Skip to main content
     வலைத்தளத்தில் ஆங்கிலத்தில் படித்த ஒரு கதை ஒவ்வொரு தாயிடமும் உறைந்துக் கிடக்கும் அறியபடாத மேன்மையை மனத்திற்குள் பாய்ச்சிச் சென்றது.. அந்த கதையை படித்து முடிக்கும் தருணத்தில் என்னை கேட்காமலேயே கண்ணீர்த் துளிகள் என் கண்களை ஆக்கிரமித்திருந்தன. 

      நான் படித்து, உணர்ந்த; நெகிழ்ந்த கதையை நீங்களும் படித்துணர்ந்து நெகிழ்வதற்காக...

      நோய்வாய்ப்பட்டுக் கிடந்த தன் தந்தை இறந்ததும் தன் தாயை முதியோர் இல்லத்தில் அனுமதித்து விட்டு தன் வேலையைப் பார்க்க கிளம்பிவிடுகிறான் மகன். ஒரு நாள் முதியோர் இல்லத்திலிருந்து  அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில் அவனுடைய தாய் உடல் நலக்குறைவின்றி கிடக்கிறார் மேலும் அவர் தன் வாழ்வின் கடைசி நாட்களில் இருக்கிறார் என்று அறைக்கூவல் விட்டுவிட்டு அணைந்துவிடுகிறது அந்த அழைப்பு.

      பதறிப்போன மகன் தன் தாயைப் பார்க்க முதியோர் இல்லத்திற்கு விரைகிறான். படுக்கையில் கிடக்கும் தாயைப் பார்த்து "உனக்கு என்னால் இப்பொழுது என்ன செய்ய முடியும்" என்று வினவுகிறான் மகன்.

     உடனே அந்த தாய் எனக்கு ஒன்னும் வேணாம் கண்ணா. இந்த முதியோர் இல்லத்திற்கு ஒரு சில ஃபேன்களை வாங்கிக் கொடு. இரவில் சரியான காற்று வசதி இல்லாததால் இங்கிருப்பவர்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.. அப்புடியே நான் இங்கு வந்த நாள் முதல் நிறைய உணவுப் பொருட்கள் வீணாக காண்கிறேன். ஆதலால் ஃபிரிட்ஜ் ஒன்று வாங்கிக் கொடுத்து விடு என்கிறார்..

     அந்த மகனுக்கு பயங்கர ஆச்சரியம். தன் வாழ்நாளில் இதுவரையில்  தனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று ஒருபோதும் கேட்காத தன் தாய் இப்பொழுது இதை கேட்கிறாளே என்று.. உடனே அந்த ஆச்சரியத்தை அவளிடமே கேள்வியாகவும் விழைகிறான்..

    அதற்கு அந்த தாய் சொன்ன பதில், அவனுக்கு தன் உள்ளத்தில் கீறிய பாறைக் கற்களை கொண்டு எறிவது போல் இருந்தது. அந்த பதில் என்னவென்றால், மகனே நான் பிறந்தது முதலே நிறைய நாட்கள் உண்ணாமலையே இரவில் உறங்கி இருக்கிறேன். ஃபேன் காற்று இல்லாமல் இருந்தாலும் தூக்கம் என்னை ஒருபோதும் துறந்ததில்லை..

    ஆனால் நீயோ பசி தாங்க மாட்டாய். ஃபேன் இல்லையென்றால் ஒரு நிமிடம் கூட கண் உறங்க மாட்டாய். ஒரு வேளை உன்னுடைய வயதான காலத்தில் நீயும் இங்கு இருக்க வேண்டிய சூழ்நிலை உன் மகன்/மகனால் ஏற்படலாம். அப்பொழுது நீ உன் கடைசிக் காலத்தில் கஷ்டப்பட கூடாது என்பதற்காகத் தான் இவற்றையெல்லாம் இந்த முதியோர் இல்லத்திற்கு வாங்கித் தர சொல்கிறேன் ஏனென்றால் "உன் தாயாக எனக்குத் தான் தெரியும் உனக்கு என்ன தேவை என்று" என்று சொல்லி முடிக்கிறாள்.

    தாய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மகனின் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் உடைபட்டு அவன் கன்னங்களைத் தாண்டி பயணப்பட்டு கொண்டிருந்தது..

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...