மீண்டுமொரு ஆணவக் கொலை. பட்டியலின சாதீயைச் சேர்ந்தவரை காதலித்து மணந்துக் கொண்டதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அப்பெண்ணின் அப்பன், பெரியப்பன்கள் ஒன்று சேர்ந்து அவர்கள் இருவரையும் மிகவும் கொடுமையான முறையில் கொலைச் செய்து ஆற்றில் வீசியுள்ளனர்.
கொந்தளிக்கும் உணர்ச்சிகளையெல்லாம் கொஞ்சம் ஓரந்தள்ளிவிட்டு நிதானமாக யோசித்து பாருங்கள். அடுத்தவனைத் தாழ்ந்தனவென்றுச் சொல்லும் முன், முதலில் நாம் யார்.?
ஒருவனுக்கு அடிமையாக அதாவது வைப்பாட்டியின் மகனாக, தாசியின் மகனாகக்(தேவிடியாவின் மகனாக) வைத்திருக்கும் இந்து சாதீய படிநிலையில் இருந்துக் கொண்டு, நாம் இன்னொருவனைத் தாழ்ந்தவனாக, அடிமையாகப் பார்ப்பதென்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.
பிள்ளைகளைக் கொல்லும் உரிமையை இவர்களுக்கு யார் தந்தது.? பெற்ற பிள்ளைகளை விடவா இவர்களின் சாதீயம் பெரிது.? சக மனிதனை மனிதனாக நடத்திடாத சாதீய சமூகம் இருந்தால் என்ன.? அழிந்தால் என்ன.?
சாதீயம் தானாக சாகாது. நாம் தான் சாகடிக்க வேண்டும். நம்மிலிருந்து தொடங்காத மாற்றத்தை சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது முட்டாள்தனம். சாதீய இழிவு பார்க்கும் நிலையை விட்டொழிக்கும் நிலை ஏற்பட, அறிந்தும் அறியாமலும் நம் குருதிக்குள் இருக்கும் சாதீயத்தையும், சுயசாதீ திமிரையும் அடுத்தவனைத் தாழ்ந்தவனாகக் கருதும் இழிவெண்ணத்தையும் தீயிலிட்டு பொசுக்க வேண்டும். தொடர்ந்து நண்பர்களிடம், உறவினர்களிடமும் சாதீய இழிவை பொதுவெளியில் பேசுவோம். "சமத்துவம்" பேசிய தந்தை பெரியாரையும்,பாபாசாகிப் அம்பேத்கரையும் தொடர்ந்து வாசிப்போம். அவர்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுச் செல்வோம். வாசிப்பற்ற சமூகம் விழிப்புணர்வற்றே இருக்கும்.
மேலும் உறுதியாகக் கூறுகிறேன். நானொரு சாதீய இந்துவாகச் சாகமாட்டேன்.
கார்த்திக் பிரகாசம்...
சகாரா பாலைவனம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பசுமையாக இருந்ததாம்..! செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் அல்ல, பெரும் ஏரியே கொட்டிக் கிடக்குறதாம்..! மனிதனின் உடலையறுத்து செய்யும் மருத்துவத்திற்கும் மனித இயந்திரங்கள் கண்டுபிடித்தாகிவிட்டதாம்...! இரவில் வெளிச்சத்திற்கான மின்சாரத் தேவையைப் போக்கிட செயற்கை நிலவுச் செய்கிறார்களாம்...! அனைவருக்கும் கழிப்பிடம் சாத்தியப்படும் நோக்கில் நீர் உபயோகிக்காமலேயே,கழிவுகளை ஓரிடத்தில் தேக்காமல் அவற்றை மறுசுழற்சிக்குட்படுத்தி, சுத்தம் செய்யத் தேவைப்படும் நீரை அதன் மூலமே பிரித்தெடுக்கும் - ஏதோ நானோ மெம்பரேன் டெக்னாலாஜியாம்...! இவ்வாறு மேலை நாடுகளெல்லாம் அறிவியலை தங்களுக்குள் கையகப்படுத்தி உலகத்தின் மறுபக்கச் சுவரைத் துளைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் பைசாக்கு புரோஜனமில்லாத சாதியைத் தூக்கிப் பிடித்து, பெற்ற பிள்ளைகளையே கழுத்தறுத்து வீசிக் கொண்டிருக்கிறோம்.
கொந்தளிக்கும் உணர்ச்சிகளையெல்லாம் கொஞ்சம் ஓரந்தள்ளிவிட்டு நிதானமாக யோசித்து பாருங்கள். அடுத்தவனைத் தாழ்ந்தனவென்றுச் சொல்லும் முன், முதலில் நாம் யார்.?
ஒருவனுக்கு அடிமையாக அதாவது வைப்பாட்டியின் மகனாக, தாசியின் மகனாகக்(தேவிடியாவின் மகனாக) வைத்திருக்கும் இந்து சாதீய படிநிலையில் இருந்துக் கொண்டு, நாம் இன்னொருவனைத் தாழ்ந்தவனாக, அடிமையாகப் பார்ப்பதென்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.
பிள்ளைகளைக் கொல்லும் உரிமையை இவர்களுக்கு யார் தந்தது.? பெற்ற பிள்ளைகளை விடவா இவர்களின் சாதீயம் பெரிது.? சக மனிதனை மனிதனாக நடத்திடாத சாதீய சமூகம் இருந்தால் என்ன.? அழிந்தால் என்ன.?
சாதீயம் தானாக சாகாது. நாம் தான் சாகடிக்க வேண்டும். நம்மிலிருந்து தொடங்காத மாற்றத்தை சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது முட்டாள்தனம். சாதீய இழிவு பார்க்கும் நிலையை விட்டொழிக்கும் நிலை ஏற்பட, அறிந்தும் அறியாமலும் நம் குருதிக்குள் இருக்கும் சாதீயத்தையும், சுயசாதீ திமிரையும் அடுத்தவனைத் தாழ்ந்தவனாகக் கருதும் இழிவெண்ணத்தையும் தீயிலிட்டு பொசுக்க வேண்டும். தொடர்ந்து நண்பர்களிடம், உறவினர்களிடமும் சாதீய இழிவை பொதுவெளியில் பேசுவோம். "சமத்துவம்" பேசிய தந்தை பெரியாரையும்,பாபாசாகிப் அம்பேத்கரையும் தொடர்ந்து வாசிப்போம். அவர்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுச் செல்வோம். வாசிப்பற்ற சமூகம் விழிப்புணர்வற்றே இருக்கும்.
தொடர் வாசிப்பே விழிப்படைவதற்கான மூலதனம்.
மேலும் உறுதியாகக் கூறுகிறேன். நானொரு சாதீய இந்துவாகச் சாகமாட்டேன்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment