Skip to main content

எங்கிருந்தோ வந்தோம்

அலுவலகத்தில் நெருக்கமான நண்பர்கள் அமைவார்கள் என்ற நம்புவதெல்லாம், "கஜா" புயல் கண்டிப்பாகச் சென்னைக்கு மழையைத் தரும் என்ற எதிர்பார்ப்பை போலத் தான். இறுதியில் மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சும். இருப்பினும் நகரம் தூங்கிக் கிடக்கையில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் மட்டும் கொட்டித் தீர்த்த மழையைப் போல எப்பொழுதாவது சிலர் அமைவார்கள். ஒருவர் இருவர் அமைந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் கிட்டத்தட்ட இருபத்தைந்து பேருக்கு மேலொரு  அணியே அமைந்தால்.? அதுவும் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாகப் பயணித்தால்.! அது எந்தவொரு  இயற்கை நிகழ்வும் அரங்கேறிடாத டிசம்பர் மாத சென்னையைப் போன்றது. பெரும் ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் தரக் கூடியது.

இரண்டு வருடத்திற்கும் மேலாக பயணித்த திட்டப்பணி, போதுமான அல்லது எதிர்பார்த்த  முழுவடிவத்தை  அடைந்துவிட்டதால் இத்தனை நாள் சுமந்திருந்த சுமையை இன்று ஒரே நாளில் இறக்கி வைத்து தன் சவாரியை முடித்துக் கொண்டது. பயணம் முடிந்துவிட்டது. இனி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயணம் என்பது நியதி. எதிர்பார்ப்பும் கூட. ஆனால்  பணத்தையும், அறிவையும் பெருக்கிக் கொள்ள ஒன்றிணைந்தவர்கள், பிரிவினால் இன்று கண்கள் குளமாவதை மறைத்துக் கொண்டு செல்கிறார்கள்.

வெளியில் சொல்ல முடியாத மனதை அழுந்த புதைக்கும் பாரம். அது அலுவலைத் தாண்டி, அடிமனதின் ஆழத்தில் உண்டாகிவிட்ட நட்பென்னும் பிணைப்பினால்.   

யாருக்காகவோ, எதற்காகவோ எங்கிருந்தோ வந்த நாம் இங்கு ஒன்றிணைந்தோம். நாம் அனைவரும் மற்றவர்களின் வாழ்க்கையில் தெரிந்தும் தெரியாமலும் சில நல்ல மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறோம். இதில் குன்றியோர் யாருமில்லை அனைவரும் விஞ்சியர்வர்களே.   

இப்போதைக்கு பிரிவோம். நட்புத் தொடரட்டும். என்றாவது ஒருநாள் சந்திப்போம். அப்பொழுது பேரன்புடன் மீண்டும் இணைவோம். 

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...