மற்றவர்களின் பாதிப்பு முற்றிலும் இல்லாமல் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மனதும் சில ஆசைகளை அடைக்காத்து வைத்திருக்கும்..
அவ்வாறு பெரும்பாலோனோரின் மனது அதிகம் காதலிக்கும் ஆசைகளில் ஒன்று பயணம்... ரயிலோ அல்லது பேருந்தோ, பயணம் என்றால் படு குஷியாகும் உள்ளம் கொண்டவர்களில் நானும் ஒருவன்..
இதுவரை பார்த்திட பலவிதமான மனிதர்களை, வேடிக்கையான விசயங்களை, கண் திறக்கும் நிகழ்வுகளை, மனதிற்கு மருந்து போடும் பாடல்களை, புத்தகத்தின் முக்கியத்துவத்தை பயணத்தினால் மட்டுமே முழுமையாக அறிய முடியும்..
அதிலும் ரயிலில் "ஜன்னல்" இருக்கையாகவும், பேருந்தில் ஓட்டுனருக்கு பக்கவாட்டில் முழுமையாக சாலையை பார்க்க முடிகின்ற இருக்கையாகவும் கிடைத்துவிட்டால் அதை விட மகிழ்ச்சியான ஒரு தருணம் அன்றைய நாளில் அமைந்துவிட முடியாது என்றே தோன்றுகிறது.
இதுவரையில் கேள்வியேப்பட்டிராத ஊர்ப் பெயர்கள், பெயர்களை மட்டுமே கொண்டிருக்கும் ஆறுகள், தண்ணீரை பார்த்து அரை நூற்றாண்டுக்கும் அதிகமான அணைகள், தனித்து விடப்பட்ட விதவைப் பெண்ணைப் போல அங்கொன்று இங்கொன்றுமாய் மாடி வீடுகள், கூட்டுக் குடும்பமாய் ஒன்றையொன்று தாங்கி நிற்கும் குடிசைகள், காலாவதியான மின்கம்பங்கள், ஓரிரு நிமிடம் மட்டும் ஜன்னலை உரசி உயிரற்று போகும் சாரல் துளிகள், நிறுத்தத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு வரும் சிறுவயதில் அதிகம் விரும்பி சாப்பிட்ட திண்பண்டங்கள் என மனதை இறந்த காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் எட்டி உதைத்து கடைசியில் நிகழ்காலத்திற்குள் நிறுத்தி வைக்கும் தந்திரம் பயணத்திற்கு மட்டுமே அத்துப்படி..
அருவியில் கொட்டும் நீரைப் போல அனுபவங்களை அள்ளிக் கொட்டும்.. அது தரும் அனுபவங்களை தாகம் தீர தீர, மூச்சு முட்ட முட்ட, மனசு நிறைய நிறைய பருகிக் கொண்டே இருக்கலாம். தீர்ந்தும் விடாது. சோர்ந்தும் விடாது.
பலமுறை சென்று வந்திருந்தாலும், ஒவ்வொரு முறை சொந்த ஊருக்கு செல்லும் போதெல்லாம் ஒரு புதுவித உணர்ச்சி உண்டாகும். மனது மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும்.
பேருந்திலும், ரயிலிலும் பலமுறை பயணித்திருந்த எனக்கு, சொந்த ஊரிலிருந்து ஒருமுறையாவது இருசக்கர வாகனத்தில் சென்னைக்கு வரவேண்டும் என்ற ஆசை வெகுநாளாக மனதில் நச்சடித்துக் கொண்டிருந்தது. அந்த ஆசையின் நச்சடிப்பு நண்பனால் நேற்று தீர்த்து வைக்கப்பட்டது.. அவனுக்கு முந்நூற்று முப்பது கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்ட நன்றி..
இருவர் மட்டுமே பங்கு எடுத்துக்கொண்டதாய் நான் நினைத்திருந்த பயணத்தில், வழியில் கருப்பஞ்சாறு விற்றுக் கொண்டிருந்த தாத்தா பாட்டி, காரில் ஜன்னலை ஒட்டி முகத்தைப் பொதித்து கண்ணாடியில் சித்திரம் வரைந்து கொண்டிருந்த குழந்தை, ஓய்விற்காக சற்று அமர இடங்கொடுத்த குட்டிச்சுவர், வாரா விருந்தினர்க்களுக்காக பந்தல் போட்டு காத்திருக்கும் மரங்கள், பஸ் ஸ்டாண்ட்களையே பார்த்திடாத பை பாஸ் ரோடுகள், தொட்டு விடுவது போல வந்த பறவை, துரத்தி வந்த சூரியன் ஆனால் முதுகில் ஏறிக் கொண்ட சந்திரன் என உடன் பயணித்தவர்கள் என் எண்ணத்தைப் பொய்யாக்கினர்.
எனக்குள் அடைந்து கிடந்த ஆசைக்கு கிடைத்த புதுமையானதோர் அனுபவம், இன்னும் பல ஆசைகளுக்கு நல்ல தீனியை அளித்துள்ளது. வெகுநாள் ஆசை நிறைவேறியதில் அலாதியான மகிழ்ச்சி...
கார்த்திக் பிரகாசம்...
அவ்வாறு பெரும்பாலோனோரின் மனது அதிகம் காதலிக்கும் ஆசைகளில் ஒன்று பயணம்... ரயிலோ அல்லது பேருந்தோ, பயணம் என்றால் படு குஷியாகும் உள்ளம் கொண்டவர்களில் நானும் ஒருவன்..
இதுவரை பார்த்திட பலவிதமான மனிதர்களை, வேடிக்கையான விசயங்களை, கண் திறக்கும் நிகழ்வுகளை, மனதிற்கு மருந்து போடும் பாடல்களை, புத்தகத்தின் முக்கியத்துவத்தை பயணத்தினால் மட்டுமே முழுமையாக அறிய முடியும்..
அதிலும் ரயிலில் "ஜன்னல்" இருக்கையாகவும், பேருந்தில் ஓட்டுனருக்கு பக்கவாட்டில் முழுமையாக சாலையை பார்க்க முடிகின்ற இருக்கையாகவும் கிடைத்துவிட்டால் அதை விட மகிழ்ச்சியான ஒரு தருணம் அன்றைய நாளில் அமைந்துவிட முடியாது என்றே தோன்றுகிறது.
இதுவரையில் கேள்வியேப்பட்டிராத ஊர்ப் பெயர்கள், பெயர்களை மட்டுமே கொண்டிருக்கும் ஆறுகள், தண்ணீரை பார்த்து அரை நூற்றாண்டுக்கும் அதிகமான அணைகள், தனித்து விடப்பட்ட விதவைப் பெண்ணைப் போல அங்கொன்று இங்கொன்றுமாய் மாடி வீடுகள், கூட்டுக் குடும்பமாய் ஒன்றையொன்று தாங்கி நிற்கும் குடிசைகள், காலாவதியான மின்கம்பங்கள், ஓரிரு நிமிடம் மட்டும் ஜன்னலை உரசி உயிரற்று போகும் சாரல் துளிகள், நிறுத்தத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு வரும் சிறுவயதில் அதிகம் விரும்பி சாப்பிட்ட திண்பண்டங்கள் என மனதை இறந்த காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் எட்டி உதைத்து கடைசியில் நிகழ்காலத்திற்குள் நிறுத்தி வைக்கும் தந்திரம் பயணத்திற்கு மட்டுமே அத்துப்படி..
அருவியில் கொட்டும் நீரைப் போல அனுபவங்களை அள்ளிக் கொட்டும்.. அது தரும் அனுபவங்களை தாகம் தீர தீர, மூச்சு முட்ட முட்ட, மனசு நிறைய நிறைய பருகிக் கொண்டே இருக்கலாம். தீர்ந்தும் விடாது. சோர்ந்தும் விடாது.
பலமுறை சென்று வந்திருந்தாலும், ஒவ்வொரு முறை சொந்த ஊருக்கு செல்லும் போதெல்லாம் ஒரு புதுவித உணர்ச்சி உண்டாகும். மனது மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும்.
பேருந்திலும், ரயிலிலும் பலமுறை பயணித்திருந்த எனக்கு, சொந்த ஊரிலிருந்து ஒருமுறையாவது இருசக்கர வாகனத்தில் சென்னைக்கு வரவேண்டும் என்ற ஆசை வெகுநாளாக மனதில் நச்சடித்துக் கொண்டிருந்தது. அந்த ஆசையின் நச்சடிப்பு நண்பனால் நேற்று தீர்த்து வைக்கப்பட்டது.. அவனுக்கு முந்நூற்று முப்பது கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்ட நன்றி..
இருவர் மட்டுமே பங்கு எடுத்துக்கொண்டதாய் நான் நினைத்திருந்த பயணத்தில், வழியில் கருப்பஞ்சாறு விற்றுக் கொண்டிருந்த தாத்தா பாட்டி, காரில் ஜன்னலை ஒட்டி முகத்தைப் பொதித்து கண்ணாடியில் சித்திரம் வரைந்து கொண்டிருந்த குழந்தை, ஓய்விற்காக சற்று அமர இடங்கொடுத்த குட்டிச்சுவர், வாரா விருந்தினர்க்களுக்காக பந்தல் போட்டு காத்திருக்கும் மரங்கள், பஸ் ஸ்டாண்ட்களையே பார்த்திடாத பை பாஸ் ரோடுகள், தொட்டு விடுவது போல வந்த பறவை, துரத்தி வந்த சூரியன் ஆனால் முதுகில் ஏறிக் கொண்ட சந்திரன் என உடன் பயணித்தவர்கள் என் எண்ணத்தைப் பொய்யாக்கினர்.
எனக்குள் அடைந்து கிடந்த ஆசைக்கு கிடைத்த புதுமையானதோர் அனுபவம், இன்னும் பல ஆசைகளுக்கு நல்ல தீனியை அளித்துள்ளது. வெகுநாள் ஆசை நிறைவேறியதில் அலாதியான மகிழ்ச்சி...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment