நேரத்திற்கு என்ன அவசரம்..? யாரைப் பார்க்க இவ்வளவு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது பணிபுரிந்துக் கொண்டிருக்கும் அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்து இன்றோடு ஒரு வருடம் முடிந்துவிட்டது. முடிந்துவிட்டது என்று சொல்வதைவிட பள்ளத்தில் ஊற்றிய தண்ணீரைப் போல வெகுவேகமாக ஓடிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
படித்து முடித்த கையோடு வேலைத் தேடி அலைவது வேறு. ஆனால் ஒரு அலுவலகத்தில் இரண்டு வருடங்கள் பணிச் செய்துவிட்டு பிறகு அந்த வேலை வேண்டாமென்று விட்டுவிட்டு வேறு வேலைத் தேடி அலைவதெல்லாம் நரக வேதனை. சென்னையைப் பொறுத்தவரையில் அது நகர வேதனை.
"டீக் குடிக்க வேண்டும் என்றால் கூட கையில் காசு இல்லை என்பதனால் நண்பன் வரும் வரை காத்திருப்பது. நேற்று இரவே அவன்தான் வாங்கி தந்தான் இன்றும் கேட்டால் தப்பாக எடுத்துக் கொள்வான் என்று பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருக்கும் போது "இல்ல மச்சான் எனக்கு பசிக்கல நீ சாப்பிட போ" என்று பொய் சொல்வது. மாதாமாதம் வாடகை மற்றும் இதரச் செலவுகளைக் கணக்கிடும் போதெல்லாம் " சங்கடத்தில் எங்கேயோ காணாமல்" போய்விடுவது. காலை உணவுச் செலவைத் தவிர்ப்பதற்காக இரவு தாமதமாக தூங்கி அடுத்தநாள் மதியமாக எழுவது. மதிய உணவை முப்பது ரூபாய்க்குள் முடிப்பது. அறையில் சிதறிக் கிடக்கும் சில்லறைகளையெல்லாம் தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்வது. ஆறுதலுடன் சேர்ந்தே வரும் அறிவுரைகளை சகித்துக் கொள்வது. மொட்டைமாடியில் தனியாகப் பேசிக் கொள்வது. ஆபாச படங்களுக்கு அடிமையாகிப் போனது. கடல் அலையில் கவலைகளை கரைக்க முயன்றது. தாடியை காதலிக்க தொடங்கியது. தனிமையை ரசிக்க பழகிக் கொண்டது. நல்ல வேலை அதிக சம்பளம் என்று அன்றைக்கான கனவுகளை உருவாக்கிக் கொண்டு பிறகு தூங்கச் செல்வது...!" என அந்நாட்கள் கற்பித்த மற்றும் திணித்த அனுபவங்களெல்லாம் வாழ்நாள் மொத்தத்திற்குமான படிப்பினைகள்.
பூமியைப் போல வேலைத் தேடுபவனின் அல்லது இல்லாதவனின் வயிறும் பெரும்பாலும் நீரால்தான் நிரம்பியுள்ளது. "நிரம்பியிருந்தது"...! கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் மேல் நேர்முகத் தேர்வு நேர்முகத் தேர்வாக சென்னை முழுதும் அலைந்து இறுதியில் அந்த வேலையே அலுத்து போய் என்னிடம் வந்து சேர்ந்ததாகத் தான் இப்போதும் இந்த வேலையை நினைக்கத் தோன்றுகிறது.
காலை அலுவலக வளாகத்திற்குள் நுழையும் போது நீண்ட வரிசையில் கைகளில் கோப்புகளுடன் நிறைய பேர் நின்றுக் கொண்டிருந்தனர். வரிசையின் கடைசியில் என்னைப் போலவே ஓர் உருவம் வியர்வைத் துளிகளுடனும் முகத்தில் கவலைகளுடனும் என்னையே உற்று நோக்கிக் கொண்டிருந்தது.
"கண்டிப்பாக இந்த வேலை உனக்கு கிடைக்கும்.. வாழ்த்துக்கள்..!" என்று சொல்லிவிட்டு நான் கிளம்பிவிட்டேன். ஆனால் அந்த உருவம் வெகுநேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது..
கார்த்திக் பிரகாசம்...
படித்து முடித்த கையோடு வேலைத் தேடி அலைவது வேறு. ஆனால் ஒரு அலுவலகத்தில் இரண்டு வருடங்கள் பணிச் செய்துவிட்டு பிறகு அந்த வேலை வேண்டாமென்று விட்டுவிட்டு வேறு வேலைத் தேடி அலைவதெல்லாம் நரக வேதனை. சென்னையைப் பொறுத்தவரையில் அது நகர வேதனை.
"டீக் குடிக்க வேண்டும் என்றால் கூட கையில் காசு இல்லை என்பதனால் நண்பன் வரும் வரை காத்திருப்பது. நேற்று இரவே அவன்தான் வாங்கி தந்தான் இன்றும் கேட்டால் தப்பாக எடுத்துக் கொள்வான் என்று பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருக்கும் போது "இல்ல மச்சான் எனக்கு பசிக்கல நீ சாப்பிட போ" என்று பொய் சொல்வது. மாதாமாதம் வாடகை மற்றும் இதரச் செலவுகளைக் கணக்கிடும் போதெல்லாம் " சங்கடத்தில் எங்கேயோ காணாமல்" போய்விடுவது. காலை உணவுச் செலவைத் தவிர்ப்பதற்காக இரவு தாமதமாக தூங்கி அடுத்தநாள் மதியமாக எழுவது. மதிய உணவை முப்பது ரூபாய்க்குள் முடிப்பது. அறையில் சிதறிக் கிடக்கும் சில்லறைகளையெல்லாம் தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்வது. ஆறுதலுடன் சேர்ந்தே வரும் அறிவுரைகளை சகித்துக் கொள்வது. மொட்டைமாடியில் தனியாகப் பேசிக் கொள்வது. ஆபாச படங்களுக்கு அடிமையாகிப் போனது. கடல் அலையில் கவலைகளை கரைக்க முயன்றது. தாடியை காதலிக்க தொடங்கியது. தனிமையை ரசிக்க பழகிக் கொண்டது. நல்ல வேலை அதிக சம்பளம் என்று அன்றைக்கான கனவுகளை உருவாக்கிக் கொண்டு பிறகு தூங்கச் செல்வது...!" என அந்நாட்கள் கற்பித்த மற்றும் திணித்த அனுபவங்களெல்லாம் வாழ்நாள் மொத்தத்திற்குமான படிப்பினைகள்.
பூமியைப் போல வேலைத் தேடுபவனின் அல்லது இல்லாதவனின் வயிறும் பெரும்பாலும் நீரால்தான் நிரம்பியுள்ளது. "நிரம்பியிருந்தது"...! கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் மேல் நேர்முகத் தேர்வு நேர்முகத் தேர்வாக சென்னை முழுதும் அலைந்து இறுதியில் அந்த வேலையே அலுத்து போய் என்னிடம் வந்து சேர்ந்ததாகத் தான் இப்போதும் இந்த வேலையை நினைக்கத் தோன்றுகிறது.
காலை அலுவலக வளாகத்திற்குள் நுழையும் போது நீண்ட வரிசையில் கைகளில் கோப்புகளுடன் நிறைய பேர் நின்றுக் கொண்டிருந்தனர். வரிசையின் கடைசியில் என்னைப் போலவே ஓர் உருவம் வியர்வைத் துளிகளுடனும் முகத்தில் கவலைகளுடனும் என்னையே உற்று நோக்கிக் கொண்டிருந்தது.
"கண்டிப்பாக இந்த வேலை உனக்கு கிடைக்கும்.. வாழ்த்துக்கள்..!" என்று சொல்லிவிட்டு நான் கிளம்பிவிட்டேன். ஆனால் அந்த உருவம் வெகுநேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது..
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment