் அலையில் மனம் கரை சேர்ந்து விடுகிறது.
டைரியில் பழைய நினைவுகளில் மூழ்கும் போது, அப்பொழுது அழுத நிகழ்வுகளை படித்தால் இப்பொழுது சிரிக்க தோன்றுகிறது. அப்பொழுது சிரித்த ஒருசில நினைவுகளைத் திரும்ப படித்தால், கண்கள் கொஞ்சம் கண்ணீரை கசக்கிவிடுகின்றன...
காலத்தின் கட்டாயமும், வாழ்க்கையின் விளையாட்டும் புரிகின்றது...
பிழைப்புக்காகவும், சூழ்நிலைக்காகவும் பல முகமூடிகளை அவ்வப்போது அணிந்து கொண்டிருக்கையில், டைரி எழுதும் தருணம் முகமூடிகளை கழட்டி தூக்கி எரிய கிடைத்த வாய்ப்பாகவே நினைக்கிறேன்.
நினைவுகளையும், குறிப்புகளையும் மட்டுமல்ல அவர்தம் உண்மை முகங்களையும் தனக்குள் டைரி பொதிந்து வைத்துள்ளது...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment