Skip to main content

Posts

Showing posts from July, 2017
எதேச்சையாக கேட்கும் பாடலும் படிக்கும் புத்தகமமுமே அன்றைய நாளுக்கான மனநிலையைப் பெரும்பாலும் தீர்மானிக்கின்றன...!!! கார்த்திக் பிரகாசம்...
கண்கள் அல்ல அவை கண்ணி வெடிகள்...!!! கார்த்திக் பிரகாசம்...
அந்தப்  புத்தகத்தில் கதாநாயகியின் பெயர்க்கூட அவள் பெயர் தான்...!!! ஆனால்  அவள் பெயரைக் கொண்ட அந்தக் கதாநாயகி அவனின் காதலைப்  புரிந்து ஏற்றுக் கொண்டுவிட்டாள்...!!! கார்த்திக் பிரகாசம்...
தவிர்த்தல்...! சிலவற்றைக் கேளாமல் தவிர்த்தலும் சிலவற்றைச் சொல்லாமல் தவிர்த்தலும் சிறப்பு...!!! கார்த்திக் பிரகாசம்...
அற்புதத் தருணங்களாலும் அற்பக் காரணங்களாலும் கள்ளச் சிரிப்பினாலும் செல்ல முறைப்பினாலும் அர்த்தமான அந்தக் காதல் அவளின் இறப்பிற்கு பின்னால் அலறும் ஆன்மாவின் அவல ஓலங்களுக்கிடையே அவன் மனதில் ஆண்டாண்டுகளாய் ஆராரிராரோ பாடிக் கொண்டிருக்கிறது...!!! கார்த்திக் பிரகாசம்...
ஒப்பந்தக் குடிநீரை ஊரெங்கும் ஒழுகி ஓடவிட்டு ஓடுகின்றன ஓட்டைகளாலான லாரிகள்...!!! கார்த்திக் பிரகாசம்...

கூலையா.!

பள்ளி ப்ரேயரில் என் வகுப்பின் வரிசைக்கு எப்பொழுதும் நான்தான் முதல் ஆளாக நிற்பேன் . எங்கோ பின்னால் நின்றுக் கொண்டிருந்தாலும் வகுப்பாசிரியர் கூப்பிட்டு முதல் ஆளாக நிற்க வைத்துவிடுவார். அப்பொழுதெல்லாம் ஆசிரியரே கூப்பிட்டு முன்னால் நிற்க வைக்கிறாரே என்று பெருமையாக இருக்கும். யாருக்கும் கிடைக்காத அங்கீகாரம் எனக்குத் தேடி வருவதாகத் தோன்றும். மேடையிலிருந்து தலைமை ஆசிரியர் என்னைப் பார்த்து பேசுவது போலவே இருக்கும். ஒரு பெருமித போதை தலைக்கேறும். அதை அனுபவிப்பதற்காகவே பெரும்பாலும் விடுமுறை எடுக்கமாட்டேன். ப்ரேயருக்கும் தாமதமாகச் செல்லமாட்டேன். அப்படியொரு போதையோடுதான் வெகுநாட்கள் பள்ளியில் சுற்றிக் கொண்டிருந்தேன். பின்புதான் புரிந்தது நான் தான் வகுப்பிலேயே உயரம் குறைவாக இருக்கிறேன் அதனால்தான் எந்த ஆசிரியராக இருந்தாலும் என்னைக் கூப்பிட்டு முதல் ஆளாக நிற்க வைக்கிறார்கள் என்று. சில நாட்களில் "கூலையா" என்பது பட்டப் பெயராகிவிட்டது. அதுவும் வகுப்பில் பல கார்த்திக்குகள் இருந்ததனால் "கூலையன் கார்த்திக்" என்பதே பாசப் பெயராகவும் நிலைத்துவிட்டது. என்னைவிட ஒருவன் உயரம் குறைவாக இருப்பான் ஆ...
அவள் தைரியமானவள்..! எப்பொழுது கண்ணிமையைத் தொட வேண்டும் எப்பொழுது கன்னங்களை நனைக்க வேண்டுமென்று கண்ணீருக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறாள்..! அவள் தைரியமானவள்..! சொல்ல தேவையில்லா கதைகளையும் சொல்லியும் ப்ரோஜனமில்லா ரகசியங்களையும் சிரிப்பென்ற கதவால் அடைத்து பூட்டி வைத்திருக்கிறாள்..! அவள் தைரியமானவள்..! தேடித் தேடி வந்தவன் திரும்பித் திரும்பிப் பார்த்தவன் திரும்பத் திரும்பப் பேசியவன் திடீரென்று ஒருநாள் தொலைந்த போதிலும் கொண்ட காதலை கொன்று விடாமல் வெளியுலகை வேடிக்கைப் பார்த்து அகவுலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்..! அவள் தைரியமானவள்..! கார்த்திக் பிரகாசம்...

ராஜீவ் காந்தி நினைவகம்..!

வெகுநாட்களாகச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த இடம். ஆனால் என்னவோ தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இன்று கண்டிப்பாகச் சென்றுவிடுவது என்று காலையிலேயே கிளம்பிவிட்டேன். ஒருநாள் பயணச் சீட்டை வாங்கி பையில் போட்டுக் கொண்டு திருப்பெரும்புதூர் பேருந்தில் ஏறினேன்.பள்ளிக்கு ஆசிரியர் வராத நாளில் பிள்ளைகள் குதூகலத்தில் மிதப்பது போல சூரியன் விடுமுறை எடுத்துக் கொண்டதனால் எந்தக் கட்டுப்பாடுமின்றி மேகங்கள் உறங்குவதும் தூறலைச் சிந்துவதும் நிறுத்துவதுமாக வானில் விளையாடி ரம்மியமான சீதோஷ்ணநிலையை உண்டாக்கிக் கொண்டிருந்தன.கிட்டத்தட்ட ஒன்றரைமணி நேரத்திற்கு மேலாக இருந்த பயணம். பயணத்தின் போது இருந்த மனநிலை நினைவகத்தை அடைந்த போது இருக்கவில்லை. கற்களில் பொறிக்கப்பட்ட "ராஜிவ் காந்தி நினைவகம்" என்ற வாசகத்தைப் பார்த்ததும் மனதளவில் ஒரு தாக்கம். பின்னே வெறுமனே ஒரு தலைவரின் நினைவகம் என்றளவில் ராஜீவ் காந்தியின் நினைவகத்தைக் கடந்து விடமுடியாதே..! அதற்கு பின்னால் ஓர் இனம் அனுபவித்தக் கொடுமைகளும், அரசியல் துரோகத்திற்கு அவர்கள் கொடுத்த விலைமதிப்பில்லாத உயிர்களும், ரத்தத் துளிகளும் கட்டுப்படுத்தயியலா ...
கண்களைப் பார்த்து பேசாமல் கம்பெனி ஐடி கார்டைப் பார்த்து பேசும் கார்ப்பரேட் கல்ச்சர்...! கார்த்திக் பிரகாசம்...
அதிகாலை இளம்பனியில் புறாவொன்று வீட்டிற்குள் வந்திருந்தது..! எப்படி உட்புகுந்ததென்று தெரியவில்லை..! வழித் தேடி வந்ததா வழித் தவறி வந்ததா புரியவில்லை..! என்னைப் பார்த்து பதறவுமில்லை பயப்படவுமில்லை..! ஆனால் சொல்லாமல் வந்த விருந்தாளி போல கண்களில் ஒரு தயக்கம்..! நேராக குசினிக்குள் சென்று சிறகுகளுக்கு வலிக்காமல் கால்களை மடக்கி அமர்ந்து கொண்டது..! யாருக்குத் தெரியும் முன்பொரு காலத்தில் இந்த வீடு அந்தப் புறாவின் கூடாக இருந்திருக்கலாம்...! கார்த்திக் பிரகாசம்...
சும்மானாச்சும் கோச்சுக்க..! ஏன்டி..! பரவால்ல கோச்சுக்க..! எதுக்குடி..! எதுக்கோ கோச்சுக்க..! சரி.. கோச்சிக்கிட்டேன்..! டேய்.! டேய்.! கோச்சிக்காத..! கார்த்திக் பிரகாசம்...
நேரத்திற்கு என்ன அவசரம்..? யாரைப் பார்க்க இவ்வளவு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது பணிபுரிந்துக் கொண்டிருக்கும் அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்து இன்றோடு ஒரு வருடம் முடிந்துவிட்டது. முடிந்துவிட்டது என்று சொல்வதைவிட பள்ளத்தில் ஊற்றிய தண்ணீரைப் போல வெகுவேகமாக ஓடிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். படித்து முடித்த கையோடு வேலைத் தேடி அலைவது வேறு. ஆனால் ஒரு அலுவலகத்தில் இரண்டு வருடங்கள் பணிச் செய்துவிட்டு பிறகு அந்த வேலை வேண்டாமென்று விட்டுவிட்டு வேறு வேலைத் தேடி அலைவதெல்லாம் நரக வேதனை. சென்னையைப் பொறுத்தவரையில் அது நகர வேதனை. "டீக் குடிக்க வேண்டும் என்றால் கூட கையில் காசு இல்லை என்பதனால் நண்பன் வரும் வரை காத்திருப்பது. நேற்று இரவே அவன்தான் வாங்கி தந்தான் இன்றும் கேட்டால் தப்பாக எடுத்துக் கொள்வான் என்று பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருக்கும் போது "இல்ல மச்சான் எனக்கு பசிக்கல நீ சாப்பிட போ" என்று பொய் சொல்வது. மாதாமாதம் வாடகை மற்றும் இதரச் செலவுகளைக் கணக்கிடும் போதெல்லாம் " சங்கடத்தில் எங்கேயோ காணாமல்" போய்விடுவது. காலை உணவுச் செலவைத் தவிர்ப்பதற்காக இரவு தாமதமாக தூங...
ஏர் பூட்டி நிலத்தை உழ எருது இல்லை மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுதுவிட்டான் விவசாயி அதனால் நமக்கென்ன நமக்கு தான் வேதனைப் பட வேறு விஷயங்கள் இருக்கின்றனவே...!!! கார்த்திக் பிரகாசம்...
மொபைல் செயலிகளை(ஆப்) உருவாக்க ஆர்வமுள்ளவர்களுக்கு சென்னை ஐஐடியின் சார்பாக ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 8 வாரம் கொண்ட இந்த பயிற்சியில் சேர எவ்வித கட்டணமும் கிடையாது. பயிற்சி முற்றிலும் இலவசம். அடுத்தகட்ட ஆன்லைன் பயிற்சி ஜூலை 24ம் தேதி தொடங்குகிறது. ஆர்வமுள்ள நண்பர்கள் கீழே குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவுச் செய்து கொள்ளவும். இணையதள முகவரி: www.imad.tech கார்த்திக் பிரகாசம்...
சாலையில் தேங்கியிருந்த தண்ணீரில் முதன் முதலாகத் தன் முகத்தைப் பார்த்த ஆனந்தத்தில் ஊரையே எழுப்பிக் குரைத்து கொண்டிருந்தது அந்த நாய்க்குட்டி...!!! கார்த்திக் பிரகாசம்...
என்ன சாதிச் சண்டையோ மதத் தகராறோ இல்லை மாட்டுக் கறி பிரச்சனையோ யாருக்கும் தெரியாமல் இரவில் மட்டும் வந்து மண்ணைச் சந்தித்து செல்கிறது மழை...!!! கார்த்திக் பிரகாசம்...
அம்மாவிடம் இருக்கும் நெருக்கம் பெரும்பாலானோருக்கு அப்பாவிடம் ஏற்படுவதில்லை. அப்பா என்ற பிம்பம் அப்படியொரு இடைவெளியை தன்னிச்சையாக உண்டாக்கிவிடுகிறது. அதிலும் குறிப்பாக மகன்களுக்கு . அலுவலக நண்பரின் அப்பா சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஒரு சமயம் நானும் அவரும் பேசிக் கொண்டிருக்கையில் பேச்சு தானாகவே அவருடைய அப்பாவைப் பற்றித் திரும்பியது. ஒரு செயலிலோ அல்லது நடத்தையிலோ கூட அப்பாவை அவர் குறைபட்டுக் கொள்ளவில்லை. நேர்மறையாகவே சொல்லிக் கொண்டிருந்தார். அதை வெறுமனே சொல்லவில்லை என்பதும் அவருடைய கண்களில் தெரிந்தது. அப்பா என்ன செய்தாரோ அதோடு அப்பாவிடமிருந்து எனக்கு என்ன கிடைக்கலையோ அதையும் சேர்த்து என் மகனுக்குச் செய்ய வேண்டும் என்றார். " அப்பாவிடமிருந்து உங்களுக்கு என்ன கிடைக்கவில்லை .." ஏதோ ஒன்று சொல்லுங்கள் என்றுக் கேட்டேன். நான் இன்னைக்கி ஓரளவுக்கு நல்ல நிலைமையில இருக்கண்ணா அதுக்கு எங்கப்பா தான் காரணம். ஆனா " எங்க அப்பாவ நான் கட்டிபிடிச்சதே இல்ல " அதனால தினமும் என் மகன்கிட்ட என்ன கட்டிபிடிக்கச் சொல்லிக் கேட்குறேன் . கார்த்திக் பிரகாசம்...
அவளுக்கு சினிமா பார்ப்பது என்றால் அவ்வளவு இஷ்டம். சிறுவயதில் இருந்தே எப்பொழுதும் அம்மாவிடம் சினிமாவிற்கு கூட்டிப் போகச் சொல்லி அடம் பிடித்துக் கொண்டே இருப்பாள். "பொறந்தது ஒரே ஒரு புள்ள. சீவி சிங்காரிச்சி நாலு எடத்துக்கு போயிட்டு வந்திட்டு இருந்தா ஊரு கண்ணு எப்பவும் ஒரே மாதிரி இருக்குமா...!பொம்பள புள்ளனா பொத்தி பொத்தி வளத்தனும். ஊரு கண்ணு படர மாதிரி வளத்தக் கூடாது" என்று அவளின் பெற்றோர்கள் அவளைச் சினிமாவிற்கு அழைத்துச் சென்றதே இல்லை. அவர்களும் போனதில்லை.அது வேறு விஷயம். தியேட்டரில் ரஜினி படங்களை ரகளையாக விசிலடித்துப் பார்ப்பதாகவும், அழுகைக் காட்சிகளில் அவள் மட்டும் கதாநாயகியின் நிலையைக் கண்டு தனியாளாக வருத்தப்படுவதாகவும் அடிக்கடி கனவுகள் வரும். சில நேரங்களில் கனவுகளோடு கண்ணீரும் வந்திருக்கும். மறுக்கப்பட்டே வளர்ந்ததாலோ என்னவோ அவளின் மனதில் சினிமாவிற்கு சென்று படம் பார்ப்பது பெரிய லட்சியமாகவே உருமாறியிருந்தது. கல்லூரியில் படிக்கும் போது ஒருமுறை தோழியோடு செல்லலாம் என்று திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்தாள். மதிய வகுப்பை மட்டம் போட்டுவிட்டு செல்கையில் பாதிவழியிலேயே அவளு...