Skip to main content

மகளதிகாரம்

நிலமும் மழையும் 
மத்தளம் கொட்டி ஆர்ப்பரிக்கின்றன

பெரும் பண்டிகைக்கான உற்சாகத்தில்
மஞ்சள் குளித்து தயாராகிறது 
மாநகரம்

சோர்ந்து போன சோலையில் 
புதிதாய் ஓர் வாசனை

சுதந்திர உலகின்
புது அத்தியாயம் எழுதிட
வேர்களின் சாயலில்
மலரொன்று பூத்திருக்கிறது

Comments