Skip to main content

"க்ளேட்ஸ் கிரகாம் ஸ்டைன்ஸ்"

கிரகாம் ஸ்டைன்ஸ் 1945ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். கிறித்துவ மதத்தை சேர்ந்தவர். இவர் 1965ஆம் ஆண்டு "ஒடிசா"வில் இருக்கும் "ஆஸ்திரேலியா கிறித்துவ தொண்டு சபை"யை பார்வையிட இந்தியா வந்தார். அங்கிருந்த தொழுநோயாளிகளைப் பார்த்து வேதனை அடைந்த அவர், ஓடிசாவிலையே தங்கி அவர்களுக்கு சேவை
செய்ய தொடங்கினார்.

இவரைப் போலவே அங்கு சேவை செய்து கொண்டிருந்த "க்ளேட்ஸ்"
என்ற ஆஸ்திரேலியப் பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர்.

1965 ஆம் ஆண்டு ஒரு முறை, தனது மகன்களுடன் விடுமுறையைக் கழித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த கிரகாம் ஸ்டைன்ஸ், ஓய்விற்காக ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தியிருந்த போது, ஒரு மர்மக் கும்பல் அவரையும், அவருடைய மகன்களையும் பலமாகத் தாக்கி அவர்களை வண்டியோடு தீவைத்து கொளுத்திவிட்டனர். கிரகாம் ஸ்டைனும் இரண்டு மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பொழுது அவருடைய மகன்களில் ஒருவனுக்கு வயது பத்து மற்றும் இன்னொருவனுக்கு வயது ஆறு.

கிரகாம் ஸ்டைன் ஏழை எளிய இந்து மக்களுக்கு உதவி செய்வது போல் அவர்களை கட்டாயப்படுத்தி கிறித்துவ மதத்திற்கு மாற்றுவதாக இச்சம்பவத்திற்கு காரணம் கூறப்பட்டது.

தனது கணவர் கொலையுண்டதால், "க்ளேட்ஸ்" தனது சேவையை நிறுத்திவிடவில்லை. தன்னுடைய கணவனையும் மகன்களையும் கொன்றவர்களை மன்னிப்பதாக அறிவித்தார்.

தொழுநோயாளிகளுக்கான தனது சேவையை அவர்களுடனையே தங்கி தொடர்ந்து மேற்கொண்டிருக்கிறார்..

அவருடைய சேவையைப் போற்றும் வகையில், 2005ஆம் ஆண்டு "பத்மஸ்ரீ" விருதை வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. மேலும் 2015 ஆம் ஆண்டு "சமூக சேவைக்கான அன்னை தெரசா நினைவு வருது" க்ளேட்ஸ்'க்கு வழங்கப்பட்டது...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...