Skip to main content

உயிர்ப் பறவை

"என்னங்க.! அவ தான் சொல்றானா நீங்களும் சரிங்குறீங்க. பையன் வீடு எப்பிடி.? சொத்துப்பத்து நெலம்புலம் பத்திலாம் எதுவுமே விசாரிக்காம நீங்க பாட்டுக்கு...

எதுவுமே தெரியாத எவனோ ஒருத்தன அவ காதலிப்பாளாம். இவரு உடனே சரி பரவால்ல கண்ணு நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறன்னு சொல்லுவாராம். நல்லா கதையா இருக்கே." கல்யாணம் ஆனது முதல் கணவனை அதிகம் எதிர்த்துப் பேசிடாத துளசி, தன் பெண்ணின் வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயம் என்றவுடன் கோபத்துடனும் ஆதங்கத்துடனும் மனம் பொறுமினாள்.

ஆனால் அவள் கூறிய எதையும் பெரிதாகக் காதில் வாங்கிக் கொள்ளாமல் சிந்தனையில் மூழ்கினான் மித்ரன்.

பருவத்தில் வந்த பக்குவமில்லாத காதல் அல்ல அது. மற்றவரின் சுய விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிக்கத் தெரிந்த பிறகு, வாழ்க்கையின் மீதும், காமத்தின் மீதும் ஒரு புரிதல் ஏற்பட்ட பிறகு உண்டானக் காதல். இருந்தாலும் குடும்பத்தின் அன்றைய பொருளாதாரச் சூழ்நிலை, நேரடியாகவும், மறைமுகமாகவும் அவன் மீது சுமத்தப்பட்டிருந்த கடமைகள் அவனை அக்காதலை ஏற்றுக் கொள்ள விடவில்லை. அந்தப் பெண்ணும் மித்ரனின் சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டாள். ஆனால் அவள் மித்ரனிடம், " நாளை உன் மகனோ அல்லது மகளோ, நான் ஒருவரைக் காதலிக்கிறேன் என்று உன்முன் வந்து நிற்கும் போது, நீ அவர்களின் காதலை ஏற்றுக் கொண்டு அவர்களை ஒன்றுச் சேர்க்க வேண்டும். அது தான் நீ நம் காதலுக்கும், நம் புரிதலுக்கும் நீ செய்யும் மரியாதை" என்று சத்தியம் கேட்டாள்.

மித்ரனும் மறுப்பேதும் சொல்லாமல் அவளுக்கு உறுதியளித்தான்.

கண்ணீர்த் துளிகள் அக்காட்சியை இப்பொழுது மங்கலாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தின.

துளசி அருகில் வந்து மித்ரனின் தோள் மீது கை வைத்தாள். கண்ணீரைத் துடைத்துக் கொண்டான் மித்ரன்.

"என்னங்க ஆச்சு.? ஏன் கண்ணெல்லாம் கலங்கி இருக்கு.?" துளசிக் கேட்டாள்.

"நீ ஒண்ணும் பயப்படாதா. நான் அந்த பையனப் பத்தியும், குடும்பத்தப் பத்தியும் ஏற்கனவே நல்லா விசாரிச்சுட்டேன். நல்ல குடும்பமாத் தான் இருக்காங்க. இதவிட நல்ல வரன் நம்ம பொண்ணுக்குக் கெடைக்காது. நீ வீணா மனசப் போட்டுக் கொழப்பிக்காத. எல்லாம் நல்லபடியா நடக்கும்." மித்ரன் நம்பிக்கைக் கூறினான்.

அதே நம்பிக்கையுடன் மித்ரனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள் துளசி.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...