Skip to main content

அவர்களே

அழுது தீர்த்துவிட்டேன்
சொற்கள் தேயுமளவு புலம்பிவிட்டேன்
மனமின்னும் மீளவில்லை 

மரணப் படுக்கையில்
உயிரைச் சீராக வெளியேற்றும்
சுகமற்ற ஜீவனாய் 
பேயறைந்து நின்றிருந்தேன்

ஆறுதல் சொல்லவோ
அரவணைக்கவோ ஆட்கள் இருந்தனர்
ஆனால் முகங்களில்லை
அவர்களுக்கு

கண்முன்னே 
உயிர் கசிய
இறந்து கொண்டிருந்தது
நானல்ல
மனிதமும் அவர்களும் தான்

Comments