ஒரு மாலை நேர சந்திப்பில், 0123456789 ஆகிய "எண்கள்" மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்து கொண்டிருந்தன.. ஏதேதோ பேசிக் கொண்டிருந்த எண்களுக்குள் திடிரென்று தங்களில் யார் பெரியவன்..? என்ற வினா எழுந்தது.. விவாதித்துக் கொண்டிருக்கும் போதே எண் 9 எண் 8யை கன்னத்தில் அடித்தது.. 8 அழுதுக் கொண்டே ஏன் என்னை அடித்தாய் என்று 9 விடம் கேட்டது.. அதற்கு 9, உன்னை விட நான் தான் பெரியவன் அதனால் தான் அடித்தேன் என்றது.. 9 இந்த பதிலைச் சொல்லி முடிக்கும் முன்பே 8, எண் 7யை அடித்தது.. உடனே 7, 6யை அடித்தது... 6, 5யை அடித்தது... 5, 4யை... 4, 3யை... 3, 2யை.. 2, 1யை அடித்தது.. அடுத்து 1ன் தருணம்... எண் 1, தன்னை சுற்றி பார்த்தது.. 0 அடுத்த அடி தனக்குத் தான் என்று பயந்து கொண்டு கன்னத்தில் கை வைத்து பாவமாக நின்று கொண்டிருந்தது.. 1, 0வின் அருகில் சென்றது.. அடிக்கப் போகிறது என்று 0, 1 அடிக்கும் முன்னே அழத் தொடங்கியது.. 1 அருகில் சென்று 0 யை அடிக்காமல் அதை தூக்கி...