Skip to main content

Posts

Showing posts from May, 2018

அம்மாவிற்கு உடம்பு சரியில்லை

மகன் வந்தான் மகள் வந்தாள் மருமகன் வந்தார் மகனின் நண்பர்கள் வந்தார்கள் மகளின் குழந்தைகள் வந்தார்கள் அவர்களுக்கு மூன்று வேளையும்  நேரத்திற்கு உணவுப் பரிமாறப்பட்டது அனைவரும் சுவையாகச் சாப்பிட்டார்கள் வெளியே உலவச் சென்றார்கள் விளையாடி மகிழ்ந்தார்கள் மதியவேளைகளில் ஓய்வெடுத்தார்கள் அழுக்கு படிந்த அவர்களின் துணிமணிகள்  சுத்தமாக வெளுக்கப்பட்டன குழந்தைகள் அலங்கோலப்படுத்திய பொருட்கள்  அதேயிடத்தில் அழகாகச் சீர்படுத்தப்பட்டன அவர்கள் உறங்க வேண்டி தலையணை மற்றும் விரிப்புகள் நேர்த்தியாக விரிக்கப்பட்டன அனைவரும் உறங்கிய பின் அவள் உண்ணச் சென்றாள் அறை முழுவதும் அவளுடைய இருமல் சத்தம் எதிரொலித்துக் கொண்டிருந்தது இருமலை விழுங்க முயன்றாள்  முடியவில்லை மூச்சு வாங்கத் தொடங்கியது சுடுதண்ணீரில் மிளகைக் கலந்து  குடித்துவிட்டு படுத்தாள் அனைவரும் சுவையாக உண்ட மயக்கத்தில் விளையாடிய களைப்பில் நிம்மதியாக உறங்கிக் கிடந்தார்கள் ஒருவரும் அவளிடம் கேட்கவில்லை அவளும் சொல்லவில்லை ஒரு வாரமாக அம்மாவிற்கு உடம்பு சரியில்லை கார்த்திக் பிரகாசம்...

உரையாடல் #4

"ஏன் எதைப் பற்றிப் பேசினாலும் கடைசியில் காமத்தோடு தொடர்புபடுத்தியே முடிக்கிறாய்.?" "நான் இன்னும் முடிக்கவே இல்லையே..! ஒருவேளை நான் காமத்தில்தான் முடிக்க வேண்டுமென்று நீ எப்போதும் விரும்புகிறாயோ...!" கார்த்திக் பிரகாசம்...

ஜாதியை அழித்தொழிக்கும் வழி...!!!

ஒரு இந்து சமூக சீர்திருத்த மாநாட்டில் நிகழ்த்துவதற்காக டாக்டர். அம்பேத்கரால் எழுதப்பட்டு பேசப்படாத உரையின் எழுத்து வடிவமே "ஜாதியை அழித்தொழிக்கும் வழி".  குறிப்பிட்ட அந்த சீர்திருத்த இயக்கமே தாமாகவே இவ்வுரையை அச்சடித்து வெளியிட  முன்வந்து பின்பு பல்வேறு காரணங்கைளைச் சொல்லி பின்வாங்க அம்பேத்கரே புத்தகத்தை எட்டணாவிற்கு விற்றார். அம்பேத்கர் வெளியிட்ட அடுத்த ஆண்டே இப்புத்தகம் தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டிருக்கிறது. அதை தமிழில் மொழிப் பெயர்த்து வெளியிட்டவர் நம் "பெரியார்". இந்து மதத்தைப் பற்றியும்,அதன் சாதிய அமைப்புகள் பற்றியும் இதற்குமேல் ஒரு மனிதனால் ஆராய்ந்தறிந்து சொல்ல முடியாது. அம்பேத்கர் ஓர் மாமேதை. ஜாதியின் அடிவேரிலிருந்து அதன் கிளை இலைகள் வரை ஒன்றுவிடாமல் அலசியிருக்கிறார். தம் இனத்தவரிடமிருந்து மற்றவர்களைப் பிரித்தறிய "முகமதியர்கள்" பயன்படுத்திய சொல்லே "இந்து" என்பதாகும். முகமதிய படையெடுப்புக்கு முந்தயை சமஸ்கிருத புத்தங்கங்களில் "இந்து" சொல்லே காணப்படவில்லை. கிட்டத்தட்ட நான்காயிரம் ஜாதிகளின் கூட்டிணைப்பே "இந்து"...

தூத்துக்குடி

பொது பிரச்சினைக்காக அனைவரின் நலனுக்காக ஒன்றுகூடி போராடிய மக்களை அதிகார துஷ்பிரயோகத்தினால் அடக்கியொடுக்கி மனிதாபிமானமில்லாமல் பத்து பேரைச் சுட்டுக் கொன்றிருக்கிறது அரசும் அதனதிகாரமும்...! நாங்கள் வைத்தது தான் சட்டம் நாங்கள் கொண்டுவரும் திட்டங்களை நல்லதோ கெட்டதோ நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் அதன் பாதகங்களைக் குறித்து யாரும் வாய் திறக்கக் கூடாது மீறி அரசுக்கெதிராக அதிகாரத்திற்கெதிராக கேள்வியெழுப்பினால் போராட்டம் நடத்தினால் அடக்கப்படுவீர்கள் அப்படியும் அடங்கவில்லையென்றால் சுட்டுக் கொல்லப்படுவீர்களென்று பகீரங்கமாக எச்சரிக்கிறார்கள்...! போராடியவனைக் கொன்றுவிட்டு அவன் குடும்பத்திற்கு பணஉதவியென்று அறிக்கையும் விடுகிறார்கள்...! ஆட்சி அதிகாரத்தை ருசிக்க வரிசையில் காத்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் அழுகைக் குரலை தங்களின் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முந்தியடிக்கிறார்கள்...! டிவி சேனல்கள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படாமல் பாதிக்கப்பட்டவர்களின் இறந்தவர்களின் இரத்தம் தோய்ந்த முகங்களைத் திரும்பத் திரும்பக் காட்டுகின்றனர்...! கையாலாகாத ஆத்திரத்தையும் குற்ற உணர்ச்சியையும் இஸ்திரி போட்...

அவர்கள் குடிக்கிறார்கள்

அவர்கள் குடிக்கிறார்கள் சந்தோஷத்திற்காக அல்ல கவலைகளை மறப்பதற்காக அல்ல விதியை நொந்து கொள்வதற்காக அல்ல சூழலைக் கடிவதற்காக அல்ல கோப வெறியைத் தக்க வைப்பதற்காக அல்ல பகையைத் தீர்ப்பதற்காக அல்ல அவர்கள் குடிக்கிறார்கள் தங்கள் முகமூடியை கழட்டி எறிவதற்காக அவர்கள் குடிக்கிறார்கள் சுய கௌரவத்தை மறந்து விடுவதற்காக அவர்கள் குடிக்கிறார்கள் உண்மையைப் பகிர்வதற்காக அவர்கள் குடிக்கிறார்கள் ஒருசில கண்ணீர்த் துளிகளைச் சிந்துவதற்காக அவர்கள் குடிக்கிறார்கள் தலைவிதித் தத்துவத்தை மாற்றுவதற்காக அவர்கள் குடிக்கிறார்கள் இறந்த காலத்தின் படிப்பினையை நினைவுக் கூறுவதற்காக அவர்கள் குடிக்கிறார்கள் நிகழ்காலத்தின் சோதனையை முறியடிப்பதற்காக அவர்கள் குடிக்கிறார்கள் நெடுங்கால நோக்கத்தை அசைபோடுவதற்காக அவர்கள் குடிக்கிறார்கள் அடுத்து எப்போது குடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக அவர்கள் குடிக்கிறார்கள் கார்த்திக் பிரகாசம்...

எப்பொழுதும் எதற்காகவும்

எப்பொழுதும் எதற்காகவாவது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பவர்களைக் கண்டால் ஆத்திரமாக இருக்கிறது உயிரில்லாமல் கிடக்கும் அவர்களின் கண்களைக் காண சகிக்கவில்லை சிரிக்க மறுக்கும் அவர்களின் உதடுகளைச் சுட்டெரிக்க வேண்டும் போலிருக்கிறது சொந்தக் கவலைகளில் சுகம் தேடும் அவர்களின் உள்ளங்களைச் சூழ்ந்திருக்கும் ஒட்டுண்ணிகளை விரட்டியோட வைக்க வேண்டும் கவலைப்பட தயாராகக் காத்து கிடக்கும் அவர்களின் மனங்களைக் ஆழ்கடலில் தூக்கியெறிய வேண்டும் நிகழைச் சூன்யமாக்கிக் கொள்ளும் அவர்களின் மௌனத்தை வேரோடு பிடிங்கியெறிய வேண்டும் போலிருக்கிறது... கார்த்திக் பிரகாசம்...

உரையாடல் #3

நீயேன் இந்த அளவுக்கு செல்பிஃஷா யோசிக்க ஆரமிச்சட்டனு எனக்குத் தெரியல கீதா. " இட்ஸ் நாட் அபௌட் செல்பிஃஷ்னஸ் முத்து. இட்ஸ் அபௌட் அவர் செல்ப் ஹாப்பினஸ் "...! நானும் எத்தன நாளைக்குத் தான் பொறுத்து போறது. "அப்பிடி என்ன உன் சந்தோஷம் கெட்டுப் போற அளவுக்கு பண்ணிட்டாங்க.?" ஏன் கேக்கமாட்டீங்க.? 'கொழந்த பொறந்து முழுசா ஆறு மாசம் கூட முடியல. "புள்ள பெத்துட்டாங்கறதுக்காக எத்தன நாள் வீட்லயே சும்மா படுத்தே கெடப்பாளாமா..? ஏதோ ஊரு உலகத்துலயே இவ ஒருத்திதான் புள்ள பெத்துக்கிட்ட மாதிரி" ன்னு உங்கம்மா காதுப்படவே பேசுறாங்களேன்னு ஒடம்புக்கு முடிலனாலும் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டேன். தினமும் ரெண்டு ஷேர் ஆட்டோ, லோக்கல் ட்ரைன்'னு முப்பது முப்பது அறுபது கிலோமீட்டர் போயிட்டு வரேன். வீட்டுக்கு வந்ததும் நிம்மதியா ரெண்டு நிமிஷம் ஒக்காரலாம்னு நெனைச்சா கொழந்தையோட அழுக்குத் துணியெல்லாம் மல மாதிரி குவிச்சு வச்சிருக்காங்க. சரி 'சமையலாவது ஏதாவது பண்ணிருக்காங்களானு சமையல்கட்டு பக்கம் போன மதியம் அவங்க சாப்புட்ட தட்ட கூட கழுவாம போட்டு வச்சிருங்காங்க'. இதெல்லாம் மட்டும் இல்லாம சா...

"பள்ளிகொண்டபுர"த்தின் முடிவில் தொடங்கிய "ஏழு தலைமுறைகள்"

நீல.பத்மநாபனின் "பள்ளிகொண்டபுர" த்தை வாசித்து முடிக்கையில் மனம் சலனத்தோடிருந்தது. தாம் செய்தது அசாத்தியமான தியாகம் என தன் பிள்ளைகளை நம்ப வைக்க முயற்சிக்கும் அனந்தன் நாயர். தனக்கு பிடித்துவிட்டது என்பதற்காகக் குழந்தைகளைப் பற்றிக்கூட நினைத்து பாராமல் வேறொருவருடன் சென்றுவிட்ட அம்மாவை முற்றிலும் வெறுக்கும், அப்பாவை விட அம்மாவின் மீது பெருத்த கோபமும் ஏமாற்றமும் கொண்டிருக்கும் மாதவிக்குட்டி. அப்பாவின் சந்தேகப் புத்தியினாலும், அளவுக்கு அதிகமான கோபத்தினாலும் அவரின் ஒருவித கோழைத்தனத்தாலும் தான் அம்மா அத்தகைய முடிவை எடுக்க நேர்ந்தது. மீண்டும் திரும்பி வந்தபோது கூட அவளை ஏற்றுக் கொள்ளாமல் திருப்பியனுப்பிய அப்பா தான் அம்மாவின் அம்முடிவிற்கும் நம்முடைய இந்நிலைக்கும் முக்கிய குற்றவாளி என்பது போல் வாதிடும் பிரபாகரன் நாயர். இம்மூவரின் பார்வையும் அவரவர் நிலையில் இருந்து பார்க்கும் போது சரியானதாகத் தோன்றியது. ஆனால் இறுதி முடிவாக இவர்களில் எவருடைய நிலையை நான் ஏற்றுக் கொள்வது என்ற சலனம் மனதை உருத்திக் கொண்டே இருந்தது. ஆதலால் விரிந்த புரிதலுக்காக அந்நாவல் சார்ந்த பதிவுகளைப் படிக்க ...

அத்தியாயம்

முடிந்து போன அத்தியாயித்தை மறுமுறை முதலிலிருந்து படித்தாலும் அதே முடிவைத் தான் கொடுக்கும்...!!! கார்த்திக் பிரகாசம்...

என் பால்யகால சகி

பஷீரின் " பால்யகால சகி "யை வாசிக்கிறேன். எப்போதுமே புறவெளியில் பறந்திடும் மனப் பறவை புத்தகம் வாசிக்கையில் மட்டும் அகவெளியில் பறக்கத் தொடங்கி விடுகிறது. அதுவும் பின்னோக்கி. நன்றாக நினைவிருக்கிறது. அந்த ஆண்டு தான் நாம் கல்லூரித் தடாகத்தில் முதலடி பதித்திருந்தோம். பள்ளி வாழ்க்கையில் நமக்குள் ஆழமாய் வேரூன்றியிருந்த நட்பு விஸ்தாரமாய் விரிந்து மோன நிழலைச் சுகமாய் பரப்பிக் கொண்டிருந்தது. அந்நிழலில் இளைப்பாறி நம் பள்ளிப்படிப்பு முடிந்தது. பின் இருவரும் வெவ்வேறு கல்லூரி..! வேறு வேறு பாடப்பிரிவு..! ஆனால் இவ்விரண்டும் நம் நட்பை முறிக்கவோ, இடைவெளியை ஏற்படுத்தவோ இல்லை. மாறாக அது நம் பிணைப்பை மேலும் வலுப்படுத்தியது. தொலைவைத் தொலைந்து போகச் செய்தது. வழக்கம் போல அன்றைய சாயந்தரமும் எங்கோ வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். நான் சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்தேன். நான் கேட்டேன், " நாம் திருமணம் செய்து கொள்ளலாமா.? அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்.?. எனக்குத் தெரியும் இதற்குமுன் நாம் காதலைப் பற்றிக் கூட பேசியதில்லை. ஆனால் உன் விழிகளில் எவ்வித பரபரப்பும் பதற்றமும் இ...

உரையாடல் #2

'இப்போ எவ்வளவோ பரவால்ல மாப்ள. மூணு வேள சாப்புட முடியுது. வீட்டுக்குப் பணம் அனுப்ப முடியுது. எனக்குனும் கொஞ்சம் சேமிப்புக்கு எடுத்து வைக்க முடியுது.ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இது எதுவுமே இல்லாம இருந்தத யோசிச்சா உடம்பெல்லாம் படபடப்பா இருக்கு. வேல இல்லாம, சரியா தூங்காம, சோத்துக்குக் காசு இல்லாம கஷ்டப்பட்டதெல்லாம் இப்போ நெனைச்சாக்கூட... யப்பா..! அப்டியே ஒரு நிமிஷம் கண்ல தண்ணீ வந்துருது. ஆனாலும் எப்டியோ அடிச்சி புடிச்சி மேல வந்துட்டேன்... என்ன நெனைச்சு நானே பெருமபட்டுக்குறேன் மாப்ள ' இதுல பெருமபட்டுக்க என்னடா இருக்கு. இது உன் வாழ்க்க. நீ முன்னேறனும்னா ஓழைக்கனும்.அதுக்குக் கஷ்டப்பட்டு தான் ஆகணும். நீ ஏதோ அடுத்தவன் முன்னுக்கு வரத்துக்காகக் கஷ்டப்பட்ட மாதிரி சொல்ற. ஒவ்வொரு நாளும் முன்னாடி நாள் ஒழைச்சத விட அதிகமா ஒழைச்சா தான் வாழ்க்கைல ஒரு நூலாவது முன்னுக்கு வர முடியும். மேல வந்துட்டோம்னு ஓஞ்சிப் போய் ஒக்கந்துடாம அடுத்த லெவலுக்கு எப்படி போலாம்னு யோசி.. போடா..! போ..! கார்த்திக் பிரகாசம்...

உயிர்ப் பறவை

"என்னங்க.! அவ தான் சொல்றானா நீங்களும் சரிங்குறீங்க. பையன் வீடு எப்பிடி.? சொத்துப்பத்து நெலம்புலம் பத்திலாம் எதுவுமே விசாரிக்காம நீங்க பாட்டுக்கு... எதுவுமே தெரியாத எவனோ ஒருத்தன அவ காதலிப்பாளாம். இவரு உடனே சரி பரவால்ல கண்ணு நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறன்னு சொல்லுவாராம். நல்லா கதையா இருக்கே." கல்யாணம் ஆனது முதல் கணவனை அதிகம் எதிர்த்துப் பேசிடாத துளசி, தன் பெண்ணின் வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயம் என்றவுடன் கோபத்துடனும் ஆதங்கத்துடனும் மனம் பொறுமினாள். ஆனால் அவள் கூறிய எதையும் பெரிதாகக் காதில் வாங்கிக் கொள்ளாமல் சிந்தனையில் மூழ்கினான் மித்ரன். பருவத்தில் வந்த பக்குவமில்லாத காதல் அல்ல அது. மற்றவரின் சுய விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிக்கத் தெரிந்த பிறகு, வாழ்க்கையின் மீதும், காமத்தின் மீதும் ஒரு புரிதல் ஏற்பட்ட பிறகு உண்டானக் காதல். இருந்தாலும் குடும்பத்தின் அன்றைய பொருளாதாரச் சூழ்நிலை, நேரடியாகவும், மறைமுகமாகவும் அவன் மீது சுமத்தப்பட்டிருந்த கடமைகள் அவனை அக்காதலை ஏற்றுக் கொள்ள விடவில்லை. அந்தப் பெண்ணும் மித்ரனின் சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டாள். ஆனால் அவள் மித்ரனிடம், ...

உழைப்பாளி

முதல் மூத்த உழைப்பாளிகளான தாய்க்கும் தாரத்துக்கும் வாழ்த்துகள்...! கார்த்திக் பிரகாசம்...