Skip to main content

0 1 2 3 4 5 6 7 8 9

    ஒரு மாலை நேர சந்திப்பில், 0123456789 ஆகிய "எண்கள்"  மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்து கொண்டிருந்தன..

     ஏதேதோ பேசிக் கொண்டிருந்த எண்களுக்குள் திடிரென்று தங்களில் யார் பெரியவன்..? என்ற வினா எழுந்தது..

      விவாதித்துக் கொண்டிருக்கும் போதே எண் 9 எண் 8யை கன்னத்தில் அடித்தது.. 8 அழுதுக் கொண்டே ஏன் என்னை அடித்தாய் என்று 9 விடம் கேட்டது..

      அதற்கு 9, உன்னை விட நான் தான் பெரியவன் அதனால் தான் அடித்தேன் என்றது.. 9 இந்த பதிலைச் சொல்லி முடிக்கும் முன்பே  8, எண் 7யை அடித்தது..

      உடனே 7, 6யை அடித்தது... 6, 5யை அடித்தது... 5, 4யை... 4, 3யை... 3, 2யை.. 2, 1யை அடித்தது..

      அடுத்து 1ன் தருணம்... எண் 1, தன்னை சுற்றி பார்த்தது.. 0 அடுத்த அடி தனக்குத் தான் என்று பயந்து கொண்டு கன்னத்தில் கை வைத்து பாவமாக நின்று கொண்டிருந்தது..

       1, 0வின் அருகில் சென்றது.. அடிக்கப் போகிறது என்று 0, 1 அடிக்கும் முன்னே அழத் தொடங்கியது.. 1 அருகில் சென்று 0 யை அடிக்காமல் அதை தூக்கி தன் அருகில் இட்டுக் கொண்டது...  1ம், 0ம்  தங்களை ஒருவரையொருவர் பார்த்து அதிசயித்துக் கொண்டன.. ஏனென்றால் இப்பொழுது  அவற்றின்  மதிப்பு 10 ஆக உயர்ந்திருந்தது...

      அடுத்து என்ன..????


     1ன் இந்த எதிர்பாராத செய்கையால் மற்ற எண்கள் முழிப் பிதுங்கி நின்றன.


     1ம் 0ம் ஒன்றானதால் பயத்தில் தலைத் தெறிக்க  ஓடத் தொடங்கின...

      மற்ற எண்கள் ஓடுவதைக் கண்டு 1ம் 0ம் வயிறுக் குலுங்க குலுங்க சிரித்து, தோளில் கைப் போட்டுக் கொண்டே வீடு திரும்பின...


கார்த்திக் பிரகாசம்...



Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...