பத்தாம் வகுப்பு...
அவன் பெயர் மணி.. நன்றாக படிக்கக் கூடிய மாணவன்.. இருந்தாலும் கடைசிப் பெஞ்சில் அமர்ந்திருந்தான். அதற்கு அழகான ஒரு காரணமும் இருந்தது.. அவனுடைய அன்புத் தோழி அந்த வரிசையில் தான் அமர்ந்திருந்தாள். இருவரும் உண்மையான நட்பை ஒருவர் ஒருவர் மீது வைத்திருந்தனர். மணியின் மனதிலோ அவளைப் பற்றிய நினைவுகளே எப்பொழுதும் ஓடிக் கொண்டிருந்தன. இது "காதல்" தான் என்று மணி நம்பினான். அதை அவளிடம் எப்படியாவுது சொல்லி விட முயற்சித்தான். ஆனால் ஒருவித தயக்கம் அவன் மனதில் தடையாக தடுத்துக் கொண்டிருந்தது.. இதில் இறுதித் தேர்வுகள் முடிந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது..
பன்னிரெண்டாம் வகுப்பு...
இரண்டு வருடங்கள் உருண்டோடி இருந்தன. அன்று பதினோராம் வகுப்பு மாணவர்கள் தங்களின் முன்னவர்களுக்கு பிரியா விடை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இன்று எப்படியாவது தன் காதலை சொல்லி விட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டான். அவளே அவனைத் தேடி வந்தாள். அருகில் வந்து, "நீ தான் என்னுடைய மிகச் சிறந்த நண்பன்" என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டு சென்றாள். எங்கு தன் காதலைச் சொன்னால் அவளது நட்பை இழக்க நேரிடுமோ என்று எண்ணி அன்று தன் காதலை சொல்லாமல் மனதிற்குள்ளே மறைத்துக் கொண்டான்..
கல்லூரி...
எதிர்பார்த்த விதமாக இருவரும் ஒரே கல்லூரியில் தான் பட்டப் படிப்பு பயின்றனர். ஒரு முறை அவளிடம், சீனியர்கள் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றனர்.. இதை அவள் அவனிடம் அழுதுக் கொண்டே கூறினாள். அவன் அவளை தன் தோளில் சாய்த்து ஆறுதல் கூறினான்.. ஆனால் அவன் மனதிற்குள் அப்பொழுதே அவளைக் கட்டி அணைத்து தன் காதலை சொல்ல வேண்டும் என்றிருந்தது.. அவளது நட்பை இழக்க நேரிடுமோ என்று எண்ணி அன்றும் தன் காதலை சொல்லாமல் மனதிற்குள்ளே மறைத்துக் கொண்டான்...
திருமணம்...
அன்று அவளுக்கு திருமணம்.. அவள் நண்பர்களிலேயே மணி மட்டும் தான் திருமணத்திற்கு சென்றிருந்தான். கல்யாணப் புடவையில் வழக்கத்தை விட மிகவும் அழகாக இருந்தாள்.. திருமணத்திற்கு வந்ததற்காக அவள் மணிக்கு நன்றி சொல்லி அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.. அன்றாவுது காதலைச் சொல்ல எண்ணி அவள் மகிழ்ச்சியைப் பார்த்து தன் மனதை மாற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்...
வருடங்கள் வாய்க்காலில் வழிந்தோடும் தண்ணீரைப் போல ஓடின.. பல வருடங்களுக்கு பிறகு அவள் இறந்து விட்டாள் என்று செய்தி காற்றில் பறந்து வந்தது.. தாங்க முடியா துக்கத்தில் மணி அவளின் இறுதிச் சடங்கிற்கு சென்றான்..
இறுதிச் சடங்கு...
மணி அவளின் இறுதிச் சடங்கு நடக்கும் இடத்திருக்குச் சென்றான்.. அவளின் மகன் மகள்களைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதான்.. அவளின் மகன், மணியிடம் வந்து பேசினான்.. நீங்கள் கண்டிப்பாக வருவீர்கள் என்றும், அவ்வாறு நீங்கள் வரும் பட்சத்தில் இந்த டைரியை உங்களிடம் கொடுக்கும்படி சொன்னதாகவும் கூறினான்..
மணி அந்த டைரியை பொக்கிஷமாக நினைத்தான்.. பூவின் கையெழுத்தில் தீட்டப்பட்ட அந்த காவியத்தை, காதலாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட அந்த பக்கங்களை இமைகளுக்கு ஓய்வு கொடுக்காமல் கண்களில் படர விட்டான்..
ஒவ்வொரு வரியும் அவளது நினைவுகளையும் அவனது கண்ணீரையும் சலவை செய்துக் கொண்டிருந்தன.
அவள் எழுதி இருந்தாள்.. ""... வா மணி. நீ வருவாய் என்று எனக்கு தெரியும்... உண்மையில் நான் ஒரு தோற்றுப் போனவள். உன்னை மிகவும் நேசித்தேன்.. நேசிக்கிறேன்.. ஒரு நண்பன் என்ற அளவில் மட்டும் என் வாழ்வில் நீ இருக்கவில்லை.. என் வாழ்வில் எனக்கு நேர்ந்த மிக உன்னதமான உண்மையான அன்பு நீ.. பத்தாம் வகுப்பு படிக்கும் போதே என் காதலை உனக்கு சொல்லி விட நினைத்தேன்.. அன்று முதல் எத்தனையோ தருணங்களில் என் காதலை வெளிபடுத்த முயன்று ஒரு வித தயக்கத்தினால் சொல்லவில்லை.. எனக்கு திருமணம் நிச்சியக்கப்பட்ட போது கூட, உன்னை கட்டிப்பிடித்து எனக்கு உன்னை பிடித்திருக்கிறது... மீதமுள்ள என் வாழ்நாட்கள் உன்னோடுதான் இருக்க வேண்டும் என்று கதற வேண்டும் போலிருந்தது.. எங்கு காதலை சொல்லி உன்னையும் உன் நட்பையும் இழக்க நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் என் காதலை என் மனத்திற்குள்ளே மடித்து விட முயற்சித்திருந்தேன்.. ஆனால் முடியவில்லை.. சொல்லி மறுக்கபடுவதை விட சொல்லாமல் மறந்துவிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டேன்.. இத்துனை நாள் என் உடலும் உயிரும் மட்டும் தான் இன்னொருவனுக்காக வாழ்ந்துக் கொண்டிருந்தது.. ஆனால் என் மனதும், என் நினைவுகளும் உன்னாலேயே வாழ்ந்துக் கொண்டிருந்தன..
இப்பொழுதும் சொல்லவில்லையென்றால் இறந்தும் என்னால் நிம்மதியாக இருக்க இயலாது.. ஆதலால் என் பல வருட சுமையை இப்பொழுதாவுது சற்று இறக்கி வைக்க நினைக்கிறேன்.. நான் என் வாழ்வை விட உன்னை அதிகமாக நேசிக்கிறேன்.. உன் நினைவுகளோடு நினைவுகளாக வாழ்ந்ததால் இந்த வாழ்வும் எனக்கு இனிக்கிறது...
என்று எழுதி இருந்தது.. படித்து முடித்த தருணத்தில் மணியின் கண்களில் கண்ணீர் காட்டு வெள்ளம் போல திரண்டிருந்தது..
கண்ணீரைத் தன் காதலுக்கு காணிக்கையாக்கி அந்த டைரியை நெஞ்சுக்குள் புதைத்து, தன் விதியையும் காதலையும் நினைத்து அழுதுக் கொண்டே உயிரை அங்கேயே விட்டு விட்டு நீங்கா நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு சென்றான் மணி...
கார்த்திக் பிரகாசம்...
அவன் பெயர் மணி.. நன்றாக படிக்கக் கூடிய மாணவன்.. இருந்தாலும் கடைசிப் பெஞ்சில் அமர்ந்திருந்தான். அதற்கு அழகான ஒரு காரணமும் இருந்தது.. அவனுடைய அன்புத் தோழி அந்த வரிசையில் தான் அமர்ந்திருந்தாள். இருவரும் உண்மையான நட்பை ஒருவர் ஒருவர் மீது வைத்திருந்தனர். மணியின் மனதிலோ அவளைப் பற்றிய நினைவுகளே எப்பொழுதும் ஓடிக் கொண்டிருந்தன. இது "காதல்" தான் என்று மணி நம்பினான். அதை அவளிடம் எப்படியாவுது சொல்லி விட முயற்சித்தான். ஆனால் ஒருவித தயக்கம் அவன் மனதில் தடையாக தடுத்துக் கொண்டிருந்தது.. இதில் இறுதித் தேர்வுகள் முடிந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது..
பன்னிரெண்டாம் வகுப்பு...
இரண்டு வருடங்கள் உருண்டோடி இருந்தன. அன்று பதினோராம் வகுப்பு மாணவர்கள் தங்களின் முன்னவர்களுக்கு பிரியா விடை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இன்று எப்படியாவது தன் காதலை சொல்லி விட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டான். அவளே அவனைத் தேடி வந்தாள். அருகில் வந்து, "நீ தான் என்னுடைய மிகச் சிறந்த நண்பன்" என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டு சென்றாள். எங்கு தன் காதலைச் சொன்னால் அவளது நட்பை இழக்க நேரிடுமோ என்று எண்ணி அன்று தன் காதலை சொல்லாமல் மனதிற்குள்ளே மறைத்துக் கொண்டான்..
கல்லூரி...
எதிர்பார்த்த விதமாக இருவரும் ஒரே கல்லூரியில் தான் பட்டப் படிப்பு பயின்றனர். ஒரு முறை அவளிடம், சீனியர்கள் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றனர்.. இதை அவள் அவனிடம் அழுதுக் கொண்டே கூறினாள். அவன் அவளை தன் தோளில் சாய்த்து ஆறுதல் கூறினான்.. ஆனால் அவன் மனதிற்குள் அப்பொழுதே அவளைக் கட்டி அணைத்து தன் காதலை சொல்ல வேண்டும் என்றிருந்தது.. அவளது நட்பை இழக்க நேரிடுமோ என்று எண்ணி அன்றும் தன் காதலை சொல்லாமல் மனதிற்குள்ளே மறைத்துக் கொண்டான்...
திருமணம்...
அன்று அவளுக்கு திருமணம்.. அவள் நண்பர்களிலேயே மணி மட்டும் தான் திருமணத்திற்கு சென்றிருந்தான். கல்யாணப் புடவையில் வழக்கத்தை விட மிகவும் அழகாக இருந்தாள்.. திருமணத்திற்கு வந்ததற்காக அவள் மணிக்கு நன்றி சொல்லி அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.. அன்றாவுது காதலைச் சொல்ல எண்ணி அவள் மகிழ்ச்சியைப் பார்த்து தன் மனதை மாற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்...
வருடங்கள் வாய்க்காலில் வழிந்தோடும் தண்ணீரைப் போல ஓடின.. பல வருடங்களுக்கு பிறகு அவள் இறந்து விட்டாள் என்று செய்தி காற்றில் பறந்து வந்தது.. தாங்க முடியா துக்கத்தில் மணி அவளின் இறுதிச் சடங்கிற்கு சென்றான்..
இறுதிச் சடங்கு...
மணி அவளின் இறுதிச் சடங்கு நடக்கும் இடத்திருக்குச் சென்றான்.. அவளின் மகன் மகள்களைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதான்.. அவளின் மகன், மணியிடம் வந்து பேசினான்.. நீங்கள் கண்டிப்பாக வருவீர்கள் என்றும், அவ்வாறு நீங்கள் வரும் பட்சத்தில் இந்த டைரியை உங்களிடம் கொடுக்கும்படி சொன்னதாகவும் கூறினான்..
மணி அந்த டைரியை பொக்கிஷமாக நினைத்தான்.. பூவின் கையெழுத்தில் தீட்டப்பட்ட அந்த காவியத்தை, காதலாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட அந்த பக்கங்களை இமைகளுக்கு ஓய்வு கொடுக்காமல் கண்களில் படர விட்டான்..
ஒவ்வொரு வரியும் அவளது நினைவுகளையும் அவனது கண்ணீரையும் சலவை செய்துக் கொண்டிருந்தன.
அவள் எழுதி இருந்தாள்.. ""... வா மணி. நீ வருவாய் என்று எனக்கு தெரியும்... உண்மையில் நான் ஒரு தோற்றுப் போனவள். உன்னை மிகவும் நேசித்தேன்.. நேசிக்கிறேன்.. ஒரு நண்பன் என்ற அளவில் மட்டும் என் வாழ்வில் நீ இருக்கவில்லை.. என் வாழ்வில் எனக்கு நேர்ந்த மிக உன்னதமான உண்மையான அன்பு நீ.. பத்தாம் வகுப்பு படிக்கும் போதே என் காதலை உனக்கு சொல்லி விட நினைத்தேன்.. அன்று முதல் எத்தனையோ தருணங்களில் என் காதலை வெளிபடுத்த முயன்று ஒரு வித தயக்கத்தினால் சொல்லவில்லை.. எனக்கு திருமணம் நிச்சியக்கப்பட்ட போது கூட, உன்னை கட்டிப்பிடித்து எனக்கு உன்னை பிடித்திருக்கிறது... மீதமுள்ள என் வாழ்நாட்கள் உன்னோடுதான் இருக்க வேண்டும் என்று கதற வேண்டும் போலிருந்தது.. எங்கு காதலை சொல்லி உன்னையும் உன் நட்பையும் இழக்க நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் என் காதலை என் மனத்திற்குள்ளே மடித்து விட முயற்சித்திருந்தேன்.. ஆனால் முடியவில்லை.. சொல்லி மறுக்கபடுவதை விட சொல்லாமல் மறந்துவிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டேன்.. இத்துனை நாள் என் உடலும் உயிரும் மட்டும் தான் இன்னொருவனுக்காக வாழ்ந்துக் கொண்டிருந்தது.. ஆனால் என் மனதும், என் நினைவுகளும் உன்னாலேயே வாழ்ந்துக் கொண்டிருந்தன..
இப்பொழுதும் சொல்லவில்லையென்றால் இறந்தும் என்னால் நிம்மதியாக இருக்க இயலாது.. ஆதலால் என் பல வருட சுமையை இப்பொழுதாவுது சற்று இறக்கி வைக்க நினைக்கிறேன்.. நான் என் வாழ்வை விட உன்னை அதிகமாக நேசிக்கிறேன்.. உன் நினைவுகளோடு நினைவுகளாக வாழ்ந்ததால் இந்த வாழ்வும் எனக்கு இனிக்கிறது...
என்று எழுதி இருந்தது.. படித்து முடித்த தருணத்தில் மணியின் கண்களில் கண்ணீர் காட்டு வெள்ளம் போல திரண்டிருந்தது..
கண்ணீரைத் தன் காதலுக்கு காணிக்கையாக்கி அந்த டைரியை நெஞ்சுக்குள் புதைத்து, தன் விதியையும் காதலையும் நினைத்து அழுதுக் கொண்டே உயிரை அங்கேயே விட்டு விட்டு நீங்கா நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு சென்றான் மணி...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment