Skip to main content

"வாழ்க்கையென்ற ஓட்டத்துக்கு வெளியே"

மனிதனின் வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து பசியென்ற ஒற்றை உணர்வு மட்டும் இல்லாது போனால் சுழலும் பூமி தன் சுழற்சியை நிறுத்திவிடுமா.? வேண்டாம் குறைந்தபட்சம் தன் வேகத்தையாவது குறைத்துக் கொள்ளுமா.? பசியென்ற உணர்வு ஒருவேளை வயிற்றுக்கு மட்டும் இருந்திருந்தால் ஆரம்பித்த இடத்திலேயே உலகம் தொடர்ந்து சுழன்றுக் கொண்டிருந்திருக்குமா.?

உயிர் வாழ அடிப்படையான வயிற்றுப் பசிக்காக ஓடத் தொடங்கிய முதல் மனிதனின் வாழ்க்கை இன்று ஒவ்வொரு புலனின் பசிக்காகவும் பல்கிப் பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது. வயிற்றில் தொடங்கும் பசி உடலெங்கும் ஊடுருவி "உடல் பசி, பொருளாதார பசி, அந்தஸ்து பசி, ஆடம்பர பசி, கௌரவ பசி, காமப் பசி, அதிகார பசி" என்று இன்னும் ஏதேதோ ரூபத்தில் மனிதனைத் துரத்திக் கொண்டிருக்கிறது. ஒரு புலனின் பசி தீர்ந்தால் இன்னொன்று. அதுவும் அடைந்துவிட்டால் மற்றொன்று. இதில் எந்தப் பசியும் இல்லாவிட்டால் புதிதாக ஒரு பசி.

அனைத்துப் பசியையும் தனதாக்கிக் கொண்டு ஒரே ஓட்டமாக உலகம் ஓடுகின்றது. இந்த ஓட்டம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாய் உள்ளது. ஆனால் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். யாரோ என்னைத் துரத்துகிறார்கள் இல்லை இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள் இல்லை ஓட்டத்திலிருந்து தள்ளிவிடுகிறார்கள். நான் இடறி விழுகிறேன். யாரும் என்னைத் தூக்கிவிட வில்லை. நானும் ஓட எழவில்லை. ஆனாலும் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்.

"நான் எதற்காகவும், எந்தப் பசிக்காகவும் ஓடவில்லை என்று என்னை நம்பவைக்க முயல்கிறேன். வாழ்க்கையை அதன் போக்கிலேயே சற்று விலகி நின்று வேடிக்கைப் பார்க்க விரும்புகிறேன். என் வாழ்க்கையில் நானே ஒரு பார்வையாளனாய் பங்கேற்க யத்தனிக்கிறேன்." இவ்வாறெல்லாம் ஓட்டத்தை நிறுத்துவதைப் பற்றி எண்ணியபடியே தினமும் ஓடுகிறேன்.

ஆனால் இந்த ஓட்டத்திலிருந்து விலகி ஒதுங்கவும் முடியவில்லை விரும்பி ஓடவும் முடியவில்லை.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...