Skip to main content

"நில்லுங்கள் ராஜாவே"

சுஜாதாவின் பிரம்மாண்டங்களில் மற்றுமொன்று "நில்லுங்கள் ராஜாவே". முதல் பக்கத்தில் இருந்தே தொடங்கிவிடும் பரபரப்பு, கடைசிப் பக்கம் முடியும் வரையிலும் துளிக்கூட குறைவில்லாமல் கதைக்குள் உள்ளிழுத்துச் சென்று உலாவ விடுகிறது.

ஒரு நினைவுகளை அகற்றி அவனின் ஆழ்மனதை வசப்படுத்தி, அவனுக்குள் வேறொரு மனிதனின் நினைவுகளை புகுத்தி, அதனை அவனின் ஆழ்மனதுக்குள் நன்கு பதிய வைத்து, "நான் இவன் தான்" என்று தன்னைப் பற்றிய நினைவுகளே இல்லாமல், நினைவுகள் புகுத்தப்பட்ட அந்த மனிதனாகவே மாறிவிடும் ஒரு சாமானிய மனிதனின் கதை. நினைத்துப் பார்க்கும் போதே தலைச்சுற்ற வைக்கிற கதையமைப்பு. முதல் பாதியில் நினைவுகள் புகுத்தப்பட்ட அந்த மனிதனைச் சுற்றியே வலம் வரும் கதை, இரண்டாம் பாதியில் அதிர்ச்சியளிக்கும் விதமாக " 'ஆழ்மனதை கட்டுப்படுத்தும் மருத்துவம்' ' புதிதாகக் குடியாட்சி பெற்ற சிலியானா என்ற கம்யூனிச நாடு' மற்றும் 'அமெரிக்காவின் சி.ஐ.ஏ' " என்று பரந்து விரிகிறது.

ஏற்கனவே இருக்கும் "ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், ரத்தம் ஒரே நிறம், பிரிவோம் சந்திப்போம்" என்று நீளும் சுஜாதாவின் புத்தகப் பட்டியலில் இன்று இன்னொன்று. இந்த நிமிடம் சுஜாதாவின் அனைத்துப் புத்தகங்களையும் அறையில் நிரப்பிவிட வேண்டும் என்றுத் தோன்றுகிறது.

பரபரப்புக்கு பஞ்சமில்லாத சுவாரசியமான நாவல் இந்த "நில்லுங்கள் ராஜாவே".

கார்த்திக் பிரகாசம்...


Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...