Skip to main content

Posts

Showing posts from April, 2018

உரையாடல் #1

மச்சான்..!  ஒங்கிட்ட ஒன்னு கேக்கட்டுமா.? கேளுடி கண்ணு.. எங்கப்பனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்..? ராசாத்தி.!  உங்கப்பன் சாதி சனத்துக்காக வாழ்றான். நான் என் பொஞ்சாதி மவனுக்காக வாழ்றேன். அவ்வளவுதான் வித்தியாசம். கார்த்திக் பிரகாசம்...

அகோரப் பசி

செத்த எலியை இரத்தம் படிந்த செவ்வலகால் கொத்திக் கொதறி ஓரமாக இழுத்துக் கொண்டிருக்கின்றன காக்கைகள் தெருவோர குப்பைத் தொட்டியில் எஞ்சியிருந்த எச்சில் இலையின் எலும்புத் துண்டைக் கைப்பற்ற சத்தமாகக் குரைத்து சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன தெரு நாய்கள் வேப்ப மரத்தின் உச்சிக் கிளையில் சருகாகக் கிடந்த காய்ந்த இலைகளைக் குத்திக் கொண்டிருக்கின்றன புறாக்கள் டீக்கடையின் வாசலில் கிழிந்த சேலையில் கையேந்தி நின்றுக் கொண்டிருக்கிறாள் வயதான கிழவி எல்லோரையும் மிஞ்சிய அகோரப் பசியில் அனலைக் கக்கிக் கொண்டிருக்கிறான் கதிரவன் கார்த்திக் பிரகாசம்...

மகள் பாடும் தாலாட்டு

மகள் தன் தந்தைக்கு எழுதுகிறாள் அதிர்ந்து பேசியதில்லை  அதிகம் திட்டியதில்லை  கஷ்டத்தைச் சொல்லி புலம்பியதில்லை  கவலையை எண்ணி வருந்தியதில்லை  தாத்தன்  பெரியாரை கற்றறிந்ததில்லை  ஆனால்  பெண் பிள்ளையென்று எனக்கு  கட்டுப்பாடுகள்  விதித்ததில்லை   வயதாயிற்று  வதுவை  முடிக்க வேண்டுமென்று வற்புறுத்தியதில்லை  என் இமைகள் வடிக்கும்  திரவ வார்த்தைகளின் திண்ணத்தை காற்றின் ஆறுதல் மொழியால்  மென்மையாக வருடிக் கொடுத்து துணைநின்று தீர்த்திடாத   துயிரில்லை துயிலும் போதும்      அரணாய் சூழ்ந்திருக்கும்  அந்த ஸ்பரிசம்   உங்கள் உருவம்  அருகில் இருக்கையில்  துன்பத் துயரங்கள்   என்னைத் தீண்டியதில்லை  கஷ்டக் கவலைகள்   என்னை அண்டியதில்லை  என் விருப்பு வெறுப்புகளுக்கு  எப்போதும் செவிச் சாய்க்கும்  உங்கள் மனதுக்கு  மகளாய் பிறந்ததற்கு  நான் மகிழ்ந்திடாத  நாளில்லை  இந்த ரகசியம்  இதுந...

உலகப் புத்தக நாள்

வாழ்ந்திடாத வாழ்க்கையை வாழ்ந்தது போல் அனுபவிக்கவும் அனுபவிக்கும் வாழ்க்கையை சற்றுநேரம் விலக்கி விட்டு இளைப்பாறவும் விலகி நின்று நிதானமாக வேடிக்கை பார்க்கவும் காலம் கடந்து வாழ்விடம் துறந்து சுயநிலை மறந்து பரதேசம் பயணிக்கவும் புத்தகம் வாசிப்போம் கார்த்திக் பிரகாசம்...

அட்சயம்

மொத்த சக்தியையும் ஸ்ட்ராப் போட்டு உறிஞ்சிக் கொண்டிருக்கும் வெயிலைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், வடியும் வேர்வையை விரல்களில் வழித்தெறிந்துவிட்டு முத்துவும் பாலுவும் தேவியோடு விளையாடிக் கொண்டிருந்தனர். கோடை விடுமுறை வந்துவிட்டாளே நேரம், பசி அறியாமல் எந்நேரமும் விளையாட்டுத் தான். பாலுவும் தேவியும் அண்ணண் தங்கை. பாலு தேவியின் வீட்டிற்குப் பக்கத்தில் தான் முத்துவின் வீடு.மூவரும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். பாலுவும் முத்துவும் ஏழாம் வகுப்பு. தேவி ஒன்பதாம் வகுப்பு. அன்றும் வழக்கம் போல மூவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். பாலுவின் அம்மா வந்து, ' கடைக்கு போகணும்ல. ரெண்டு பேரும் சீக்கிரம் வாங்க ' என்று இருவரையும் அழைத்தார். பொதுவாக மூவரும் விளையாடிக் கொண்டிருக்கும் போது இவ்வாறு அம்மா அழைக்கும் போதெல்லாம் எப்போதுமே மறுக்கும் பாலுவும் தேவியும் அன்று உடனே கிளம்பத் தயாராகினர். முத்துவிற்கு அது அதிர்ச்சியாய் இருந்தது. ஏனென்றால் விளையாட்டுக்கு அவர்களை விட்டால் அவனுக்கு வேறு கூட்டு இல்லை. விளையாட்டில் மட்டுமல்ல. எல்லாவற்றிற்கும் அவர்கள்தான் கூட்டு. இவர்களிருவரும் சென்றுவிட்டால் நாள் முழுவதும் வ...

புலரியின் மடியில்

நானும் நண்பனும் இன்னொரு நண்பனைச் சந்திப்பதற்காக நாவலூருக்கு 'ஓலா ஷேரில்" சென்றுக் கொண்டிருந்தோம். ஓட்டுநருக்கு நாற்பதைந்து முதல் ஐம்பது வயதுக்குள் இருக்கும். அவர் வேலைக்குப் புதிதென்பது வழித் தெரியாமல் தவிக்கும் அவருடைய விழிகளிலிருந்துக் கண்டுகொள்ள முடிந்தது. முழுக்க முழுக்க வெகுளித்தனத்தால் தீட்டப்பட்டிருந்தது அவருடைய முகம். சிறிது நேரம் பயணப்பட்ட பிறது அவரே பேச்சுக் கொடுத்தார். "ஏந்தம்பி. நீங்க ஐ.டி. கம்பெனில வேலப் பாக்குறீங்களா.?" 'ஆமாங்கண்ணா'. இந்த 'லேப்டாப்' லாம் வாங்க ரொம்ப செலவாகுமா தம்பி.? மாசாமாசம் கட்டுற மாதிரிலாம் தருவாங்களா.? அதெல்லாம் தருவாங்களேண்ணா.. எனக்கு சம்பளம் கம்மி தம்பி. இப்போ தான் கொஞ்ச நாளா இந்த ஓலா கேப் ஓட்றேன். இதுக்கு முன்னாடி கூலி வேலைக்குத் தான் போய்கிட்டு இருந்தேன். அவங்க பேங்க் டிரான்ஸ்கேசன் கேப்பாங்களா.? என் அக்கௌன்ட்ல அதிகபட்சம் இருபதாயிரம் தான் இருக்கும் தம்பி. 'அதெல்லாம் ஒண்ணும் பிரச்சன இல்ல' நீங்க ஷோரூம்ல போய் கேட்டுப் பாருங்க. சரி.! யாருக்குண்ணா லேப்டாப்.? என் மவனுக்குத் தான் தம்பி. இன்ஜினிய...

சந்தித்த நாள்

என்றும் போலவே அன்றும் பொழுது புலர்ந்தது எனினும் அன்றைய நாள் என்றும் போல முடியவில்லை பூக்கள் ராகங்கள் பாட காலை கதிரவன் உன்னை எனக்குள் அழைத்து வந்தது உன்னைச் சந்தித்தேன் மூர்ச்சையானேன் மூச்சுவிடவும் சிரமம் கொண்டேன் நேரத்தோடு முரண்பட்டேன் சிந்தித்திடாத இன்பங்களைச் சந்தித்தேன் சந்தித்திருந்த வேதனைகளையெல்லாம் நிந்தித்தேன் உன்னை என்னிடமே விட்டுவிட்டு என்னை வேறெங்கோவொரு புது பூமியில் புகுத்தியது அன்றைய இரவு  அதன்பின் பல பகல் இரவுகள் பறந்துவிட்டன ஆனால்  அந்தவொரு  பகலிரவு மட்டும் உள்ளத்தில் உறைந்து உதிரத்தில் கலந்து உயிருக்குள் ஊடுருவிக் கொண்டது...!!! ஐந்து பத்து வருடங்களல்ல ஆயுசுக்கும்  மறக்காது நாம் சந்தித்த நாள்...!!! கார்த்திக் பிரகாசம்...

தோட்டியின் மகன்

எழுபத்திரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் தகழி.சிவசங்கரப் பிள்ளை எழுதிய, தமிழில் சுந்தர ராமசாமி அவர்களால் மொழிப் பெயர்க்கப்பட்ட நாவல் 'தோட்டியின் மகன்'. "தான் செய்யும் தோட்டி வேலை தன் மகனுக்குக் கண்டிப்பாகக் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு தந்தை. நான் ஒரு தோட்டியாக இருக்கலாம் ஆனால் என் மகன் கண்டிப்பாகத் ஒரு தோட்டியாகிவிட கூடாது என்ற வைராகியத்தோடு வாழும் இன்னொரு தந்தை. தோட்டி என்றொரு சமூகத்தை உருவாக்கி அவர்களின் அறியாமையையும், இயலாமையையும் தங்களின் மூல கருவிகளாக்கிக் கொண்டு அவர்களை சிதறவிடாமல், சிந்திக்கவிடாமல், யோசிக்கவிடாமல் முன்னேறவிடாமல் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் அடிமையாக வைத்திருக்கும் அதிகார வர்க்கத்தினர். மர்மக் காய்ச்சலோ, நோயோ வந்து நிறைய மனிதர்கள் இறந்துவிட்டால் கவலையே இல்லாமல் தோட்டி வேலைக்கு அதாவது தங்களின் மலத்தை அள்ளிச் சுத்தம் செய்ய வேண்டி வேறு ஊர்களில் இருந்து புதிதாக ஆட்களைக் கொண்டு வரும் மேல்தட்டு அதிகார வர்க்கம்" என்று ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் மனக் கொந்தளிப்புகளை, ஏக்கங்களை, ஆதங்கங்களை மற்றும் அவர்களின் மீது கட்...

செம்புலம்

உண்மை அல்லது உண்மைக்கு வெகு அருகாமையில் இருக்கக் கூடிய சமூகத்தின் நிகழ்வுகளை ஒரு துப்பறியும் நாவலின் மூலம் அலசியிருக்கிறார் இரா.முருகவேள். மர்மமான முறையில் இறந...