Skip to main content

கூலையா.!

பள்ளி ப்ரேயரில் என் வகுப்பின் வரிசைக்கு எப்பொழுதும் நான்தான் முதல் ஆளாக நிற்பேன் . எங்கோ பின்னால் நின்றுக் கொண்டிருந்தாலும் வகுப்பாசிரியர் கூப்பிட்டு முதல் ஆளாக நிற்க வைத்துவிடுவார். அப்பொழுதெல்லாம் ஆசிரியரே கூப்பிட்டு முன்னால் நிற்க வைக்கிறாரே என்று பெருமையாக இருக்கும். யாருக்கும் கிடைக்காத அங்கீகாரம் எனக்குத் தேடி வருவதாகத் தோன்றும். மேடையிலிருந்து தலைமை ஆசிரியர் என்னைப் பார்த்து பேசுவது போலவே இருக்கும். ஒரு பெருமித போதை தலைக்கேறும். அதை அனுபவிப்பதற்காகவே பெரும்பாலும் விடுமுறை எடுக்கமாட்டேன். ப்ரேயருக்கும் தாமதமாகச் செல்லமாட்டேன். அப்படியொரு போதையோடுதான் வெகுநாட்கள் பள்ளியில் சுற்றிக் கொண்டிருந்தேன். பின்புதான் புரிந்தது நான் தான் வகுப்பிலேயே உயரம் குறைவாக இருக்கிறேன் அதனால்தான் எந்த ஆசிரியராக இருந்தாலும் என்னைக் கூப்பிட்டு முதல் ஆளாக நிற்க வைக்கிறார்கள் என்று.

சில நாட்களில் "கூலையா" என்பது பட்டப் பெயராகிவிட்டது. அதுவும் வகுப்பில் பல கார்த்திக்குகள் இருந்ததனால் "கூலையன் கார்த்திக்" என்பதே பாசப் பெயராகவும் நிலைத்துவிட்டது.

என்னைவிட ஒருவன் உயரம் குறைவாக இருப்பான் ஆனால் அவனும் என்னை "கூலையா" என்றுதான் கூப்பிடுவான்.

பள்ளி நண்பன் ஒருவன் வெகுநாட்களுக்குப் பிறகு அலைபேசினான்.

சொல்லு டா மாப்ள." எப்படி இருக்க..

நான் நல்ல இருக்கேன் டா கூலையா..! நீ எப்படி இருக்க..

மாப்ள நான் இப்போ வளந்துட்டேன் டா...!

சூப்பர்'டா கூலையா..

டேய்.. இப்போதான சொன்னேன் நான் வளந்துட்டேனு மறுபடியும் கூலையான்னு சொல்ற..

வளந்தாலும் வளரலன்னாலும் எனக்கு நீ கூலையன் தான் டா கூலையா. ஊருக்கு வரும் போது போன் பண்ணு என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டான்..

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...