Skip to main content
அது
வண்ணங்களில் தீட்டப்பட்ட
ஓவியமல்ல...!!!
ஆழ்மனதினடியில்
உறைந்து போன
உணர்வுக் குமுறல்களில்
திரண்டு தேங்கிவிட்ட
உணர்வோவியம்...!!!

அது
சொற்களில் திறம்பட
தேனூற்றி
ஏட்டிலேற்றிய
கவிதையல்ல...!!!
வாழந்த நாட்களிலும்
வாழ்விக்கும் நொடிகளிலும்
திளைத்தெடுத்த
வார்த்தை வைரங்கள்...!!!

கார்த்திக் பிரகாசம்...

Comments