Skip to main content
எங்களை அவமானபடுத்திவிட்டனர்; தரக்குறைவாக நடத்திவிட்டனர்; திரைப்படத்தில் கீழ்த்தரமாக சித்தரித்துவிட்டனர் என்று ஒருபுறம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்..

மற்றொருபுறம், பயணம் செய்கையிலும் பொது இடங்களிடம் ஆண்களைக் கண்டால் "காசு கொடு" என்று கேட்பதும், கொடுக்கவில்லையென்றால் நச்சரிப்பதும் அவர்களின் மீதான மரியாதையை இழக்கச் செய்கிறது..

இன்று கண் முன்னே நடந்த ஒரு நிகழ்வு....

மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து சேத்துப்பட்டு சென்று கொண்டிருந்த போது இரண்டு திருநங்கைகள் நான் இருந்த பெட்டியில் ஏறினர். இடம் காலியாக இருந்ததால் ரயிலில் ஏறியவுடனே நான் அமர்ந்துவிட்டேன். அந்த இரண்டு திருநங்கைகளும் என்னருகில் வந்தனர். அதை தெரிந்து கொண்ட நான் முன்கூட்டியே தூங்குவதை போல் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். ஏனென்றால் இது போன்ற அனுபவம் எனக்கு ஏற்கனவே ஏற்பட்டிருந்தது. என்னருகில் ஒரு இளைஞர் இருந்தார். அவர் அருகே அந்த இருவரும் சென்றனர். "மாமா காசு கொடு" என்றனர் அவர்கள் கேட்டு முடிக்கும் முன்பே அந்த இளைஞர் "என்ட்ட இல்ல" என்றார். ஆனால் அவர்கள் செல்லவில்லை. இந்த முறை அவர்கள் "காசு கொடுக்கலைனா உனுக்கு கலியாணம் ஆகாது" என்றனர். அவர் இன்னும் திருமணம் ஆகாதவர் போல, உடனே பாக்கெட்டில் இருந்து பத்து ரூபாயை எடுத்து கொடுத்துவிட்டார். அத்துடன் அவர்கள் முடித்து கொள்ளவில்லை. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி பக்கத்துக்குப் பெட்டிக்கு சென்று விட்டனர்.

சென்னையில் மின் தொடர்வண்டியில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இது புதிதல்ல. தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு தான். ஆனால் இது போன்ற அவர்களுடைய செய்கைகள் அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கும், அவர்களின் உரிமைக்காக போராடுபவர்களுக்கும் தலைக்குனிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

திருநங்கைகளை "மூன்றாவது பாலினமாக்குவது", அவர்களுக்கென்று "தனி இடஒதுக்கீடு"என்று காலமும், அவர்களின் மீதான பார்வையும் மாறி கொண்டு இருக்கிறது. இதை அவர்களும் புரிந்து கொண்டால் மற்றவர்கள் அவர்களை தரக்குறைவாக சித்தரிப்பதும், அவர்களே அவர்களை தாழ்த்திக் கொள்ளும் நிலையும், இனி இந்த சமூகத்தில் ஏற்படாது...

கார்த்திக் பிரகாசம்..

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...