Skip to main content

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலத்தைப் போலத்
துரித நேரத்தில் உருவானதில்லை
ஷோபனாவின் அன்பு

நெடுங்கால பாசி போலக்
கண்டுணரப் படாமல் 
கூடவே படர்ந்து கிடந்தது

மழலையின் கரங்களில்
அகப்பட்ட விலையுயர்ந்த பொருள் 
போன்றது அது

இருப்பினும் 
ஷோபனாவின் அன்பை உணர்ந்து கொள்ள
தன் அன்பை துட்சமென கருதும்
ஓர் உறவில் வீழ்ந்து நோக
வேண்டியிருக்கிறது

என்னவாயினும் 
ஒரு கட்டத்தில் 
தன்னைத் தேடித் திரும்பி வரும் அன்பை
ஷோபனா வீம்புக்கேனும் 
வெறுத்து
ஒதுக்குவதில்லை

யாராலும் 
புரிந்து கொள்ளக்கூடிய 
ஆனால் எல்லோராலும் 
விளங்கிக்க முடியாத அன்பு
ஷோபனாவின் பலவீனமல்ல
தூய அன்பின் பலவீனம்

Comments