Skip to main content

செம்புலம்

உண்மை அல்லது உண்மைக்கு வெகு அருகாமையில் இருக்கக் கூடிய சமூகத்தின் நிகழ்வுகளை ஒரு துப்பறியும் நாவலின் மூலம் அலசியிருக்கிறார் இரா.முருகவேள்.

மர்மமான முறையில் இறந்துக் கிடக்கும் சடலத்தின் மீதான போலீஸ் விசாரணையுடன் தொடங்குகிறது நாவல். பின்பு அது "தலித், ஆதிக்கச் சாதி,மேல் சாதி, வேலை இல்லாமல் போன விவசாயம் அதனால் அதிகமான கைத்தறிக் கூடங்கள், நவீன கொத்தடிமை முறை, ஸ்பினிங் மில்களில் நிகழும் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள், வன்கொடுமைச் சட்டத்தின் சிறப்பம்சங்கள்,அதில் ஒழிந்திருக்கும் ஓட்டைகள், பெண் வாரிசுரிமை, சாதிச் சங்கங்களின் ஆதிக்கம், குலப்பெருமையைக் காப்பதாய் பெண்களை எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மேல்சாதி ஆண்கள்" என ஒரே புள்ளியை நோக்கி பல்வேறு கோணங்களில் விரிகிறது.

'தலித் மக்களின் பிரச்சினைகளுக்காக நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்ந்து ஏதாவதொரு வழியில் போராடும் பாஸ்கர்', சாதிச் சங்கத் தலைவரான மனோகரன், "பெரும்பாலான கிராமப் புறங்களில் பள்ளிக்கூடங்கள் மேல்சாதியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அமைந்திருக்கிறது ஆனால் அங்கு பெரும்பாலும் பயில்வது என்னவோ பிற்படுத்தப்பட்ட. மற்றும் தலித் மாணவர்கள்தான் ஏனென்றால் மேல்சாதியினர் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்துவிடுகின்றனர். மற்றும் கல்லூரிகளில் பெண்களிடம் பேசுவதற்கே யோசிப்பது.  தன் சாதியை வெளிப்படையாகச் சொல்ல மறுப்பவன் கண்டிப்பாக ஒரு தலித்தாக தான் இருப்பான் என்று புரையோடிக் கிடக்கும் சமூகத்தின் ஒடுக்கும் மனப்பான்மை பார்வை என அடித்தளத்தில் இருந்து சாதியின் உக்கிரகங்களை அடிக்கோடிட்டு காட்டும் பாஸ்கரின் நண்பனான இளங்கோ" என்று சமூகத்தின் பிரதிபிம்பங்களாய் கட்டியமைக்கப்பட்ட கதையின் மாந்தர்கள்.

அதேசமயம் கொங்கு பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்ட 'அருமைக்காரர்கள், வெள்ளையம்மாள் கதை, எழுதிங்கு சீர்' போன்ற இன்னும் சில கலாச்சார பழக்க வழக்கங்களும் நாட்டுப்புற கதைகளின் மூலமாக நினைவூட்டப்பட்டுள்ளது. 

கார்த்திக் பிரகாசம்...

Comments

  1. இப்போதுதான் பார்த்தேன். அருமையான மதிப்புரைக்கு மன்மார்ந்த நன்றி நண்பரே. இரா.முருகவேள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...