Skip to main content

Posts

Showing posts from 2013

நான் கண்ட மனிதர்..

   வாழ்வில் மிக அவசியமான குணாதியசங்களைக் கற்றுக் கொள்ள அரிய புத்தகங்களையும் பெரிய ஞானிகளையும் அறிஞர்களையும் தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் முன்பின் தெரியாத ஒரு சாதாரண மனிதர்கள்  ஆழமான நிஜங்களை வெகு எளிதாக புகுத்தி விட்டுச் செல்வார்கள்.. அப்படி எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம்..    பட்டமளிப்பு விழாவிற்குக் கல்லூரிக்கு செல்வதற்காக  வேலைப் பார்க்கும் கம்பெனியில் விடுமுறையுடன் சேர்த்து  பல திட்டுகளையும் வாங்கிக் கொண்டு அன்று கிளம்பினேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் வேண்டுமென்றே ""கட்"" அடித்து விட்டு ஊர் சுற்றுவதும் அதே கல்லூரிக்கு வருடம் கழித்து பழைய பொக்கிஷமான நினைவுகளைச் சுமந்துக் கொண்டு செல்வதும் அரிய சுகம். ஏனென்றால் அந்த கல்லூரி நாட்களுக்குப் பின்னால் கண்ணாடி முன் மட்டும் சொல்லப்பட்ட காதல், சொல்லி மறுக்கப்பட்ட காதல், இக்கட்டான சூழ்நிலையில் நண்பனின் உதவி, தன்னை பற்றி அப்பாவின் மனநிலை, கேட்கமாட்டார்கள் என்று தெரிந்தும் ஆசிரியர் சொல்லும் அறிவுரைகள் என்று மனதை விட்டு நீங்க மறுக்கும் சுகமான சுவடுகள் இருக்கும்.  ...
மழைத் துளிகளாய் இரு மனமெங்கும் பரவிக் கிடந்த நம் காதல் இன்று கிணற்றுத் தண்ணீரை அடைப்பட்டது ஏனோ..!! கார்த்திக் பிரகாசம்...
நீ கருவில் உருவாகி இவ்வுலகத்தில் காலெடுத்து வைக்க பத்து மாதங்கள் வருடக் கணக்காய்க் காத்திருந்தோம்.. உன்னை பள்ளியில் விட்டுச் சென்ற மறு நொடியில் இருந்தே நீ எப்போது  வீடு திரும்புவாய் என்று நொடிகள் நாட்களாகக் காத்திருந்தோம்.. உயர்ப் படிப்பை வெளியூரில் தான் படிப்பேன் என்றாய் அனுப்ப மனம் இல்லாவிட்டாலும் உன் விருப்பத்திற்காகச் சேர்த்து விட்டு நீ எப்போது வருவாய் என்று காலண்டரின் தேதிகளைப் பியித்துக் கொண்டுக்  காத்திருந்தோம்.. வேலைக்காக வெளிநாடு சென்ற நாள் முதல் நீ போன் செய்து எங்களுடன்  பேசும் மூன்று நிமிடத்திற்காக முப்பது மணி நேரம் காத்திருந்தோம்..  மகனே.. இப்பொழுது  கூட தினம் தினம் விடியும் போதெல்லாம் இன்று நீ கண்டிப்பாக வருவாய் என்று காத்திருக்கிறோம் முதியோர் இல்லத்தில்...!!!  கார்த்திக் பிரகாசம்..
உன்னை நேசித்து மட்டும் இருந்தால் என்றோ மறந்து இருப்பேன் ஆனால் நான் உன்னை சுவாசித்துக் கொண்டு இருக்கிறேன். மறக்க முயற்சித்தால் என் சுவாசம் நின்று விடும்... கார்த்திக் பிரகாசம்...
புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றாய் ஆசை ஆசையை உன் அருகில் வந்து நின்றேன் அப்போது எனக்கு தெரியவில்லை  புகைப்படத்தில் மட்டும் தான்  நீ என்னோடு இருக்க போகிறாய் என்று...!! கார்த்திக் பிரகாசம்..

நட்பால்..

நட்பைப் பற்றிச் சொல்ல எத்தனையோ கவிதைகள் எத்தனையோ கதைகள் எத்தனையோ பாடல்கள் எத்தனையோ படங்கள் இருந்தாலும்  நட்பைப் பற்றி  பேச மனம் ஏங்கிக் கொண்டே இருக்கின்றது. பெரியப்பா  மாமா சித்தப்பா சித்தி அத்தை என அனைத்து சொந்தங்களையும் உருவாக்கிக் கொடுத்த இறைவன் தோழன் தோழியை மட்டும் உறவுகளில் ஏன் படைக்கவில்லை. ஒரு வேளை எல்லா சொந்த பந்தங்களும் என்றைக்காவுது ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்திற்க்காக நம்மை விட்டு விலகிவிடும் என்பதனால் தான் தோழன் தோழியை மட்டும் உறவுகளில் படைக்காமல் உறவுக்காக படைத்திருப்பான் போலிருக்கிறது.. பள்ளிக் கல்வியில் தொடங்கி பாடையில் போகும் வரை உயிரோடு கலந்திருக்கும் நட்பு. பள்ளி, கல்லூரி மற்றும் வேலை செய்யும் அலுவலகம் என்று நட்பு வட்டாரங்கள் மாறினாலும் நட்பு மட்டும் மாறுவதே இல்லை. புதிய நண்பனிடம் தன் பழைய நட்பைப் பற்றி பேசுவது கூட சுகம் தான்.நண்பனைக் கலாய்த்து சிரிப்பதுண்டு ஆனால் கவலையில் கலங்கி நிற்கும் போது நண்பனின் கஷ்டமான  நிலையைக் கண்டு ஒரு போதும் சிரிப்பதில்லை. தன் நண்பனின் பெற்றோரைக் கூட அம்மா அப்பா என்று அழைக்கும்  பெருந்தன்மை நட்புக்கு உண்டு. ...
எதிர்ப்பார்ப்புகளை அளந்தும் ஏமாற்றங்களை அள்ளியும் தருகிறாய்.. ஏமாற்றங்களைக் கூட எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டேன் அது உன்னால் ஏற்படுவதென்றால்..... கார்த்திக் பிரகாசம்..
நான் உனக்காக சிந்திய கண்ணீர்த் துளிகள் நீ என்னுடன் இருந்த நொடிகளை விட அதிகம்.. நீ மட்டும் இருந்த என் நாட்கள் இப்பொழுது  நீ இல்லாமல்..!! கார்த்திக் பிரகாசம்..
என்னை  போல நான் மட்டுமே உன் மீது அன்பு செலுத்த வேண்டும் என்று நினைப்பது சுயநலம் என்றால் நான் தான் இந்த உலகத்தில் மிகப் பெரிய சுயநலவாதி... கார்த்திக் பிரகாசம்.. 

மழை..

    இயற்கையின் அழிவில்லாச்  செல்வம். இயற்கையினால் இவ்வுலகத்திற்கு கிடைக்கப் பெற்ற கொடை. இம்மண்ணின் அழையா விருந்தாளி. சில சமயங்களில் அழைத்தாலும் வராத துரோகி. கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள் "கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிச்சிட்டுக் கொடுக்கும்" என்று.. இந்த பழமொழி எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ மழைக்கு  மிக நன்றாகவே  பொருந்தும்.      வராத போது வரவில்லையே என்று ஏங்க வைப்பதும் வந்து விட்டால் இப்படி வருகிறதே என்று குமுற வைப்பதும் மழைக்கே உரித்தான சிறப்பம்சம். மழை வரமா சாபமா என்று சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் வைக்கும் அளவிற்கு அதனுடைய பயன்பாடுகளும் ஆக்ரோஷ தாண்டவங்களும் உள்ளன.     ஒருபுறம் மழையினால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் நீரில் முழ்கின மறுபுறம் கன மழையினால் ஏரிகள் குளங்கள் நிரம்பி நீர் தேக்க அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு. ஒரே  நேரத்தில் ஏற்பட்ட இரண்டு மிகப் பெரிய விளைவுகள். இதில் ஒரு இழப்பும் மிகப் பெரிய கொடையும் இருக்கின்றன.மிகப்  பெரிய  இழப்பு தான் என்றாலும் கூட...

பிரிவு..

நிகழ்வுகள் நினைவுகளாக மாறும் தருணம்.. நிகழ்வுகளின் முடிவு..!! நினைவுகளின் தொடக்கம்..!! கார்த்திக் பிரகாசம்.. 
கனவுகளோடு வாழ்கின்றேனா                         இல்லை   கனவுகளில் மட்டும் வாழ்கின்றேனா...? தெரியவில்லை...!! புரியவில்லை...!!  கார்த்திக் பிரகாசம்..

""தாயும் மனைவியும்""

    வெகு நாட்களாக ஒரு சந்தேகம் கடவுள் ஏன் கருவறையை பெண்களுக்கு வைத்தான் என்று..! பிறகு தான் தோன்றியது கடவுள் கண்டிப்பாக ஆணாக  இருக்கக் கூடும். அதனால் தான் இந்த உயிர் பெரும் வலியை நம்மால் தாங்க இயலாது என்று பெண்களுக்கு வைத்திருப்பான். ஏனென்றால் இந்த உயிர் பெரும் வலியே சில நேரங்களில் உயிர் எடுக்கும் வழியாக மாறக்கூடும். ஆனால் பெண்கள் இந்த உயிர் ஈயும் வலியைக் கூட சுகமாகத் தான் நினைக்கின்றனர்.     தான் கருவுறும் போது  அந்த தாய் பெரும் சந்தோசத்திருக்கு அளவே இல்லை. கருவுற்ற கணம் முதலே தன் கண் மணிக்காக அந்த தாய் இழக்கும் சின்ன சின்ன விஷயங்களும் அதனால் பெரும் வலிகளும் எண்ணிலடகங்காதவை.கரு வளர வளர உடளவில் ஏற்படும் சிரமங்களால் உண்டாகும் கண்ணீரைக் கூட குழந்தைப் பெறப் போகும் நினைவுகளால் ஆனந்த கண்ணீராய் மாற்றுபவள். குழந்தைப் பெற போகும் தருணத்தில் உண்டாகும் வலிகளைக் கூட வெளியே சொல்லாமல் தன் குழந்தைக்காகத்  தானே என்று எண்ணி பெருமை அடைவாள். ஒவ்வொரு தாயும் தன் குழந்தைப் பிறவி எடுக்க அவள் தன் வாழ்வின் மறு பிறவி எடுக்கிறாள் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று...

""வேலைத் தேடும் வேலை"'

" வேலை "-   பட்டப் படிப்பை முடித்து வரும் ஒவ்வொரு இளைஞனின் வாழ்கையில் முதல் படி. ஒவ்வொவருக்கும் "கனவு வேலை"(ட்ரிம் ஜாப்) என்று ஒன்று இருக்கும். அதைத் தேடித்தான் தனது தேடலையும் தொடங்குவார்கள். ஆனால் பெரும்பாலான இளைஞர்களுக்கு அது கனவாகத் தான் முடிகிறது. இறுதியில் கிடைக்கும் ஏதோ ஒரு வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது குடும்பத்திற்காகவும் மற்ற பிற சூழ்நிலைகளாலும். இதனால் தான் என்னவோ அதனைக் கனவு வேலை என்று அழைத்தான் போலிருக்கிறது அந்த இளைஞன்..                         ஒவ்வொருவருக்கும் தான் செய்யும் வேலைத் தான் மிக கடினமானதாகத் தோன்றும். அது தான் நியாமும் கூட.ஆனால் மிக கடினமான மன அழுத்தம் நிறைந்த வேலை என்பது தனக்கான வேலையைத் தேடுவது தான். வேலைக்குச் செல்பவன் கூட காலையில் 9 மணிக்குத் தான் கிளம்புவான் ஆனால் வேலைத் தேடுபவன் 7 மணிக்கே கிளம்ப வேண்டியதிருக்கும். காலையில் சாப்பிடாமல் ஏதோ ஒரு டீ கடையில் ஒரு "டீ வடையுடன்" அன்றைய தேடல் தொடங்கும். ஊரின் ஏதோ ஒரு கடைக்கோடியி...
என் நண்பன் சொன்னான்  "" சென்னை வந்ததில் இருந்து ஒரு நடிகரைக் கூட பார்க்கவில்லை என்று..."" ஆனால்  நான் சென்னை வந்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் நடிகர்களை மட்டும் தான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.. நல்ல மனிதர்களை பார்ப்பது என்பது மிக அரிதாகிவிட்டது..!!!

“முதியோர்களும் குழந்தைகள்”

நம் சமூகத்தில் மனிதாபிமானம் குறைந்து வருவதற்கான அடையாளம் தான் முதியோர் இல்லங்களின் அதிகரிப்பு. பத்து மாதம் கருவில் சுமந்து இருபது முப்பது வருடம் தோளில் சுமந்த பெற்றோருக்கு கடைசி காலத்தில் கொடுக்கக்கூடிய பரிசு “முதியோர் இல்லம்” தானா..?? சமிபத்தில் நான் சேலத்தில் இருந்து சென்னைக்கு இரயிலில் திரும்பிய போது ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சி. 65 வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டி நான் ஏறிய அதே பெட்டியில் ஏறினார். வெகு நேரம் மிக அமைதியாகவே வந்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவருடைய கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் உருண்டோடின. அருகில் இருந்தவர்கள் மௌனம் காக்க அந்த பாட்டியே தனது நிலையை விளக்க ஆரம்பித்தார். தன் மகள் வீட்டிலிருந்த அவர் கூலி வேலைக்குச் செல்பவர். அந்த பணத்தையும் மகளிடம் தான் கொடுப்பார். கடைசி ஓரிரண்டு வாரமாக உடல்நிலை சரி இல்லாததால் வேலைக்குச் செல்லவில்லையாம். இதனால் ஏசிய மகள் வார்த்தைகளை சகித்துக் கொண்டிருந்த அவர் உச்சக்கட்டமாக அந்த மகள் அடிக்க கை ஓங்க மனம் தாங்காத தாய் உள்ளம் அந்த தள்ளாத வயதில் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார் அதுவும் கையில் வெறும் 100 ரூபாயை வைத்துக் கொண்டு. இதை அவர் ச...

இட ஒதுக்கீடு..

இன்றைய சூழ்நிலையில் ஒரு பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ சேர வேண்டுமென்றால் முதலில் கேட்கப்படுவது மதிப்பெண்ணோ அல்லது விரும்பும் படிப்பையோ இல்லை. முதலில் கேட்கப்படும் கேள்வி நீ எந்த வகுப்பைச் சேர்ந்தவன்.?அதாவது உயர் வகுப்பை சேர்ந்தவனா இல்ல பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவனா என்பது தான்.ஏனென்றால் ஒருவன் என்னதான் நல்ல மதிப்பெண்கள் எடுத்து இருந்தாலும் அவன் நல்ல கல்லூரியில் அவனுக்கு பிடித்த பாடப்பிரிவில் சேர வேண்டும் என்றால் அது அவன் சேர்ந்த வகுப்பை சார்ந்தே அமைகிறது.காரணம் இட ஒதுக்கீடு.      நல்ல தரமான கல்வி என்பது இட ஒதுக்கீட்டால் பெறக் கூடியது அல்ல. இன்றளவில் நல்ல மதிப்பெண்கள் இருந்தும் ஒருவனால் அவனது விருப்பத்திற்கேற்ற நியாமான தரமான கல்லூரியில் சேர முடியவில்லை காரணம் உயர் வகுப்பை சேர்ந்தவன் என்பதால். ஆனால் அதே கல்லூரியில் அவனை விட குறைவான மதிப்பெண் எடுத்த ஒரு பிற்படுத்தப்பட்ட ஒருவனுக்கு இடம் கிடைக்கிறது. இதுக்குப் பேர் தான் சம உரிமையா? உயர் வகுப்பில் பிறந்தது அவனுடைய தவறா? இங்கு ஒருவன் கஷ்டப்பட்டதற்கான அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. இதற்கு பதிலாக ஒவ்வொரு பிரிவினருக்கு ஒ...

விடை தேடுகிறோமா கேள்வியாகிறோமா...!

தொழில் வளமிக்க சென்னை போன்ற புறநகர் பகுதிகளில் பாரம்பரியமாக வாழ்பவர்களை விட வேலைக்காக இடம் பெயர்ந்து வந்த இளைஞர்கள் தான் அதிகம். சமுகத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்கள். தனது தாய் தந்தை கஷ்டப்பட கூடாது என்பதற்காக ஊர் விட்டு ஊர் வந்து அவர்கள் இழக்கும் சின்னச் சின்ன சந்தோசங்கள் பற்றி யாரும் நினைத்து பார்ப்பதில்லை.நினைத்து பார்க்க மற்றவர்களுக்கு நேரம் கூட இல்லை. குடும்பத்திற்காக அப்பா வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் சகோதரியின் திருமணத்திற்க்கு பணம் திரட்ட வேண்டும் போன்ற பல காரணங்களால் படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள நடுத்தர குடும்பத்திலிருந்து வரும் இளைஞர்கள் உடனடியாக சென்னை போன்ற பகுதிக்கு வந்து தனக்கு பிடித்த தான் ஆசைப்பட்ட வேலையைப் பற்றி யோசிக்காமல் ஏதோ ஒரு வேலையில் சேருகின்றனர். ஒவ்வொரு மாதமும் வீட்டிற்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த இளைஞன் இழக்கும் விஷயங்கள் ஏராளமானவை... வெறும் 3 ரூபாயை மிச்சம் செய்வதற்க்காக பல மணி நேரம் White Board பேருந்துக்காக காத்திருந்து செல்லும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்...

பொறியியல் இன்றைய நிலைமை..

     கடந்த சில வருடங்களாக பொறியியல் படித்தால் லட்சக் கணக்கில் சம்பளம் என்ற மாய வலையில் விழுந்து தன் பிள்ளையை எப்படியாவது பொறியாளர் ஆக்க வேண்டும் என்ற ஆசையில் தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் பொறியியல் படிக்க வைக்கின்றனர். அதற்காக பல லட்சங்களையும் செலவு செய்கின்றனர். ஆனால் பொறியியல் படித்த இன்றைய இளைஞர்களின் நிலைமை என்ன.?      படித்த படிப்பிற்கு சரியான வேலை கிடைக்காமல் நம் இளைஞர்கள் அன்றாடம் தனது சான்றிதல்களை தூக்கிக் கொண்டு சாலைகளில் திரியும் காட்சியை பார்ப்பது மிக வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதற்காக யாரை குற்றம் சொல்வது.. அறியாமையால் ஆசைபடும் பெற்றோர்களையா இல்லை புற்றீசல் போல கல்லூரிகளை நிறுவ அனுமதி தரும் அரசையா..??      பொறியியல் கல்லூரிகளை அரசு பெருக்குவதற்கான காரணம் என்னவென்று புரியவில்லை..உண்மையில் அதற்கான வேலை வாய்ப்புகள்   இருக்கின்றனவா அதற்காகதான் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறதா..! வருடந்தோறும் வெளி வரும் பொறியாளர்களின்   எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இது சமுகத்திற்கு ஏற்றது அல்ல.மாணவர்...