மொத்த சக்தியையும் ஸ்ட்ராப் போட்டு உறிஞ்சிக் கொண்டிருக்கும் வெயிலைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், வடியும் வேர்வையை விரல்களில் வழித்தெறிந்துவிட்டு முத்துவும் பாலுவும் தேவியோடு விளையாடிக் கொண்டிருந்தனர். கோடை விடுமுறை வந்துவிட்டாளே நேரம், பசி அறியாமல் எந்நேரமும் விளையாட்டுத் தான். பாலுவும் தேவியும் அண்ணண் தங்கை. பாலு தேவியின் வீட்டிற்குப் பக்கத்தில் தான் முத்துவின் வீடு.மூவரும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். பாலுவும் முத்துவும் ஏழாம் வகுப்பு. தேவி ஒன்பதாம் வகுப்பு.
அன்றும் வழக்கம் போல மூவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
பாலுவின் அம்மா வந்து, 'கடைக்கு போகணும்ல. ரெண்டு பேரும் சீக்கிரம் வாங்க' என்று இருவரையும் அழைத்தார். பொதுவாக மூவரும் விளையாடிக் கொண்டிருக்கும் போது இவ்வாறு அம்மா அழைக்கும் போதெல்லாம் எப்போதுமே மறுக்கும் பாலுவும் தேவியும் அன்று உடனே கிளம்பத் தயாராகினர். முத்துவிற்கு அது அதிர்ச்சியாய் இருந்தது. ஏனென்றால் விளையாட்டுக்கு அவர்களை விட்டால் அவனுக்கு வேறு கூட்டு இல்லை. விளையாட்டில் மட்டுமல்ல. எல்லாவற்றிற்கும் அவர்கள்தான் கூட்டு. இவர்களிருவரும் சென்றுவிட்டால் நாள் முழுவதும் விளையாட தனக்கு நண்பர்களே இல்லையாதலால் பெரும் வருத்தமுற்றான் முத்து. அதை நினைக்கும் போது துக்கம் தொண்டையை துருத்தியது. கண்ணீர் கண்களை அழுத்தியது.
அம்மா கூப்பிட்டவுடன் சிட்டாய் பறந்துவிட்டான் பாலு. தேவி நிதானமாக நடந்தாள். முத்து அவளின் பின்னால் சென்றுக் கேட்டான்.
'ஹே தேவி'.! ஏன் விளையாடாம போற'
'நாங்க கடைக்குப் போறோம்டா' தேவி சொன்னாள்.
'கடைக்கா.? எந்தக் கடைக்கு.?' முத்து திருப்பிக் கேட்டான்.
'எந்தக் கடைக்காவா.! இன்னைக்கு அட்சய திரிதி உனக்கு தெரியாதா.! இன்னைக்கு எல்லாரும் தங்க நக வாங்குவாங்க. நாங்களும் நக வாங்கத்தான் போறோம். எனக்கு செயின்னு பாலுவுக்கு மோதரம்.'
முத்து மேற்கொண்டு வேறு கேள்விக் கேட்கும்முன் தேவி ஓடிவிட்டாள்.
அட்சய திரிதியைப் பற்றியெல்லாம் முத்துவிற்கு ஒன்றும் தெரியாது. அதைப் பற்றி அவனுக்கு ஒரு கவலையும் இல்லை. ஆனால் அவன் இன்று தெரிந்துக் கொண்டதெல்லாம் அட்சய திருதியை முன்னிட்டு தன் நண்பர்கள் தங்க நகை வாங்க டவுன் கடைக்குப் போகிறார்கள். ஆக நாமும் டவுன் கடைக்குப் போய் தங்கம் வாங்க வேண்டும். யோசித்துக் கொண்டே வீட்டிற்கு மெல்ல நடந்தான் முத்து.
சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள் முத்துவின் அம்மா. முத்துவை பார்த்ததும், ' என்ன தொர. சீக்கிரம் வந்துட்டிங்க' என்றாள். முத்து பதிலேதும் பேசாமல் அமைதியாக தலைக் குனிந்து அமர்ந்திருந்தான்.
'பசிக்குதா கண்ணு. இந்தா ஆச்சு. ஒரே ஒரு நிமிஷம் தான். கொழம்பு வெந்துரும்' சோர்ந்து அமர்ந்திருக்கும் முத்துவைப் பார்த்து அவளே சொன்னாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, "ம்மா.! வாம்மா.. கடைக்குப் போலாம்" என்று ஆரம்பித்தான் முத்து.
கடைக்கா..? எதுக்கு.? எந்தக் கடைக்கு...? முத்துவின் அம்மா இடைவெளி இல்லாமல் கேட்டாள்.
'ம்மா. இன்னைக்கு அட்சய திரிதி தான.?'
"ஆமா". அதுக்கென்ன?
'பாலுவும் தேவியும் தங்க நக வாங்க டவுனுக்குப் போறாங்க. வாம்மா நாமளும் போலாம்'
முத்துவின் அம்மா இதைக் கேட்டதும் அதிர்ந்துப் போனாள். அடுத்த வேளை சோற்றுக்கே ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில் மகனின் இந்த ஆசையை நினைத்து மனதிற்குள் நொந்தாள். குடும்ப நிலையை எண்ணி தன்னையே கடித்துக் கொண்டாள். இருந்தாலும் முத்துவை அழைத்துக் கொண்டு கடைக்குப் போனாள்.
முத்துவிற்கு மனதில் அளவில்லா சந்தோஷம். பாலுவையும் தேவியையும் நாளை சந்திக்கும் போது வாங்கிய மோதிரத்தையோ செயினையோ எப்பிடி பெருமையாகக் காட்டலாம் என்று மனதுக்குள் ஒத்திகைப் பார்த்துக் கொண்டே அம்மாவோடு நடந்தான்.
அம்மா அழைத்துச் சென்ற கடையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான் முத்து. அது நகைக் கடை அல்ல மளிகைக் கடை. கண் இமைக்காமல் அம்மாவையே பார்த்துக் கொண்டு நின்றான் முத்து.
"முத்து.! அட்சய திரிதினா 'எப்பவும் குறையாததுனு' அர்த்தம். நமக்கு எது எப்போவுமே கொறையக் கூடாதுனு நெனைக்கிறோமே, எது நாம வாழ்றதுக்கு அத்தியாவசிய தேவையா இருக்கோ அதத்தான் அட்சய திரிதி அன்னைக்கு வாங்கணும்.! நமக்கு இப்போ அத்தியாவசியமா தேவைப்படறது மூணு வேள சாப்பாடு. அதனால இந்த வருஷ அட்சய திரிதிக்கு அரிசி, பருப்பு, புளி, சக்கரை, உப்பு இந்த நாளும் வாங்கலாம்"
கண்கள் கலங்க நின்றுக் கொண்டிருக்கும் அம்மாவைப் பார்த்தான் முத்து. நண்பர்களிடம் சுய பெருமைப் பேச மனதுக்குள் நிகழ்த்தி வைத்திருந்த ஒத்திகையைத் துடைத்தெறிந்தான். யதார்த்தத்தைப் புரிந்துக் கலங்கினான்.
அரிசி, பருப்பு, புளி, சக்கரை, உப்பு எல்லாவற்றிலும் அரைக் கிலோ வாங்கி மகனின் கையில் கொடுத்துவிட்டு அவன் நிழலைப் பின் தொடர்ந்து நடந்தாள் முத்துவின் அம்மா.
கார்த்திக் பிரகாசம்...
அன்றும் வழக்கம் போல மூவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
பாலுவின் அம்மா வந்து, 'கடைக்கு போகணும்ல. ரெண்டு பேரும் சீக்கிரம் வாங்க' என்று இருவரையும் அழைத்தார். பொதுவாக மூவரும் விளையாடிக் கொண்டிருக்கும் போது இவ்வாறு அம்மா அழைக்கும் போதெல்லாம் எப்போதுமே மறுக்கும் பாலுவும் தேவியும் அன்று உடனே கிளம்பத் தயாராகினர். முத்துவிற்கு அது அதிர்ச்சியாய் இருந்தது. ஏனென்றால் விளையாட்டுக்கு அவர்களை விட்டால் அவனுக்கு வேறு கூட்டு இல்லை. விளையாட்டில் மட்டுமல்ல. எல்லாவற்றிற்கும் அவர்கள்தான் கூட்டு. இவர்களிருவரும் சென்றுவிட்டால் நாள் முழுவதும் விளையாட தனக்கு நண்பர்களே இல்லையாதலால் பெரும் வருத்தமுற்றான் முத்து. அதை நினைக்கும் போது துக்கம் தொண்டையை துருத்தியது. கண்ணீர் கண்களை அழுத்தியது.
அம்மா கூப்பிட்டவுடன் சிட்டாய் பறந்துவிட்டான் பாலு. தேவி நிதானமாக நடந்தாள். முத்து அவளின் பின்னால் சென்றுக் கேட்டான்.
'ஹே தேவி'.! ஏன் விளையாடாம போற'
'நாங்க கடைக்குப் போறோம்டா' தேவி சொன்னாள்.
'கடைக்கா.? எந்தக் கடைக்கு.?' முத்து திருப்பிக் கேட்டான்.
'எந்தக் கடைக்காவா.! இன்னைக்கு அட்சய திரிதி உனக்கு தெரியாதா.! இன்னைக்கு எல்லாரும் தங்க நக வாங்குவாங்க. நாங்களும் நக வாங்கத்தான் போறோம். எனக்கு செயின்னு பாலுவுக்கு மோதரம்.'
முத்து மேற்கொண்டு வேறு கேள்விக் கேட்கும்முன் தேவி ஓடிவிட்டாள்.
அட்சய திரிதியைப் பற்றியெல்லாம் முத்துவிற்கு ஒன்றும் தெரியாது. அதைப் பற்றி அவனுக்கு ஒரு கவலையும் இல்லை. ஆனால் அவன் இன்று தெரிந்துக் கொண்டதெல்லாம் அட்சய திருதியை முன்னிட்டு தன் நண்பர்கள் தங்க நகை வாங்க டவுன் கடைக்குப் போகிறார்கள். ஆக நாமும் டவுன் கடைக்குப் போய் தங்கம் வாங்க வேண்டும். யோசித்துக் கொண்டே வீட்டிற்கு மெல்ல நடந்தான் முத்து.
சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள் முத்துவின் அம்மா. முத்துவை பார்த்ததும், ' என்ன தொர. சீக்கிரம் வந்துட்டிங்க' என்றாள். முத்து பதிலேதும் பேசாமல் அமைதியாக தலைக் குனிந்து அமர்ந்திருந்தான்.
'பசிக்குதா கண்ணு. இந்தா ஆச்சு. ஒரே ஒரு நிமிஷம் தான். கொழம்பு வெந்துரும்' சோர்ந்து அமர்ந்திருக்கும் முத்துவைப் பார்த்து அவளே சொன்னாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, "ம்மா.! வாம்மா.. கடைக்குப் போலாம்" என்று ஆரம்பித்தான் முத்து.
கடைக்கா..? எதுக்கு.? எந்தக் கடைக்கு...? முத்துவின் அம்மா இடைவெளி இல்லாமல் கேட்டாள்.
'ம்மா. இன்னைக்கு அட்சய திரிதி தான.?'
"ஆமா". அதுக்கென்ன?
'பாலுவும் தேவியும் தங்க நக வாங்க டவுனுக்குப் போறாங்க. வாம்மா நாமளும் போலாம்'
முத்துவின் அம்மா இதைக் கேட்டதும் அதிர்ந்துப் போனாள். அடுத்த வேளை சோற்றுக்கே ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில் மகனின் இந்த ஆசையை நினைத்து மனதிற்குள் நொந்தாள். குடும்ப நிலையை எண்ணி தன்னையே கடித்துக் கொண்டாள். இருந்தாலும் முத்துவை அழைத்துக் கொண்டு கடைக்குப் போனாள்.
முத்துவிற்கு மனதில் அளவில்லா சந்தோஷம். பாலுவையும் தேவியையும் நாளை சந்திக்கும் போது வாங்கிய மோதிரத்தையோ செயினையோ எப்பிடி பெருமையாகக் காட்டலாம் என்று மனதுக்குள் ஒத்திகைப் பார்த்துக் கொண்டே அம்மாவோடு நடந்தான்.
அம்மா அழைத்துச் சென்ற கடையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான் முத்து. அது நகைக் கடை அல்ல மளிகைக் கடை. கண் இமைக்காமல் அம்மாவையே பார்த்துக் கொண்டு நின்றான் முத்து.
"முத்து.! அட்சய திரிதினா 'எப்பவும் குறையாததுனு' அர்த்தம். நமக்கு எது எப்போவுமே கொறையக் கூடாதுனு நெனைக்கிறோமே, எது நாம வாழ்றதுக்கு அத்தியாவசிய தேவையா இருக்கோ அதத்தான் அட்சய திரிதி அன்னைக்கு வாங்கணும்.! நமக்கு இப்போ அத்தியாவசியமா தேவைப்படறது மூணு வேள சாப்பாடு. அதனால இந்த வருஷ அட்சய திரிதிக்கு அரிசி, பருப்பு, புளி, சக்கரை, உப்பு இந்த நாளும் வாங்கலாம்"
கண்கள் கலங்க நின்றுக் கொண்டிருக்கும் அம்மாவைப் பார்த்தான் முத்து. நண்பர்களிடம் சுய பெருமைப் பேச மனதுக்குள் நிகழ்த்தி வைத்திருந்த ஒத்திகையைத் துடைத்தெறிந்தான். யதார்த்தத்தைப் புரிந்துக் கலங்கினான்.
அரிசி, பருப்பு, புளி, சக்கரை, உப்பு எல்லாவற்றிலும் அரைக் கிலோ வாங்கி மகனின் கையில் கொடுத்துவிட்டு அவன் நிழலைப் பின் தொடர்ந்து நடந்தாள் முத்துவின் அம்மா.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment