Skip to main content
கலையின் மீது
அளவில்லா
காதல்...!!!
தேடித் தேடிக்
கலையைக்
காதலித்தாள்...!!!
காண்பனவற்றையெல்லாம்
கலையெனக்
கண்களில்
அப்பிக் கொண்டாள்...!!!
கேட்பனவற்றையெல்லாம்
கலையெனச்
செவிகளில்
அள்ளிப்
பூசிக்கொண்டாள்...!!!
அவ்வளவு காதல்
அடங்க மறுக்கும் காதல்...!!!
காரணமறிய முற்பட்டாள்
கன்னிகை
கடைசியில்
காதலிப்பதே
அருங்கலையென
கண்டுக்கொண்டாள்...!!!


கார்த்திக் பிரகாசம்...

Comments