Skip to main content

Posts

Showing posts from March, 2018

"நில்லுங்கள் ராஜாவே"

சுஜாதாவின் பிரம்மாண்டங்களில் மற்றுமொன்று "நில்லுங்கள் ராஜாவே". முதல் பக்கத்தில் இருந்தே தொடங்கிவிடும் பரபரப்பு, கடைசிப் பக்கம் முடியும் வரையிலும் துளிக்கூட குறைவில்லாமல் கதைக்குள் உள்ளிழுத்துச் சென்று உலாவ விடுகிறது. ஒரு நினைவுகளை அகற்றி அவனின் ஆழ்மனதை வசப்படுத்தி, அவனுக்குள் வேறொரு மனிதனின் நினைவுகளை புகுத்தி, அதனை அவனின் ஆழ்மனதுக்குள் நன்கு பதிய வைத்து, "நான் இவன் தான்" என்று தன்னைப் பற்றிய நினைவுகளே இல்லாமல், நினைவுகள் புகுத்தப்பட்ட அந்த மனிதனாகவே மாறிவிடும் ஒரு சாமானிய மனிதனின் கதை. நினைத்துப் பார்க்கும் போதே தலைச்சுற்ற வைக்கிற கதையமைப்பு. முதல் பாதியில் நினைவுகள் புகுத்தப்பட்ட அந்த மனிதனைச் சுற்றியே வலம் வரும் கதை, இரண்டாம் பாதியில் அதிர்ச்சியளிக்கும் விதமாக " ' ஆழ்மனதை கட்டுப்படுத்தும் மருத்துவம்' ' புதிதாகக் குடியாட்சி பெற்ற சிலியானா என்ற கம்யூனிச நாடு' மற்றும் 'அமெரிக்காவின் சி.ஐ.ஏ ' " என்று பரந்து விரிகிறது. ஏற்கனவே இருக்கும் " ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், ரத்தம் ஒரே நிறம், பிரிவோம் சந்திப்போம் " என்று நீளும் சுஜாதாவ...

ஊரும் சேரியும்

இது சித்தலிங்கையாவின் சுயசரிதை. ஒரு தலித்தின் சுயசரிதை. ஆனால் இது சாதித்தவனின் சுயபுராணமல்ல. தான் அனுபவித்த கஷ்டங்களின் வெற்றுப் பிதற்றல் அல்ல. அதேசமயம் அதைத் தாண்டி ஜெயித்த சுயதம்பட்டமமுமல்ல. இது சேரி வாழ் மக்களின் வாழ்க்கை. அவர்களின் மீது  அனுதாபத்தை ஏற்படுத்தாத எதார்த்தனமான அவர்தம் அன்றாட வாழ் நிகழ்வுகளின் தொகுப்பில் தன்னையும் ஒரு பாத்திரமாக்கிக் கொண்டு தான் வாழ்ந்த நாட்களை, கடந்து வந்த பாதையை எட்டிநின்று வேடிக்கைப் பார்க்கும் கடைநிலை பார்வையாளனாய் நகர்த்தும் கதையோட்டத்தினூடாக அம்மக்களின் வறுமை, இயலாமை, மூடநம்பிக்கை, கல்வி ஆசை, குடும்ப உறவு, அறியாமை, மேல் சாதியினரைப் பகைத்துக் கொள்ளாமை, அவர்களுக்குக் கீழ்படிதல், அவமானம்,  அடிமைத்தனம் என்றறிந்தே அடிமையாய் இருப்பது, மூன்று வேளைச் சாப்பிடுவதற்கான பிரயத்தனம், நல்ல சாப்பாட்டுக்கான ஏக்கம், உரிமைப் போராட்டம் என்று அனைத்துக் கூறுகளையும் கண்முண்ணே படமெடுத்து  வைக்கிறார் சித்தலிங்கையா.. கார்த்திக் பிரகாசம்...

நான் ஒரு இந்துவாகச் சாகமாட்டேன்

"கெடுவாய்ப்பாக நான் ஒரு தீண்டத்ததகாத இந்துவாகப் பிறந்துவிட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது ஆனால் அறுவறுக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்ன...

மனோரதம்

மரணிக்கும் தருவாயிலும் பேரன்பும் பேரழகியுமாய் உணர வேண்டுமா.? ஓர் கவிஞனைக் காதலியிங்கள்...!!! மரணித்த பின்பும் இம்மண்ணில் மறுமுறை சுவாசிக்க வேண்டுமா.? ஓர் எழுத்தாளனை ...

விஜயா

"ஏய்...! விஜயா எப்டி இருக்க.?" "நல்லா இருக்கேன் பாயம்மா. நீ எப்டி இருக்க" 'நல்லா இருக்குறனால தான் போறவள நிக்க வெச்சிப் பேசிட்டுக் கெடக்கேன்'. "ம்ம்ம் அதும் சரிதான்.. இதான் என் ...

வேடிக்கை மனிதன்

அங்கு யார் யாரோ அவசர அவசரமாய் வளர்ந்து அவசர அவசரமாய் சம்பாதித்து அவசர அவசரமாய் அனைத்தையும் அனுபவித்து அவசர அவசரமாய் சாவையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்...!!! நான் ...

ஆதிரை

சீவி சிங்காரித்து வழிந்தோடும் அழகில் ஒரு சிறு துளி மட்டும் துடைத்தெடுத்து மழலையின் கன்னத்தில் தீட்டிட்ட திருஷ்டிப் பொட்டை போல அவளது கண்ணின் கருவிழிக்கருகிலே...

"வாழ்க்கையென்ற ஓட்டத்துக்கு வெளியே"

மனிதனின் வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து பசியென்ற ஒற்றை உணர்வு மட்டும் இல்லாது போனால் சுழலும் பூமி தன் சுழற்சியை நிறுத்திவிடுமா.? வேண்டாம் குறைந்தபட்சம் தன் வேகத்தையாவது குறைத்துக் கொள்ளுமா.? பசியென்ற உணர்வு ஒருவேளை வயிற்றுக்கு மட்டும் இருந்திருந்தால் ஆரம்பித்த இடத்திலேயே உலகம் தொடர்ந்து சுழன்றுக் கொண்டிருந்திருக்குமா.? உயிர் வாழ அடிப்படையான வயிற்றுப் பசிக்காக ஓடத் தொடங்கிய முதல் மனிதனின் வாழ்க்கை இன்று ஒவ்வொரு புலனின் பசிக்காகவும் பல்கிப் பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது. வயிற்றில் தொடங்கும் பசி உடலெங்கும் ஊடுருவி "உடல் பசி, பொருளாதார பசி, அந்தஸ்து பசி, ஆடம்பர பசி, கௌரவ பசி, காமப் பசி, அதிகார பசி" என்று இன்னும் ஏதேதோ ரூபத்தில் மனிதனைத் துரத்திக் கொண்டிருக்கிறது. ஒரு புலனின் பசி தீர்ந்தால் இன்னொன்று. அதுவும் அடைந்துவிட்டால் மற்றொன்று. இதில் எந்தப் பசியும் இல்லாவிட்டால் புதிதாக ஒரு பசி. அனைத்துப் பசியையும் தனதாக்கிக் கொண்டு ஒரே ஓட்டமாக உலகம் ஓடுகின்றது. இந்த ஓட்டம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாய் உள்ளது. ஆனால் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். யாரோ என்னைத் துரத்துகிறார்கள் இல்லை இழுத...

பிரகாசமான இருள்

அவளுக்குக் காதலிக்கவும் பயம் எவராவது அளவில்லா காதலை அவளின் மீது கொட்டிவிட்டாலும் பயம் பிரகாசமான இருளின் மோனத்தை பேரிரைச்சலாய் பயந்தொடுங்கி கூட்டுக்குள் அடை...

3D

நானும் டீயும் தாடியும் கண்ணாடியும் நிரந்தர தோழர்கள்...!!! கார்த்திக் பிரகாசம்..

கனவாகவே இருந்திருந்தால்

"காலைலேயே உங்கிட்ட சொன்னேன். ரொம்ப லேட் பண்ணாம சாயந்தரம் சுருக்க கெளம்பிடு. எட்டு மணிக்கு மேல ஆச்சுன்னா டாக்டர் கிளீனிக்'ல இருந்து போய்டுவாங்கனு. பாரு இப்பவே மணி ஏழரை ஆயிடுச்சு. திருச்சில என்ன கொஞ்சநஞ்ச கூட்டமா இருக்கு. மொத்த ஜனமும் ரோட்டுல தான் இருக்கும் போல. எப்போ போனாலும் அவ்வளவு டிராபிக். இதுல எங்க எட்டு மணிக்குள்ள போறது" சூடான எண்ணெய்யில் கொட்டிய கடுகைப் போல மித்ரன் பொரிந்துத் தள்ளினான். "சரி..! சரி..! சும்மா கத்தாதீங்க.. உங்க பையன் கைய கால வச்சிக்கிட்டு சும்மா இருந்தாதானே. எந்நேரமும் வயித்துல எட்டி எட்டி உதைச்சிகிட்டே இருந்தா.. நான் என்னதான் பண்றதாம்மா.?" என்று அவனின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினாள் ராகவி. அவள் கைபட்டதும், முதல் வெண்பனியில் குளித்த துளசியைப் போல அவனின் உடல் குளிர்ந்தது. கன்னங்கள் சிவந்தது. கோபமெல்லாம் கும்பகோணம் தாண்டி எங்கோ போனது. "அதெப்படி கண்ணு, நான் எவளோ கோவத்துல இருந்தாலும் ஒரே சீண்டல்ல மொத்தத்தையும் கம்மங்கூழ் மாதிரி கரைச்சிப்புட்ற" மித்ரன் குழைந்தான். "அவள் பதிலேதும் சொல்லாமல் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்...

காற்றில் ஆடும் பக்கம்

வாழ்க்கையில் இனி யார் கண்ணில் முழித்து விடக்கூடாது என்று நினைத்திருந்தானோ அவரை பல வருடங்களுக்குப் பிறகு இன்று பார்த்துத் தொலைத்துவிட்டான் மித்ரன். அவரும் அவனைக் கவனித்துவிட்டார். இவன் கண்டுக்காதது போல் சென்றுவிடலாம் என்றுதான் இருந்தான். ஆனால் அவரே அவனருகில் வந்தார்.  "என்னப்பா. ரவுண்டா அம்பது வருதா" 'இல்லீங்க. "நாப்பத்தி நாலு நாப்பதஞ்சு தான் வருது' "நீ வேலைக்குப் போய் அஞ்சு வருஷம் இருக்கும்ல". 'ஆமாங்க' "என்னப்பா அஞ்சு வருஷமாச்சுங்குற இன்னும் அம்பதுக் கூட வரலயா...?" "இதோ இந்த ஏப்ரல்ல அம்பத தொட்டுடும்னு நினைக்கிறேன்...!" மித்ரனுக்கு எரிச்சலும் ஆத்திரமும் மனதுக்குள் பொங்கி வந்தன. அவற்றை மனக் கண்ணீராய் கட்டுப்படுத்திக் கொண்டு அவர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மரியாதையோடு பதில் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.  இவ்வளவு நேரம் அவர் கேட்டதெல்லாம் அவனின் சம்பளத்தைப் பற்றி தான். மித்ரனுக்கு இருப்பதைந்தாயிரம்கூட கைக்கு வருவதில்லை இருந்தாலும் வெறுப்புடன் வாய்க்கு வந்தததை அடித்துவிட்டுக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முறை பார்க்கும்...

சிந்தனை

சிலைகளை வீழ்த்தலாம் சிந்தனைகளை..? சின்னங்களைச் சிதைக்கலாம் சித்தாந்தத்தை..? கனவுகளைக் கலைக்கலாம் கருத்தியலை..? அடையாளங்களை அழிக்கலாம் ஆணிவேரை..? கார்த்திக் பிரகாசம்...

பணமாகிய யாவும்

பணத்திற்குச் சாதி மதம் இனம் கிடையாது ஏனென்றால் பணமென்பதே தனி மதம் பணமென்பதே தனித்த சாதி பணமென்பதே தனித்த இனம்...! கார்த்திக் பிரகாசம்...

ஓர் பயணம்

கிளம்புவதற்கு முன் படுக்கையில் வெகுநேரம் கட்டியணைத்துப் புரண்டார்கள். இவ்வுலகில் இவர்கள் மட்டும் தனித்து விடப்பட்டதைப் போல் முத்தமிட்டார்கள். காந்தத்தைப் போல ஒட்டிக் கொண்டார்கள். ஆடை துறந்து தேகம் மறந்து ஒருவர் உடலுக்குள் இன்னொருவர் மாறி மாறி ஊடுருவினர். மஞ்சத்தை வியர்வைத் துளிகளால் நனைத்தனர்.  சிக்னலில் வண்டியை நிறுத்தி கண்ணாடியில் அவளைக் கவனித்தான். பின் இருக்கையில் சிறிதுத் தள்ளி அமர்ந்திருந்தாள். எப்பொழுதும் இப்படித் தள்ளி உட்காருபவள் அல்ல அவள். இருச்சக்கர வாகனத்தில் செல்லும் போதெல்லாம், அவளுடைய மார்பு அவனின் முதுகில் உரசி தன் தடத்தைப் பதிக்காமல் இருந்ததாய் நினைவில் இல்லை. இப்பொழுது அவனுடைய முதுகிற்கும் அவளுடைய மார்பிற்கும் இடையே இருக்கும் இந்த இடைவெளி அவனை வெகுவாய் பாதித்தது.    "ஏன் தள்ளி அமர்ந்திருக்கிறாய்.?" அவளிடமே கேட்டான். "நமக்குள் இவ்வளவு நடந்த பிறகும், இந்தச் சிறிய பயணத்திலும்கூட நான் உன்னைக் கட்டியணைத்து அமரவில்லை என்பது உனக்கு உருத்துகிறதா.?" அவள் கலங்கினாள். "அடியே.! என் இராட்சசக் காதலியே.!  இறுகக் கட்டிக்கொள்.! நாம் பயணிக்க வ...

இன்னொரு புரட்சியாளன்

'பாப் மார்லி'யின் பெயரிடப்பட்ட அரைக் கால் ட்ரவுசர் 'சே'வின் புகைப்படமிட்ட மேல் சட்டை இழவு வீட்டில் பறையடித்துக் கொண்டிருந்தான் இன்னொரு புரட்சியாளன்...! கார்த்திக் பிரகாசம்...