Skip to main content

நிலாச் சோறு...

      "அம்மா.. ரொம்ப பசிக்குது.. குடிக்க கஞ்சி எடுத்து குடு மா.."" என்று அவசர அவசரமாகக் கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் மணி..

     சரஸ்வதி வாயைத் திறந்து எதுவும் சொல்லாமல் அமைதியாக முதுகை முன் வாசலுக்குக் காட்டி அமர்ந்திருந்தாள்..

      மணி சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு, அம்மா நீ சீக்கிரம் கஞ்சி எடுத்து வை. நான் வாசல்ல போய் வானத்துல நிலா வந்திருச்சான்னு பாக்குறேன் என்று சொல்லிவிட்டு வாசலில் வந்து நின்று, நிலா வராததைக் கண்டு "..ரொம்ப பசிக்குது நிலா.. நீ சீக்கிரம் வா.. நீ வந்த தான் சாப்பிட முடியும் என்று.." வானத்தையே பார்த்து பேசிக் கொண்டிருந்தான் மணி..

     பாவம் சரஸ்வதி மட்டும் என்ன செய்வாள். அவளும் முழுதாய் மூணு வேளை சாப்பிட்டது அவள் கணவன் உயிரோடு இருக்கும் வரை தான்.. அவன் ஒரு நாள் அதிகமாக குடித்து விட்டு போதையில் லாரியில் மோதி அடிபட்ட இடத்திலேயே இறந்து விட்டான்.. அந்த நாள் முதலே அடுத்த வேளை கஞ்சிக்கே அவதிப்படும் நிலை தான் அவளுக்கு.. மணி வேற சின்னப் பையன். அப்பா இறக்கும் போது அவனுக்கு நினைவுக் கூட தெரியாது.. நிலைமைத் தெரியாமல் "பசிக்குது மா பசிக்குது மா .." என்று பசியால் துடித்துக் கொண்டே இருப்பான்.

     கஞ்சி இருக்கும் வேளையில் நிலவைப் பார்த்துக் கொண்டே இருவரும் சாப்பிடுவது தான் வழக்கம். அதனால் தான், மணி வாசலில் நின்றுக் கொண்டு நிலாவின் வருகைக்காக வயிற்றில் பசியுடன் காத்துக் கொண்டிருந்தான்.

      ஆனால் அந்த சின்னச்சிறு பிஞ்சுக்குத் தெரியவில்லை.. ""இன்று அமாவாசை ஆதலால் நிலா வரப் போவதுமில்லை. தன் வயிறு நிறைய போவதுமில்லை..

       வழக்கம் போல் அன்றும் தன் நிலையை நினைத்து, விதியின் தீராத தாகத்தைத் தன் கண்ணீரால் தீர்க்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள் சரஸ்வதி....

     கார்த்திக் பிரகாசம்...
       

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...