Skip to main content

ஜாதியை அழித்தொழிக்கும் வழி...!!!

ஒரு இந்து சமூக சீர்திருத்த மாநாட்டில் நிகழ்த்துவதற்காக டாக்டர். அம்பேத்கரால் எழுதப்பட்டு பேசப்படாத உரையின் எழுத்து வடிவமே "ஜாதியை அழித்தொழிக்கும் வழி".  குறிப்பிட்ட அந்த சீர்திருத்த இயக்கமே தாமாகவே இவ்வுரையை அச்சடித்து வெளியிட  முன்வந்து பின்பு பல்வேறு காரணங்கைளைச் சொல்லி பின்வாங்க அம்பேத்கரே புத்தகத்தை எட்டணாவிற்கு விற்றார். அம்பேத்கர் வெளியிட்ட அடுத்த ஆண்டே இப்புத்தகம் தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டிருக்கிறது. அதை தமிழில் மொழிப் பெயர்த்து வெளியிட்டவர் நம் "பெரியார்".

இந்து மதத்தைப் பற்றியும்,அதன் சாதிய அமைப்புகள் பற்றியும் இதற்குமேல் ஒரு மனிதனால் ஆராய்ந்தறிந்து சொல்ல முடியாது. அம்பேத்கர் ஓர் மாமேதை. ஜாதியின் அடிவேரிலிருந்து அதன் கிளை இலைகள் வரை ஒன்றுவிடாமல் அலசியிருக்கிறார்.
தம் இனத்தவரிடமிருந்து மற்றவர்களைப் பிரித்தறிய "முகமதியர்கள்" பயன்படுத்திய சொல்லே "இந்து" என்பதாகும். முகமதிய படையெடுப்புக்கு முந்தயை சமஸ்கிருத புத்தங்கங்களில் "இந்து" சொல்லே காணப்படவில்லை.

கிட்டத்தட்ட நான்காயிரம் ஜாதிகளின் கூட்டிணைப்பே "இந்து" என்ற மத நிறுவனம். அதனால் ஓர் இந்து இந்துவாக வாழ்வதில்லை, அவன் தன் ஜாதியின் பிரதிநிதியாகவே வாழ்கிறான்.

வர்ணக் கோட்பாடுகள் ஒருவனை தன் ஜாதி சுவற்றைத் தாண்டாமல் கவனமாக அடைத்து வைத்துள்ளன. பிறப்பால் ஒருவனை பிராமணன், வைசியன், சத்திரியன், சூத்திரன் என்று பிரித்து, அவனைத் தன் தகுதிக்கேற்ற வேலையை, விருப்பத்திற்கேற்ற தொழிலை செய்ய விடாமல் தடுக்கின்றன. மேலும் பிராமண,வைசிய,சத்திரியன் மூவரும் சூத்திரனைக் காப்பவர்கள் போன்ற மாய தோற்றத்தை உண்டாக்கி வைத்துள்ளது.  வேதங்களும், சாஸ்திரங்களும், மனுவும் ஒரு இந்துவை பகுத்தறிவு அற்றவனாக, எதிர்க் கேள்வி கேட்க வக்கற்றவனாக ஆக்கவே முனைகின்றன. இவையே ஜாதியையும் வலுவாகத் தாங்கிப் பிடிக்கின்றன. ஆதலால் அவற்றின் நம்பிக்கையின் மீது குண்டு வைக்க வேண்டும். அவர்கள் சாதியால் பிளவுக் கொண்டு தனித்திருக்கிறார்கள்.  சாதியை இழக்க இந்துக்கள் ஒருபோதும் தயாராய் இல்லை.

பொதுவுடைமையால் மட்டுமே சமத்துவத்தை ஏற்படுத்திவிட முடியாது. சாதியை ஒழித்தால் மட்டுமே சமத்துவம் சாத்தியம். 

மேலும் இந்து மதம் கொள்கைகளாக இல்லாமல் வெறும் விதிகளாக மட்டுமே வகுக்கப்பட்டுள்ளன. ஆகையால் இந்து மதத்தின் மீது கண்டிப்பாக சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறான சீர்திருத்தம்  "சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம்" ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும்.

அம்பேத்கர் இப்புத்தகத்தை வெளியிட்டு கிட்டதட்ட எண்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. பகுத்தறிவைத் தூண்டும் அவரின் கருத்துக்களைப் பின்பற்றி நாம் ஒவ்வொருவரும் முதலில் நம் அகத்திலிருத்து ஜாதி உணர்வைத் துளியளவுமில்லாமல் நீக்கி சமத்துவத்தை வளர்தெடுத்து பின்பு சமூகத்திலிருந்து ஜாதியை அழித்தொழிக்க அமைப்பாய் திரளவேண்டும்.

நாம் தான் சமூகம். நாம் ஒவ்வொருவரும் சமூகம். நம்மில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் சமூகத்தை மாற்ற இயலாது.

கார்த்திக் பிரகாசம்...
 

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...