Skip to main content
அம்மாவிடம் இருக்கும் நெருக்கம் பெரும்பாலானோருக்கு அப்பாவிடம் ஏற்படுவதில்லை. அப்பா என்ற பிம்பம் அப்படியொரு இடைவெளியை தன்னிச்சையாக உண்டாக்கிவிடுகிறது. அதிலும் குறிப்பாக மகன்களுக்கு.

அலுவலக நண்பரின் அப்பா சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஒரு சமயம் நானும் அவரும் பேசிக் கொண்டிருக்கையில் பேச்சு தானாகவே அவருடைய அப்பாவைப் பற்றித் திரும்பியது. ஒரு செயலிலோ அல்லது நடத்தையிலோ கூட அப்பாவை அவர் குறைபட்டுக் கொள்ளவில்லை. நேர்மறையாகவே சொல்லிக் கொண்டிருந்தார். அதை வெறுமனே சொல்லவில்லை என்பதும் அவருடைய கண்களில் தெரிந்தது.

அப்பா என்ன செய்தாரோ அதோடு அப்பாவிடமிருந்து எனக்கு என்ன கிடைக்கலையோ அதையும் சேர்த்து என் மகனுக்குச் செய்ய வேண்டும் என்றார்.

"அப்பாவிடமிருந்து உங்களுக்கு என்ன கிடைக்கவில்லை.." ஏதோ ஒன்று சொல்லுங்கள் என்றுக் கேட்டேன்.

நான் இன்னைக்கி ஓரளவுக்கு நல்ல நிலைமையில இருக்கண்ணா அதுக்கு எங்கப்பா தான் காரணம். ஆனா "எங்க அப்பாவ நான் கட்டிபிடிச்சதே இல்ல" அதனால தினமும் என் மகன்கிட்ட என்ன கட்டிபிடிக்கச் சொல்லிக் கேட்குறேன்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...