Skip to main content

Posts

Showing posts from February, 2015

""மழைத்துளிகளின் பயணம்""

என் கதையில், ஒரு நாள் மேகத்தில் இருந்து தன் பயணத்தைக் கிளப்புகையில் எப்படியும் மண்ணை அடைய சில பல மணி நேரங்கள் ஆகுமென்று வெவ்வேறு திசையில் பயணிக்கத் தயாராக இருந்த இரு மழைத் துளிகள் ஒன்றோடு அறிமுகபடுத்திக் கொண்டு நண்பர்கள் ஆயின.. இரு மழைத் துளிகளும் தாங்கள் செல்லவிருக்கும் இடங்களைப் பற்றி பேச ஆரம்பித்தன. முதல் மழைத் துளி இரண்டாவது மழைத் துளியிடம் கேட்டது ., உனக்கு எங்கு செல்ல விருப்பம் நகரத்திற்கா இல்லை கிராமத்திற்கா.? என்று.. இரண்டாவது மழைத் துளி, தனக்கு எந்த விருப்பமும் இல்லை. ஆதலால் எங்கு சென்றாலும் பரவாயில்லை என்றது..! "சரி".. என்று முதல் மழைத் துளி தலைச் சாய்த்தது. இரண்டாவது மழைத் துளி அதே கேள்வியை முதல் மழைத் துளியிடம் கேட்டது.. முதல் மழைத் துளி மிகுந்த புன்னகையுடன் நான் கிராமத்திற்குச் செல்ல விருப்பபடுகிறேன் என்றது.. அதற்கு இரண்டாவது மழைத் துளி, கிராமத்திற்கா.? என்று ஏளன சிரிப்புடன் கேட்டது. முதல் மழைத் துளியும் "ஆம்" என்று தயக்கமில்லாமல் தலையசைத்தது. இரண்டாவது மழைத் துளி தன்னிடம் இரண்டு கேள்வி இருப்பதாகச் சொல்லி, முதல் கேள்வியாக நீங்கள் ஏன...
     வலைத்தளத்தில் ஆங்கிலத்தில் படித்த ஒரு கதை ஒவ்வொரு தாயிடமும் உறைந்துக் கிடக்கும் அறியபடாத மேன்மையை மனத்திற்குள் பாய்ச்சிச் சென்றது.. அந்த கதையை படித்து முடிக்கும் தருணத்தில் என்னை கேட்காமலேயே கண்ணீர்த் துளிகள் என் கண்களை ஆக்கிரமித்திருந்தன.        நான் படித்து, உணர்ந்த; நெகிழ்ந்த கதையை நீங்களும் படித்துணர்ந்து நெகிழ்வதற்காக...       நோய்வாய்ப்பட்டுக் கிடந்த தன் தந்தை இறந்ததும் தன் தாயை முதியோர் இல்லத்தில் அனுமதித்து விட்டு தன் வேலையைப் பார்க்க கிளம்பிவிடுகிறான் மகன். ஒரு நாள் முதியோர் இல்லத்திலிருந்து  அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில் அவனுடைய தாய் உடல் நலக்குறைவின்றி கிடக்கிறார் மேலும் அவர் தன் வாழ்வின் கடைசி நாட்களில் இருக்கிறார் என்று அறைக்கூவல் விட்டுவிட்டு அணைந்துவிடுகிறது அந்த அழைப்பு.       பதறிப்போன மகன் தன் தாயைப் பார்க்க முதியோர் இல்லத்திற்கு விரைகிறான். படுக்கையில் கிடக்கும் தாயைப் பார்த்து "உனக்கு என்னால் இப்பொழுது என்ன செய்ய முடியும்" என்று வினவுகிறான் மகன். ...
இலவசமாகக் கொடுக்கப்படும் எந்தவொரு விஷயமும் மனிதனின் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு வித்திடாது.. கல்வியைத் தவிர....!!! கார்த்திக் பிரகாசம்...
என் தனிமையைப் புத்தகங்களிடம் ஒப்படைத்தேன்.. இப்பொழுது என் தனிமை தனிமையில் தவித்துக் கொண்டிருக்கிறது.. கார்த்திக் பிரகாசம்..
பிரம்மனே கவிஞனாகவும் ஓவியனாவகவும்  சிற்பியாகவும் முப்பிறவி எடுத்திருக்கிறான் ஒரு பிறவியில் உன்னை படைப்பதற்காக...!!! கார்த்திக் பிரகாசம்...
மனதோ சொந்த ஊரில் சுதந்திரமாய் சுற்றிக் கொண்டிருக்கிறது.. உயிரோ இம்மாநகரத்தின் உக்கரத்தில் அமைவதென்றால் மறுபிறவியே வேண்டாமென்று  மன்றாடிக் கொண்டிருக்கிறது... கார்த்திக் பிரகாசம்..
படித்தவன் வேலைத் தேடிக் கொண்டே இருக்கிறான்.. படிக்காதவனோ தொழில் கற்றுக் கொண்டு இருக்கிறான்.. கார்த்திக் பிரகாசம்..
மண்ணுக்கும் புள்ளி(பிள்ளை)யாய்ப் பொட்டிட்டு பவுடராய் கோலமிட்டு விரல்களால் முத்தமிட்டு தன் குழந்தையைப் போல அழகுபடுத்தி ஆனந்தபடுகிறாள் பெண்.. மண்ணும் மானுட சிறப்பை அடைகிறது பெண்ணினால்.. கார்த்திக் பிரகாசம்...

என் காதலி..

நினைவாற்றங்கரையில் தடம் பதிக்காமல் காதலை மட்டும் பதித்துச் சென்றவள்.. கார்த்திக் பிரகாசம்...   

காதல் சிறகுகள்..

சிறகுகள் பிரிந்து பறவையை விண்ணில் பறக்க வைக்கின்றன.. சில காதலர்கள் பிரிந்தும் காதலை மண்ணில் சிறக்க வைக்கின்றனர்.. சிறகிலிருந்து பிரியும் இறகுகள் அந்த பறவையின் வாழ்கையை காற்றில் வாசித்துக் கொண்டிருக்கின்றன.. பிரிந்த காதலர்கள் காதலை தங்கள் வாழ்கைச் சுவடுகளில் நினைவுகளால் செதுக்கிக் கொண்டிருக்கின்றனர்.. கார்த்திக் பிரகாசம்..
கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ஆனால் கடவுள் நமக்கு எதாவது நல்லது செய்யமாட்டானா என்ற ஏக்கம் நம்மில் பெரும்பாலனோருக்கு இருக்கிறது... கார்த்திக் பிரகாசம்...

அக்கா...

நான் வளர்ந்த கருவில் எனக்கு முன் வளர்ந்தவள்.. அவள் அணிந்த சேலையில் எனக்கு தொட்டில் கட்டியதில்லை.. ஆனால் அவள் துப்பட்டாவில் எனக்கு தலை துவட்டி இருக்கிறாள்.. நான் தூங்கும் போது எனக்கு தாலாட்டு பாடியதில்லை ஆனால் இரவு முழுவதும் என்னை தன் தோளிலேயே சாய்த்துக் கொண்டு உறங்கியும் உறங்காமல் இருந்திருக்கிறாள்.. பசிக்கும் போது எனக்கு பால் கொடுத்ததில்லை ஆனால் தனக்கு பசித்தாலும் கூட தன் பங்கையும் சேர்த்து எனக்கு கொடுத்திருக்கிறாள்.. நான் என் அம்மாவின் இளைய மகன் ஆனால் என் அக்காவின் மூத்த மகன்.. கார்த்திக் பிரகாசம்...
அன்று என் உணர்வுகளைக் களவாடிச் சென்றவள் இன்று என் உடைமைகளைக் காத்துக் கொண்டிருக்கிறாள் கடவுச் சொல்லாக.. கார்த்திக் பிரகாசம்...
ஒருவரின் மீது அளவுக்கடந்த நம்பிக்கை வைக்க தயாராக இருக்கிறோம் என்றால் விரைவில் ஏமாறவும் தயாராக இருக்க வேண்டும்... கார்த்திக் பிரகாசம்...

உனக்காக பெண்ணே...!!!

தீயினில் விழுந்த "தங்கம்" திரும்ப பிழைத்து வருவது உனக்காக...!!! வெந்நீருக்குள் விரும்பி விழுந்து "வெள்ளி" விழைவது உனக்காக...!!! மண்ணுக்குள் மாய்ந்துக் கிடக்கும் "வைரம்" மறுபிறவி எடுப்பது உனக்காக...!!! கார்த்திக் பிரகாசம்...

வாடகைக் குழந்தை...!!!

கருவிலேயே கலைத்திருந்தால் தாயின் கருவறையே கல்லறையாவது புண்ணியமென்று கண் இமைக்கும் முன்னே கண்ணியமாக கண் மூடியிருப்பேன்.. குழந்தை இல்லாதவளுக்குத் தத்துக் கொடுத்திருந்தால் "என் தாய்" என்ற பெருமையுடன் வளர்ந்திருப்பேன்.. அவள் என்னைக் கலைக்கவும் இல்லை தத்துக் கொடுக்கவும் இல்லை தாரை வார்த்துவிட்டால் வாடகைக்கு.. நேற்று அடையாரு சிக்னலில் இன்று திருவான்மியூர் சிக்னலில் நாளைத் தெரியவில்லை.. ஆனால் கண்டிப்பாக ஏதாவதொரு சிக்னலில்தான் நின்றுக் கொண்டிருப்பேன் "பிச்சை எடுத்துக் கொடுப்பதற்காக".. சென்னையில் சிக்னல்களுக்கா பஞ்சம் சில்லறைகளுக்குத் தான் பஞ்சம்.. கார்த்திக் பிரகாசம்...

உணர்ந்தேன்...!!

என் வீட்டு மொட்டைமாடியில் இருந்து பார்த்தால் தெரிகிறது என்பதற்காக அந்த நிலவு எனக்கு மட்டும் சொந்தமில்லை.. கார்த்திக் பிரகாசம்..
என் வீட்டு அஞ்சறைப் பெட்டி முதல் அழுக்குத் துணி வரை அனைத்துக்கும்  இன்று அளவில்லா ஆனந்தம்.. அவளின் வளையல் ஓசையில் இத்துணை நாள் பேச முடியாத கதைகளை இனிதே பேசிட.. கலையிழந்துக் கிடந்த கண்ணாடி  இன்று விடிவதற்குள்ளேயே பவுடர் அடித்து பளபளவென்று நேரம் பறக்க காத்துக் கொண்டிருக்கிறது அவளின் பூ முகத்திற்காக... ஆம். திருமணம் முடிந்த கையோடு புகுந்த வீட்டிற்குச் சென்று விட்ட என் தங்கை இன்று வீட்டிற்கு வந்திருக்கிறாள்.. கார்த்திக் பிரகாசம்...

என் என்னவளுக்காக....!!!

உறைந்து போன என் உணர்வுகளுக்கு உயிர் அளிக்க பிறந்தவளுக்காக.. உணர்வுகளுக்கு உயிர் அளித்து அதை தன் உயிராய் உணர்பவளுக்காக.. என் உதிரத்திற்கு அழகான உருவம் கொடுக்க பிறந்தவளுக்காக.. என் வியர்வையையும் தன் உதிரத்தின் மாற்றுருவாய் காண்பவளுக்காக.. என் ஆழ்கடல் அன்பில் என்றென்றும் மூழ்கியே இருக்க போகும் "என் என்னவளுக்காக" காத்திருக்கிறேன்....!!! கார்த்திக் பிரகாசம்...

கடன்காரன்

உருவம் கொடுத்த தந்தையின் ஆசைகளுக்கு உயிர் கொடுக்க முடியாத மகன்.. கருவில் சுகமாக சுமந்து தள்ளிய தாயை அவளின் முதுமையால் சுமையெனத் தள்ளும் பிள்ளை.. முத்தம் எண்ணிகையில் இரண்டு குறைந்து இருந்ததை கண்டுபிடித்த காதலியிடம் மாட்டிக் கொள்ளும் காதலன்.. தன் சொந்த பந்தங்களையெல்லாம் தனக்காக உதறித் தள்ளிவிட்டு வந்த மனைவியின் அன்பிற்கு முன்னால் கானலாகும் கணவன்.. கார்த்திக் பிரகாசம்..
எங்களை அவமானபடுத்திவிட்டனர்; தரக்குறைவாக நடத்திவிட்டனர்; திரைப்படத்தில் கீழ்த்தரமாக சித்தரித்துவிட்டனர் என்று ஒருபுறம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.. மற்றொருபுறம், பயணம் செய்கையிலும் பொது இடங்களிடம் ஆண்களைக் கண்டால் "காசு கொடு" என்று கேட்பதும், கொடுக்கவில்லையென்றால் நச்சரிப்பதும் அவர்களின் மீதான மரியாதையை இழக்கச் செய்கிறது.. இன்று கண் முன்னே நடந்த ஒரு நிகழ்வு.... மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து சேத்துப்பட்டு சென்று கொண்டிருந்த போது இரண்டு திருநங்கைகள் நான் இருந்த பெட்டியில் ஏறினர். இடம் காலியாக இருந்ததால் ரயிலில் ஏறியவுடனே நான் அமர்ந்துவிட்டேன். அந்த இரண்டு திருநங்கைகளும் என்னருகில் வந்தனர். அதை தெரிந்து கொண்ட நான் முன்கூட்டியே தூங்குவதை போல் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். ஏனென்றால் இது போன்ற அனுபவம் எனக்கு ஏற்கனவே ஏற்பட்டிருந்தது. என்னருகில் ஒரு இளைஞர் இருந்தார். அவர் அருகே அந்த இருவரும் சென்றனர். "மாமா காசு கொடு" என்றனர் அவர்கள் கேட்டு முடிக்கும் முன்பே அந்த இளைஞர் "என்ட்ட இல்ல" என்றார். ஆனால் அவர்கள் செல்லவில்லை. இந்த முறை அவர்கள் "காசு கொ...