சமீபத்தில் ஒலிக்கிறது
நமக்கான பிரார்த்தனை கீதம்
அருகில் வந்துவிட்டாய் போலும்
தழும்புகளில் குருதி வழியக் காயங்கள் மீண்டும்
மினுக்கின்றன
வீசும் தென்றலின் சொஸ்தப்படுத்தும் நேசம்
நாளங்களில் விரவுகிறது
முகங்கள் பார்த்திடும் முன் பதித்த
பூவிதழ் முத்தங்கள்
கோடையின் பனிக்கால ரோஜாவாகிட
அடுத்த சந்திப்பு வரைக்குமான
புது காயங்களைக் கைவசம் வைத்திருப்பாயென்று அறிவேன்
இந்த முறையாவது
மறு சாத்தியத்திற்கான
சிறு எதிர்பார்ப்பைக் கூட
உண்டாக்கி சென்றுவிடாதே
மற்றபடி
உன் வருகைக்காகவே காத்திருக்கிறேன்!
Comments
Post a Comment