Skip to main content

காலையில் அம்மாவுடன் அலைபேசும் போது பேச்சுவாக்கில் நேற்றிரவு தூங்கத் தாமதாகிவிட்டது என்றார். ஏன் என்றதற்கு "லோக்கல் சேன்னல்ல நம்ம விஜய் படம் போட்ருந்தான். அதான் முடியுற வரைக்கும் பாத்துட்டு தூங்க லேட் ஆயிடுச்சு" என்றார்.நினைவுகள் என்னை பதின்ம வயது காலத்தில் கொண்டுப் போய் போட்டது. யோசித்துப் பார்த்தால் பெரும்பாலான விஜய் படங்களை நான் அம்மாவுடன்தான் பார்த்திருக்கிறேன். அது பிரியமானவளே ஆகட்டும், பத்ரி, ஷாஜஹான், வசீகரா,சச்சின், ஆதி, குஷி, கில்லி போக்கிரி ஆகட்டும். எல்லாம் அம்மாவோடு தான். துள்ளாத மனம் துள்ளும் படத்தில்  "கழிவறையில் விஜய் அழும் காட்சியைத்" தொலைக்காட்சியில் பார்த்தே விஜய்யோடு சேர்ந்து நானும் அம்மாவும் பலமுறை  அழுதிருக்கிறோம். அம்மாவுடன் பார்த்த விஜய்யின் அனைத்து படங்களுமே மிகவும் பசுமையானவை.  மனதிற்கு இதமானவை. இன்றும் அந்த படங்களையோ, அந்த படங்களின் பாடல்களையோப் பார்க்கும் போது இனிமையாக இருக்கும்.

சொல்லப் போனால் அம்மாவுடன் படம் பார்க்கும் வரை விஜய்யை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தனியாகச் சினிமாவிற்குச் செல்ல ஆரம்பித்த பிறகு விஜய்யின் மீதான ஈர்ப்புக் குறைந்துவிட்டது. பெரும்பாலான படங்கள் கைத் தட்டலுடன் முடிந்துவிட்டதே தவிர மனதைத் தொடவில்லை. மனதைத் தொடாததற்கு என்ன காரணமென்று யோசித்துப் பார்த்தேன். 
  
அம்மாவுடன் செல்லாததுக் கூட காரணமாக இருக்கலாம். தொட்டு போன அந்த தென்றலை மீண்டுமொருமுறைச் சீண்டிப் பார்க்க வேண்டுமென்ற ஆசைத் துள்ளியெழுந்தது. அதனால் விஜய்யின் அடுத்தப் படத்திற்குக் கண்டிப்பாக அம்மாவுடன்தான் செல்ல வேண்டுமென்று முடிவுச் செய்து அலைபேசியைத் துண்டித்தேன். அலுவலகத்தை அடையும் போது எங்கேயோ "போக்கிரி பொங்கல்" பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...